நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 15
சனிக்கிழமை
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை..
ஏர்க்கால் எனும் உழவின் ஆதாரத்தைக் கொண்டு தான் அதனை முன்னாக வைத்து அதன் பின்னால் சுழன்று கொண்டிருக்கின்றது உலகம் -
என்று, திருவள்ளுவர் வடித்திருக்கின்றார்..
இதையே
புவி தனது அச்சில் சுழல்கின்றது என்பதைக் கணக்கியலுடன் கூறியவர் ஆர்ய பட்டர்..
ஆர்ய பட்டர் -
நமது நாட்டின் ஞானி.. இவரது காலம் கிபி 476 – 550 என்று அறியப்பட்டுள்ளது..
ஆர்ய பட்டர் -
வானியலில் தள முக்கோண இயலைப் பயன்படுத்தி
சூரிய, நிலவு மறைப்புகளைக் கணக்கிட்டார். விண்மீன்கள் மேற்கே நகர்வது போலத் தோன்றுவதற்கு - புவி தனது அச்சில் சுழல்வது தான் காரணம் என்பதையும் நிலவும் பிற கோள்களும் ஒளிர்வதற்கு சூரிய ஒளியின் எதிரொளிப்பு தான் காரணம் என்பதையும் விவரித்துள்ளார் - என விக்கி கூறுகின்றது..
பாரத நாட்டின் வானியலாளர் ஆரிய பட்டரின் நினைவாக ஆரிய பட்டா எனும் - நமது முதல் செயற்கைக் கோள் 1975 ஏப்ரல் 19 அன்று ரஷ்யாவின் ஏவுகணை தளத்தில் இருந்து ஏவப்பட்டது..
படங்கள் நன்றி விக்கி..
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மாணிக்கவாசகர் -
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரைய
என்று
இன்றைய நவீன விஞ்ஞானம் சொல்கின்ற விண்ணியல்
நுட்பங்களைத் திரு அண்டப் பகுதியில் கூறுகின்றார்..
ஆரிய பட்டா எனும் - நமது செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்ட பிறகே அவரைப் பற்றி சாதாரண மக்கள் அனைவருக்கும் தெரிய வந்தது.. காரணம் நமது கல்விமுறை...
ஆனாலும் எல்லா தொழில் நுட்ப சாதனங்களும் வெளி நாட்டில் கண்டுபிடித்திருக்க -
இங்கே கண்டுபிடிக்கப்பட்டவை இட்லி தோசை சட்னி சாம்பார் தான்.. என்ற ஏளன காணொளி ஒன்றை சமீபத்தில் கண்டேன்.. அதை இங்கே பதிவிட விருப்பம் இல்லை.. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பியுள்ளேன்..
உலகம் சுழல்கின்றது என்று திருவள்ளுவர் உரைத்திருக்க அவரைத் தொடந்து ஆரியபட்டரும் மாணிக்கவாசகரும் வருகின்றனர்..
நிலைமை இப்படி இருக்க -
மேலை நாட்டு கலிலியோவின் சூரிய மைய ஆய்வின் படி சூரியனை மையமாகக் கொண்டு புவியும் மற்ற கிரகங்களும் சுற்றுகின்றன என்பதை அங்கே இருந்த சமய நம்பிக்கையாளர்கள் ஒத்துக் கொள்ளவில்லை..
சமய நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மையை மக்களிடையே வெளிப்படுத்தியமைக்காக வீட்டுக் காவலில்
வைக்கப்பட்டு 1642 ல் இறந்தார் எனவும் விக்கி சொல்கின்றது..
அங்கே சமய நம்பிக்கையாளர்கள்
ஒத்துக் கொள்ள வில்லை...
இங்கே உலகம் சுழல்கின்றது என்றவர்களே
சமய நம்பிக்கையாளர்கள் தான்!..
இப்படி இருக்க,
எனக்குள் ஒரு சந்தேகம் -
இட்லி தோசை சட்னி மட்டுமே கண்டு பிடித்த சாம்பார் தேசத்துக்கு வெள்ளையர்கள் ஏன் விழுந்தடித்துக் கொண்டு கப்பல் கப்பலாக வந்தார்கள்?..
இட்லி தோசை சட்னி சாம்பார் மட்டுமே கொண்டிருந்த தேசத்திலிருந்து மூட்டை மூட்டையாய் பொன்னையும் மணியையும் ஏன் அள்ளி மூட்டை கட்டிக் கொண்டு சென்றார்கள்?..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
ஓஹோ... அந்தக் காணொளியை நீங்க்ப்களும் பார்த்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
பதிலளிநீக்கு"இட்லி சாம்பார் சட்னியை வைத்து" (!) சம்பாதித்த பொன்னை மணியை கொள்ளையடிக்கதான் வந்தார்கள்.
காணொளி வந்துச்சா?
நீக்குகீதா
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
சிந்தனை நன்று.
பதிலளிநீக்குகீதா
மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ
சிந்தனை நன்று.
பதிலளிநீக்குகீதா
மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ
இன்றைய சிந்தனை நன்று.
பதிலளிநீக்குநமது திருவள்ளுவர்,ஆரிய பட்டர்,மாணிக்கவாசகர், எல்லோரின் திறமைகளையும் இனம்காட்டிவிட்டீர்கள்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
சிறப்பான பதிவு.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா