நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 31, 2025

தக்காளி சூப்

 

நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 17 
திங்கட்கிழமை


தக்காளி மிளகு சூப்..

தக்காளிப்பழங்கள் இரண்டு
சின்ன வெங்காயம் 3
பூண்டு 3 பல்
மிளகுப் பொடி 1⁄2   tsp  
சீரகப் பொடி 1⁄2   tsp  
சோள மாவு  1⁄2   tsp  
வெண்ணெய் தேவைக்கு 
மல்லித் தழை சிறிதளவு
கல் உப்பு தேவைக்கு

செய்முறை

தனியானதொரு பாத்திரத்தில் தக்காளிப் பழங்களை  போட்டு மூழ்கும் அளவுக்கு கொதி நீரை ஊற்றி
சில நிமிடங்கள் கழித்து -

தோலை உரித்துக் கொள்ளவும்..

வெங்காயம் பூண்டு சுத்தம் செய்து தோல் நீக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி  - தோலுரித்த தக்காளியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை கிண்ணம் ஒன்றில்  தனியாக வைக்கவும்.. 

50 ml தண்ணீரில் சோளமாவைக் கரைத்துக் கொள்ளவும்..

உத்தேசமாக 500 ml 
நீரை அடுப்பில் ஏற்றி அரைத்து வைத்திருக்கின்ற
 தக்காளி விழுதைச் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க  விடவும்.

சோள மாவு கரைத்த
கலவையைக்  கொதிக்கின்ற விழுதுடன் கலக்கவும்.

உப்பு, மிளகு, சீரகப் பொடி சேர்க்கவும்.  வெண்ணெயையும்
சேர்க்கவும்.

நன்கு கொதித்ததும் மல்லித் தழையைக் கிள்ளிப் போட்டு இறக்கி வைக்கவும்..

மூன்று பேருக்கானது இது..

வெதுவெதுப்பான சூட்டில் அருந்தவும்.
மழை குளிருக்கு இதமான தக்காளி  சூப் என்றாலும் எல்லா நாளும் 
உடலுக்கு நலமளிப்பது..

நமது நலம்
நமது கையில்

ஓம் நம சிவாய
**

8 கருத்துகள்:

  1. நானும் அவ்வப்போது இப்படி செய்வதுண்டு. வெண்ணெய் மட்டும் வீட்டில் இருக்காது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. தக்காளி சூப் நல்ல செய்முறை .சூப்பராக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு
  3. நல்ல குறிப்புகள் துரை அண்ணா..
    தக்காளி சூப் செய்வதுண்டு அண்ணா. ஆனால் சோளமாவு கரைத்துச் சேர்ப்பதில்லை.

    திருநீற்றுப் பச்சிலையையும் சேர்த்துச் செய்வதுண்டு. சில நிமிடங்கள் ஆவியில் வைத்தால் தோல் உரிந்துவிடும் இல்லையா? அப்படிச் செய்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் மேலதிக
      விவரமும்
      மகிழ்ச்சி..
      நன்றி சகோ

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஜி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..