நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 15, 2025

தரிசனம் 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி முதல் நாள் 
சனிக்கிழமை

மாசி மக திருவிழாவின் போது கும்பகோணத்தில்  தீர்த்தவாரி தரிசனம்.. 

முற்பகல் பத்து மணியளவில் பிடித்த மழை பத்தரை மணிக்கு ஓய்ந்தது..

மகாமகக் குளத்திற்கு வட கரையிலும் வடபுறச் சாலையிலும் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் குளத்தின் மேல் கரையில் இரு சக்கர வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன..

காவல் துறையினரின் பணி குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது..

கடும் மழையிலும் அவர்களது பணி தொடர்ந்தது நெஞ்சை நெகிழ்த்தியது..






பதினொன்றரை மணியளவில்  பூஜைகள் தொடங்கி உச்சிப் பொழுதில் தீர்த்தவாரி நடைபெற்றது..

அன்பர்கள் சிவ  கோஷங்களுடன் நீராடி மகிழ்ந்தனர்... 

சற்றே தணிந்திருந்த மழை மீண்டும் பிடித்துக் கொண்டது..

காசி விஸ்வநாதர் கோயிலில் அடைக்கலம் ஆகி - ஒரு மணி நேரம் கழித்து - சந்நிதியை வலம் வந்து வணங்கிய பின் பேருந்து நிலையத்திற்குச் சென்று நல்லபடியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்..















தலைப் பாகையோடு போயிற்று என்ற கதையாக - கூட்ட நெரிசலில், தோள் பையில் இருந்த எழுநூறு ரூபாய் களவாடப் பட்டிருந்தது..


குடந்தைக் கீழ்க் கோட்டம்

ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோயில்

இறைவன் ஸ்ரீ நாகேஸ்வரன்
அம்பிகை ஸ்ரீ பிரஹந்நாயகி

ஏவியிடர்க் கடலிடைப்பட்டு இளைக்கின் றேனை
இப்பிறவி யறுத்து ஏற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்தும் உருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே.. 6/75/10 
-: திருநாவுக்கரசர் :-
**

குடந்தை
ஸ்ரீ சார்ங்கபாணி தெப்பம்

காணொளி வழங்கியவர்
துரை மனோகரன்
கும்பகோணம்


ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வெள்ளி, மார்ச் 14, 2025

தரிசனம் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
 மாசி 30
வெள்ளிக்கிழமை

குடமூக்கு எனவும் குடந்தை எனவும்
வழங்கப்பட்ட கும்பகோணத்திற்கு
மாசி மக நாளில்
சென்றோம்..

குடந்தை நகருக்குள் நுழைந்ததுமே கடும் மழை..

முதல் நாள் பெய்த மழை நீர் தேங்கிக் கிடக்க - அதனுடன் அப்போதைய மழை நீரும் சேர்ந்து கொண்டது..

சாலையோர வடிகால்கள் அடைக்கப்பட்டு விட்டதால்  நீர் அழுக்காகி ஆங்காஙகே தேங்கி நின்றது சிறப்பு..

மழையோடு மழையாக எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..

எதிரே
ஸ்ரீ சார்ங்கபாணி ஆலய கோபுரம்


ஸ்ரீ சோமேஸ்வரர் கோயிலில்



















அடுத்த பதிவிலும்
படங்கள் தொடர்கின்றன..

குடந்தைக் காரோணம்
சோமேஸ்வரர் கோயில்

இறைவன் ஸ்ரீ சோமேஸ்வரர்
அம்பிகை ஸ்ரீ சோமசுந்தரி

வாரார் கொங்கை மாதோர் 
  பாக மாக வார்சடை
நீரார் கங்கை திங்கள் 
  சூடி நெற்றி யொற்றைக்கண்
கூரார் மழுவொன் றேந்தி 
  அந்தண் குழகன் குடமூக்கில்
காரார் கண்டத் தெண் தோள் 
  எந்தை காரோ ணத்தாரே.. 1/72/1
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வியாழன், மார்ச் 13, 2025

சிந்தனைக்கு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 29 
 வியாழக்கிழமை

நமது
சிந்தனைக்கு 










படங்களுக்கு
 நன்றி : Fb

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**