நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 31, 2022

மலர் 16

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 16
  சனிக்கிழமை.

தமிழமுதம்
இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.. 100
*
திவ்யதேச தரிசனம்
திரு கண்ணமங்கை

ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள்
ஸ்ரீ அபிஷேகவல்லி நாச்சியார்

தர்சன புஷ்கரிணி
உத்பல விமானம்

நின்ற திருக்கோலம் 
கிழக்கே திருமுக மண்டலம்.

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
14 பாசுரங்கள்
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவைபாசுரம் 16


 நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.. 16
*
திவ்யதேசத்  திருப்பாசுரம்

ஸ்ரீ பக்தவச்சல பெருமாள்
பண்ணினை பண்ணில் நின்றதோர் பான்மையை பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின்ஒளி தன்னை
மண்ணினை மலையை அலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள்
கண்ணினை  கண்கள் ஆரளவும் நின்று கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.. 1646
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திரு நணா
(பவானி)




காவிரி, பவானி, அமுதநதி கூடுதுறை


ஸ்ரீ சங்கமேஸ்வரர்
ஸ்ரீ வேதநாயகி

இலந்தை மரம்
காவிரி, பவானி.


திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
*

தேவாரம்
வில்லார் வரையாக மாநாக நாணாக வேடங்கொண்டு
புல்லார் புரமூன்று எரித்தார்க்கு இடம் போலும் புலியுமானும்
அல்லாத சாதிகளும் அங்கழல் மேற் கைகூப்ப அடியார்கூடிச்
செல்லா வருநெறிக்கே செல்ல அருள்புரியுந் திருநணாவே.. 2/72/6
-: திருஞானசம்பந்தர் :-
*

திருவாசகம்
திருவெம்பாவை


 அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.. 7

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.. 8
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வெள்ளி, டிசம்பர் 30, 2022

மலர் 15

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 15
   வெள்ளிக்கிழமை.

தமிழமுதம்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.. 96
*
திவ்யதேச தரிசனம்
திருச்சேறை

ஸ்ரீ சாரநாதப்பெருமாள்
ஸ்ரீ சாரநாயகி

தீர்த்தம் ஸாரபுஷ்கரணி

நின்ற திருக்கோலம்
கிழக்கே திருமுக மண்டலம்.
ஸார விமானம்.

மங்களாசாசனம்
திருமங்கை ஆழ்வார்
13 பாசுரங்கள்
(நன்றி: காமகோடி. org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 15


எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.. 488
*
திவ்யதேசத் திருப்பாசுரம்

ஸ்ரீ சாரநாதப் பெருமாள்
  பண்டு ஏனமாய் உலகை அன்றிடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணையிலேன் சொல்லுகின்றேன்
வண்டேந்தும் மலர்ப் புறவின் வண்சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண்ணிணையும் களிக்குமாறே..1583
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)

சிவதரிசனம்

திருத்தலம்
திரு ஆனைக்கா

பஞ்சபூதங்களில் நீருக்கான தலம். 
கருவறையில் எப்போதும் நீர்
சூழ்ந்திருக்கும்..


ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

நாவல்
காவிரி, இந்திர தீர்த்தம்


ஆனையும் சிலந்தியும் அம்பிகையும் வழிபட்ட திருத்தலம்.


அம்பிகை தண்ணீரால் லிங்கம் அமைத்து
ஈசனை வழிபட்டு வேத உபதேசம் பெற்ற தலம்.

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
*

தேவாரம்


வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும் ஏதம் இல்லையே.. 3/53/1
-: திருஞானசம்பந்தர் :-
*
திருவாசகம்
திருவெம்பாவை


மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க பேசிப்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்.. 5

மானேநீ நென்னலை நாளைவந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.. 6
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், டிசம்பர் 29, 2022

மலர் 14

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 14
  வியாழக்கிழமை.

தமிழமுதம்
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
மிச்சில் மிசைவான் புலம்.. 85
*
திவ்யதேச தரிசனம்
திருநறையூர்
 (நாச்சியார்கோயில்)

ஸ்ரீ நறையூர் நம்பி 
ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்

மணிமுக்தா,
ஸாம்ப தீர்த்தம்.

கல் கருடன் எனும்
சிறப்புடைய தலம்.

கல்யாண திருக்கோலம் 
கிழக்கே திருமுக மண்டலம்.
ஹேம விமானம்

மங்களாசாசனம்
திருமங்கை ஆழ்வார் 
110 பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி. org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 14 


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்..487
*

திவ்யதேச திருப்பாசுரம்

கல் கருட வாகனத்தில் நம்பி
உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றானூர்
பொறியார் மஞ்ஞை பூம் பொழில்தோறும் நடமாட
நறு நாள்மலர்மேல்  வண்டிசை பாடும் நறையூரே. . 1491
-: திருமஙகையாழ்வார் :-
(நன்றி : நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திருகற்குடி
( உய்யக்கொண்டான்)

மார்க்கண்டேயர் வழிபட்ட திருத்தலம்


ஸ்ரீ உச்சிநாதர்
ஸ்ரீ அஞ்சனாட்சி

வில்வம்
ஞானவாவி

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
*

தேவாரம்
நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத்
தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போரக லந்தரு வேடர் புனத்திடை இட்ட விறகில்
காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே.. 1/43/3
-: திருஞானசம்பந்தர் :-
*

திருவாசகம்
திருவெம்பாவை


முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.. 3

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.. 4
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

புதன், டிசம்பர் 28, 2022

மலர் 13

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 13
   புதன் கிழமை.

தமிழமுதம்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.. 81
*
திவ்யதேச தரிசனம்
திருவிண்ணகர்

ஸ்ரீ ஒப்பிலியப்ப ஸ்வாமி
ஸ்ரீ நிலமாமகள் நாச்சியார்

வகுளம்
அஹோராத்ர புஷ்கரணி

கிழக்கு நோக்கி
நின்ற திருக்கோலம்.
சுத்தானந்த விமானம்

மங்களாசாசனம்
பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், 
நம்மாழ்வார்..
47 பாசுரங்கள்
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 13


புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.. 486
*
திவ்யதேச திருப்பாசுரம்

ஸ்ரீ ஒப்பிலியப்ப ஸ்வாமி
போதார் தாமரையாள்  புலவி குல வானவர்தம் 
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூமொழியாய் சுடர்போல் என் மனத்திருந்த 
வேதா நின்னடைந்தேன்  திருவிண்ணகர் மேயவனே.. 1466
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திரு சிராப்பள்ளி

பேறு காலத்தில் ஆதரவற்று இருந்த பெண்ணுக்கு இறைவன் தாயாக வந்தருளிய தலம்.


ஸ்ரீ தாயுமான ஸ்வாமி
ஸ்ரீ மட்டுவார்குழலி

வில்வம்
பிரம்ம தீர்த்தம்

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
*

தேவாரம்
நன்றுடையானைத் தீயதிலானை
நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம்
உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச்
சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளங்
குளிரும்மே.. 1/98/1
-: திருஞானசம்பந்தர்:-
*

திருவாசகம்
திருவெம்பாவை


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.. 1

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.. 2
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், டிசம்பர் 27, 2022

மலர் 12

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 12
 செவ்வாய்க்கிழமை.

தமிழமுதம்
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.. 77
*
திவ்யதேச தரிசனம்
திருக்குடந்தை

ஸ்ரீ சார்ங்கபாணி ஸ்வாமி
ஸ்ரீ கோமளவல்லி நாச்சியார்

புன்னை மரம்
பொற்றாமரைக் குளம்.

உத்தான சயனம் - என கிழக்கு நோக்கி 
பாம்பணையின் மீது பள்ளி கொண்ட 
திருக்கோலம். 
வைதீக விமானம்.

மங்களாசாசனம்
பூதத்தாழ்வார், பேயாழ்வார், 
திருமழிசையாழ்வார், 
நம்மாழ்வார், பெரியாழ்வார்,
 ஸ்ரீஆண்டாள், திருமங்கையாழ்வார் -
 என, ஏழு ஆழ்வார்கள்.
 51 பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை
பாசுரம் 12


கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.. 485
*
திவ்யதேசத் திருப்பாசுரம்


வந்தாய் என்மனத்தே  வந்துநீ புகுந்தபின்னை
எந்தாய் போயறியாய்  இதுவே அமையாதோ
கொந்தார் பைம்பொழில்சூழ்  குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா உன்னைஎன்றும்  மறவாமை பெற்றேனே.. 1732
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திருப்பூந்துருத்தி

திருநாவுக்கரசர்
திருமடம் 
அமைத்திருந்த தலம்..


ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர்
ஸ்ரீ சௌந்தரநாயகி

வில்வம், ஆல்
காசி தீர்த்தம், காவிரி.

திருப்பதிகம் அருளியோர்
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
*

தேவாரம்
அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவரிய
செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினைச் சென்றடைந் தேனுடைய
புந்தியைப் புக்க அறிவினைப் பூந்துருத்தி உறையும்
நந்தியை நங்கள்பி ரான் தனை நானடி போற்றுவதே.. 4/88/9
-: திருநாவுக்கரசர் :-
*

திருவாசகம்
திரு கோத்தும்பி
 

கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.. 8/10/4
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், டிசம்பர் 26, 2022

மலர் 11

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 11
  திங்கட்கிழமை

தமிழமுதம்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு.. 72
*
திவ்யதேச தரிசனம்
திருஆதனூர்
 
ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் 
ஸ்ரீரங்கநாயகி

பாடலி மரம்
சூர்ய புஷ்கரணி

கிழக்கு நோக்கி 
புஜங்க சயனம்
பிரணவ விமானம்

மங்களாசாசனம்
திருமங்கை ஆழ்வார்
ஒரு பாசுரம்
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை
பாசுரம் 11


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.. 484
*
திவ்யதேசத் திருப்பாசுரம்


முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டுஅளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல்
மன்னும் மறைநான்கும் ஆனானை..
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திரு ஐயாறு

காசிக்கு நிகரான தலங்களில் ஒன்று.


ஸ்ரீ ஐயாறப்பர்
ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி

தலவிருட்சம் வில்வம்
காவிரி, சூரிய புஷ்கரணி

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
*

தேவாரம்


ஓசை ஒலியெலாம்  ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம்  ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-
*
திருவாசகம்
 திரு கோத்தும்பி


பூவேறு கோனும்
புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும்
நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும்
வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.. 8/10/1
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*

நேற்று காலையில்
தஞ்சை யாளி நகர்
ஸ்ரீ வீர நரசிங்கப் பெருமாளுக்கும் தேவியருக்கும் புதியதாகத் தங்கக் கவசம் சாற்றப்பட்டு
ஏக தின லட்சார்ச்சனையும்
மாலையில் திருக்கல்யாண வைபவமும் நிகழ்ந்தது.









ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, டிசம்பர் 25, 2022

மலர் 10

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 10
   ஞாயிற்றுக்கிழமை.

தமிழமுதம்
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.. 68
*
திவ்யதேச தரிசனம்
திருபுள்ளபூதங்குடி

ஸ்ரீ வல்வில் ராமன் 
ஸ்ரீ பொற்றாமரையாள்

தலவிருட்சம் புன்னை மரம்
ஜடாயு தீர்த்தம்

கிழக்கே திருமுக மண்டலம்.
புஜங்கசயனம்.
சோபன விமானம்

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 
10 பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 10


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.. 483
*
திவ்யதேசத் திருப்பாசுரம்


மையார் தடங்கண் கருங் கூந்தல் 
ஆய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த
நேமி அங்கை மாயன் இடம்
செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் 
நாரை சென்றணையும்
பொய்யா நாவின் மறையாளர் 
புள்ளம்பூதங்குடிதானே..1352
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**
சிவதரிசனம்

திருத்தலம்
திருப்பழனம்


ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர்
பெரிய நாயகி

தலவிருட்சம் வாழை
வில்வம்
தீர்த்தம் காவிரி

குபேரன் வணங்கிய திருத்தலம்.

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
*

தேவாரம்
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே
உள்ளூறும் அன்பர் மனத்தார் தாமே
பேராதென் சிந்தை இருந்தார் தாமே
பிறர்க்கென்றுங் காட்சிக்கு அரியார் தாமே
ஊராரு மூவுலகத்து உள்ளார் தாமே
உலகை நடுங்காமற் காப்பார் தாமே
பாரார் முழவத்து இடையார் தாமே
பழனநகர் எம்பிரானார் தாமே.. 6/36/8
-: திருநாவுக்கரசர் :-
*
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி
பாடல் 10


புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே.. 377
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
திருப்பள்ளியெழுச்சி இன்றுடன் நிறைவு
பெறுகின்றது..
**

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***