நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருமழபாடியில் பங்குனி புனர்பூசத்தில் நந்திகேசனுக்கும் சுயம்ப்ரகாஷினி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த பின் திரு ஐயாறு சித்திரைத் திருவிழாவில் விசாகத்தை அனுசரித்து நிகழும் ஏழூர் வலம் தான் சப்த ஸ்தானம் எனப்படுவது..
![]() |
நந்தீசனும் தேவியும் |
ஆகையால் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து விளங்கும் பெருவிழா என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்..
ஆயினும், பன்னெடுங்காலமாகவே புகழ் பெற்று விளங்கும் திருத் தலங்கள் இவை என்பதில் ஐயமில்லை..
சப்த ஸ்தானத் தலங்கள் அனைத்துமே பாடல் பெற்றவை எனில் அவற்றின் தொன்மை விளங்கும்..
சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படும் ஏழூர்கள்..
1. திரு ஐயாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர் வீரட்டம்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்
இவற்றுள் திரு ஐயாறு, திருப்பழனம், திருநெய்த்தானம்
ஆகிய மூன்று தலங்களும் காவிரியின் வடகரைத் தலங்கள்.. ஏனையவை காவிரியின் தென்கரைத் தலங்கள்..
இவை ஏழினையும் ஒருங்கே தரிசித்து திருப்பதிகம் அருளிச் செய்திருப்பவர்
அப்பர் ஸ்வாமிகள்..
திரு ஐயாற்றில் இருந்து ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி பல்லக்குடன் நந்தீசன் பல்லக்கும் புறப்படும் போது இரண்டு..
திருப்பழனத்திற்கு வந்து அங்கிருந்து புறப்படும் போது மூன்று பல்லக்குகள்..
அவை காவிரி, குடமுருட்டி ஆறுகளைக் கடந்து திருச்சோற்றுத் துறைக்கு வந்ததும் அங்கிருந்து நான்கு..
அவை திருவேதிகுடிக்கு வந்ததும் அங்கிருந்து ஐந்து..
திருக்கண்டியூரில் இருந்து புறப்படும் போது ஆறு..
திருப்பூந்துருத்தியில் இருந்து புறப்படும் போது ஏழு..
பல்லக்குகள் ஏழும் குடமுருட்டி மற்றும் காவிரி ஆறுகளைக் கடந்து திருநெய்த்தானத்தை வந்தடைந்து அங்கிருந்து புறப்படும்போது எட்டு..
நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம்
ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யங்களைத் தந்தருள வேண்டும் - என்று பிரார்த்தித்துக் கொள்வோம்..
![]() |
இன்னும் பத்து நாட்களில் காவிரியில் நீரோடும்.. |
ஓம்
பறையும்பழி பாவம்படு
துயரம் பலதீரும்
பிறையும்புன லரவும்படு
சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி
அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில்
நெய்த்தானம் எனீரே.. 1/15/2
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***