நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 31, 2019

மார்கழி தரிசனம் 15

தமிழமுதம்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை..(1031) 
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 15


எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீபோதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண் ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்

ஸ்ரீ சௌந்தரராஜப்பெருமாள்
நாகப்பட்டினம்  
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான் எனப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொருநாள்
மாவாய்ப் பிளந்த மகன்..(2209)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
புள்ளிருக்கு வேளூர் - வைத்தீஸ்வரன்கோயில்

ஸ்ரீ ராமபிரான் வழிபட்ட திருத்தலம்..
ஜடாயு உய்வடைந்த திருத்தலம்.. 

ஸ்ரீ வைத்தீஸ்வர ஸ்வாமி 
ஸ்ரீ தையல் நாயகி அம்பிகை 
ஸ்ரீ செல்வ முத்துக்குமரன் 
பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாழ்நாளது உடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.. (2/43)
-: திருஞானசம்பந்தர் :-


பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் ஆகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப் 
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.. (6/54)
-: அப்பர் ஸ்வாமிகள் :-
***

திருவாசகத் தேன்


பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ..
***

தேவி தரிசனம்

ஸ்ரீ தையல் நாயகி 
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்அடியாரை ,மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சை உண்டு
கறுக்கும் மிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே!..(46) 
-: அபிராமிபட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், டிசம்பர் 30, 2019

மார்கழி தரிசனம் 14

தமிழமுதம்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு..(081)
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்
ஸ்ரீ லக்ஷ்மி வராகர் - திருக்குடந்தை 
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசையளந்த செங்கண்மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி..(2102)

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திரு பிரமபுரம் - சீர்காழி
ஸ்ரீ தோணியப்பர் - பெரிய நாயகி - சீர்காழி 
ஸ்ரீ சட்டை நாதர்

எம்பிரான் எனக்கமுதம் ஆவானும் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும் தழலேந்து கையானும்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக் கண்டன்
வம்புலாம் பொழிற் பிரமபுரத் துறையும் வானவனே..(2/40)
-: திருஞானசம்பந்தர் :-
***
திருவாசகத் தேன்


சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவும் ஆகிய மூவர் அறியாச்
சிந்துரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவுவாய்.. 
***

தேவி தரிசனம்


வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புதுநஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே.. (46)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

ஞாயிறு, டிசம்பர் 29, 2019

மார்கழி தரிசனம் 13

தமிழமுதம்

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு..(396)
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 13


புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்த்துக் கலந்தேலோர் எம்பாவாய்!..

உதயத்திற்கு முன்பு பிரகாசமாக விடிவெள்ளி
விடிவெள்ளி எனப்படும் வெள்ளி (Venus) விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே வானில் தோன்றிவிடும்..
இவ்வேளையில் சூரியனுக்கு நேர் எதிரே வியாழன் (Jupiter) மறையும்..

இந்நிகழ்வு மார்கழியில் சமச்சீராக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்..

இதையே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் 
திருப்பாடலில் குறித்தருள்கின்றனள்.. 
***

ஆழ்வார் அமுதம்
ஸ்ரீ ஆமருவியப்பன் - தேரழுந்தூர் 
தாழ்ந்து வரங்கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தரிக் கொண்ட அவன்.. (2204)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திருவெண்காடு

ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர் - திருவெண்காடு 

ஸ்ரீ பிரம்ம வித்யா நாயகி 
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
விண்ணமர் பொழில்கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே!.. (3/15)
-: திருஞானசம்பந்தர் :-
***

திருவாசகத் தேன்

ஸ்ரீ அகோரமூர்த்தி - திருவெண்காடு 
நீல உருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவும்
கோல அழகிற் றிகழும் கொடிமங்கை உள்ளுறைக் கோயில்
சீலம் பெரிதும் இனியதிரு உத்தர கோசமங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயகனை வரக்கூவுவாய்!..
***

மார்கழிப் பதிவுகளைத் தொகுக்கின்றபோது
திருவெண்காடு திருத்தலமும்
ஸ்ரீ அகோரமூர்த்தி தரிசனமும்
தன்னிச்சையாய் அமைந்திருக்கின்றன...


ஸ்ரீ அகோரமூர்த்தி ஸ்வாமியைத் தரிசிக்க
ஞாயிற்றுக் கிழமை உகந்தநாள் என்பர்...

ஸ்ரீ அகோர மூர்த்தி வழிபாட்டினால் அன்பு தழைக்கும்..
ஆரோக்யம் பெருகும்... பெரும்பிணி பகை விலகும் 

நாட்டைச் சூழ்ந்துள்ள பெரும்பகை அகல
ஸ்ரீ அகோர மூர்த்தி ஸ்வாமியைத் தொழுவோம்..

தேவி தரிசனம்
ஸ்ரீஅஷ்டபுஜ காளீஸ்வரி - திருவெண்காடு 
பரிபுரச் சீரடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே..(043)
-: அபிராமிபட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

சனி, டிசம்பர் 28, 2019

மார்கழி தரிசனம் 12

தமிழமுதம்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவற்றுள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து..(125)
***

அருளமுதம்

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 12


கனைத்து கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்
ஸ்ரீ வானமுட்டிப்பெருமாள் - கோழிகுத்தி - மயிலாடுதுறை   
கொண்டது உலகம் குறளுருவாய்க் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக் கண் மாலொருநாள்
வான்கடந்தான் செய்த வழக்கு.. (2199)
-: பூதத்தாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம்
***

சிவதரிசனம்
திருக்கடவூர்
ஸ்ரீ கால சம்ஹார மூர்த்தி - ஸ்ரீ பாலாம்பிகை 
போராருங் கரியின் உரிபோர்த்துப் பொன்மேனியின் மேல்
வாராரும் முலையாள் ஒரு பாகம் மகிழ்ந்தவனே
காராரும் மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்து
ஆராஎன் அமுதே எனக்கார் துணை நீயலதே..(7/28)
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-

ஸ்ரீ அபிராமவல்லி அம்பிகை 
அபிராமவல்லியின் மீது மாசற்ற அன்பு கொண்டு
திருக்கோயிலில் பணி செய்து வாழ்ந்த
சுப்ரமணிய குருக்களின் பொருட்டு
தை அமாவாசை இரவு வானில் 
நிலவு எழுந்த திருத்தலம்..

மேற்கு நோக்கி விளங்கும் திருக்கோயில்..
எத்தனையோ அற்புதங்களைத் 
தன்னகத்தே கொண்டிருக்கின்றது..
***

திருவாசகத் தேன்


குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை என்னிரக்கேனே..
-: மாணிக்கவாசகர் :- 
***

தேவி தரிசனம்
ஸ்ரீ பூங்குவளைக் கண்ணி 
புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கேவந்து தம்மடியார்கள் நடுவிருக்கப் பண்ணிநம்
சென்னியின்மேல் பத்ம பாதம் பதித்திடவே.. (041)
-: அபிராமிபட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம
* * *