நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 31, 2020

அளந்தான் அடி போற்றி..


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
திரு ஓணம்..

அனைவருக்கும்
ஓணத் திருநாள் நல்வாழ்த்துகள்..
 

இறையெம் பெருமான் அருளென்று இமையோர்
முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ அறைகழல
சேவடியான் செங்கண் நெடியான் குறலுருவாய்
மாவடிவில் மண்கொண்டான் மால்.. (2280)
-: ஸ்ரீ பூதத்தாழ்வார் :-


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும்  நின் கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர்
எம்பாவாய்... (24)
-: ஸ்ரீ சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் :-


அறிந்தறிந்து வாமனன டியணைவ ணங்கினால்
செறிந்தெழுந்த ஞானமோடு செல்வமும் சி றந்திடும்
மறிந்தெழுந்த தெண்டிரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே.. (825)
-: திருமழிசையாழ்வார் :-



மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா அயதெல்லாம் ஒருங்கு..
-: திருக்குறள் :-

அன்பின்
நல்வாழ்த்துகள்..

ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2020

அம்மன் தரிசனம் 2



நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆவணி மாதத்தின்
இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை..


ஆயி மகமாயி ஆயிரங் கண்ணுடையாள்
நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையாள்..

சமயபுரத்தாளே
சாம்பிராணி வாசகியே
சமயபுரத்தில் நின்று
சந்ததமும் பாருமம்மா!...

வெள்ளிப் பிரம்பெடுத்து
வீதி வழி வாருமம்மா...
பிள்ளையென மனம் படைத்த
நல்லவரைப் பாருமம்மா!..


துன்பங்கள் சூழ்கையிலே
ஓடிவந்து தீருமம்மா!..
நோய்நொடி தீர்த்து எங்கள்
நெஞ்சத்திலே வாழுமம்மா!..

தீர்த்தம் கொடுப்பவளே எங்கள்
தீவினையை ஓட்டுமம்மா..
திருநீறு அளிப்பவளே நல்ல
தீபத்தினை ஏற்றுமம்மா!..

மஞ்சள் தருபவளே
மண் விளங்கச் செய்யுமம்மா!..
குங்குமம் கொடுப்பவளே எங்கள
குலம் விளங்கப் பாருமம்மா!..

குழந்தை வருந்துறது
கோயிலுக்குக் கேக்கலையோ..
மைந்தன் வருந்துறது
மாளிகைக்குக் கேக்கலையோ..


தஞ்சமென்று ஓடி வந்தோம்
தஞ்சை நகர் மாரிமுத்தே..
காலடியைத் தேடி வந்தோம்
பட்டுக்கோட்டை நாடிமுத்தே!..


மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே!..
எங்க ஆயி உமையானவளே
ஆஸ்தான மாரிமுத்தே!..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

சனி, ஆகஸ்ட் 29, 2020

ஸ்ரீ வாமன ஜெயந்தி..



நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
ஆவணி வளர்பிறை துவாதசி..
ஸ்ரீ வாமன ஜெயந்தி..

தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு
காஷ்யப முனிவருக்கும் அதிதிக்கும்
திருக் குமரனாக
ஸ்ரீ ஹரி பரந்தாமன்
திரு அவதாரம் செய்தருளிய நாள்..


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்  பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர்
எம்பாவாய்!.
-: ஸ்ரீ சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் :-


ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2020

அழகின் சிரிப்பு


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
அழகான காணொளி
***

கணேசா!... என்ன தேடிக்கிட்டு இருக்கிறாய்?...

அதான் என்ன...ன்னு தெரியலை!..


வாழ்க நலம்
சூழ்க நலம்..
ஃஃஃ

புதன், ஆகஸ்ட் 26, 2020

நினைவுகள் மலர..


நினைவுகள் மலர
நலமே விளைக...

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
நேற்று ஆவணி இரண்டாம் செவ்வாய்..

திங்கள் செவ்வாய் புதன்
மூன்று நாட்களும்
எங்கள் குல தெய்வம் உறையும்
உவரியில் ஆவணிக் கொடை..

நண்பகலிலும் நள்ளிரவிலும்
சாமி அழைத்தல் நடைபெறும்..

ஊரடங்கு உத்தரவினால்
இந்தத் திருவிழா எப்படி நடைபெறுகின்றது என்பது தெரியவில்லை...


எனினும்
சென்ற ஆண்டின்  சாமி அழைப்பு
இன்றைய பதிவில்...

கீழுள்ள காணொளி
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் அழைப்பு..
இவர் எங்கள் தலைக்கட்டு
அர்ச்சகர் ஆவார்...


ஸ்ரீ பேச்சியம்மன்
 அழைப்பின் காணொளி
உள்ளது.. ஆயினும் நீளம் 
அதிகமானதால் பதிவேற்ற
இயலவில்லை..

வேறொரு சமயத்தில் அதனை
ஒழுங்கு செய்து தருகிறேன்...


குறையெலாம் பொறுத்து
குன்றாத நலம் அருள்க
குல தெய்வமே போற்றி!..
***
ஓம்
சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2020

அம்மன் தரிசனம் 1


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

ஆவணி மாதத்தின் ஞாயிறு எல்லாம்
அம்பிகைக்கு உரியவை..

அதிலும்
மாரி மகமாயித் தாயின்
வழிபாட்டுக்குரியவை..

நல்ல மனங்களுக்கு
நெருக்கமானவள் மகமாயி..
இன்பமோ துன்பமோ
அவளது சந்நிதியே 
நெஞ்சுக்கு நிம்மதி..

வெள்ளந்தியான மக்களுக்கு
அவளது கோயில்
இன்னொரு தாய்வீடு..

அந்த வகையில்
அவளைக் கொண்டாடுவோர்
ஆயிரம் நூறாயிரம்..

இன்றைய பதிவில்
தஞ்சை புன்னைநல்லூர்
ஸ்ரீ முத்துமாரி அம்மனின்
திவ்ய தரிசனம்..



ஆவணிப் பெருந்திருவிழாவினை
முன்னிட்டு சென்ற வாரம்
திருக்கொடியேற்றம்..

உற்சவங்களை கோயிலின் உள்ளேயே
நிகழ்த்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது..
அனைத்தும் அவளது சித்தம்..

கொடியேற்றப் படங்களைத்
தவிர்த்து மற்றவை 
பல்வேறு சந்தர்ப்பங்களில்
எடுக்கப்பட்டவை..




சூலம் கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாக பாசாங்குசம்
மாலங் கயன் அறியாத வடிவுக்கு
மேலங்க மாய் நின்ற மெல்லியலாளே..
-: திருமூலர் :-

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

சனி, ஆகஸ்ட் 22, 2020

ஞான விநாயகன்



நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
அனைவருக்கும் அன்பின் இனிய
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்


கைத்தல நிறைகனி அப்பமொ டவல் பொரி
கப்பிய கரிமுகன் ... அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறபவ
கற்பகம் எனவினை ... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன் மகன்
மற்பொரு திரள்புய ... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர் கொடு ... பணிவேனே..

முத்தமிழ டைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ... முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புனம் அதனிடை ... இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணமருள் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா..
-: ஔவையார் :-

நம்பிக்கு அருள் புரிந்த
நாரையூர் நாயகன்
விநாயகன்..


ஓம் கம் கணபதயே நம:

எல்லா இடர்களையும் நீக்கி அருள்வாய்
விநாயகப் பெருமானே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வியாழன், ஆகஸ்ட் 20, 2020

காவல் நாயகம்

 

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
காணொளி வழியாக
தென் தமிழகத்தின்
காவல் நாயகமாகிய
ஸ்ரீ சங்கிலி பூதத்தார் ஸ்வாமி 
தரிசனம்


திவின் முதலில்  
ஸ்ரீ சங்கிலி பூதத்தார் ஸ்வாமி...

பாபநாசம் தாமிரபரணிக் கரையில்
ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் கோயிலில்
விளங்கும் திருமேனியாகும்..

மேலவாசல் பூதத்தார் என்று
கொண்டாடுகின்றார்கள்..

கோயிலிலும் தனியாக
சங்கிலி பூதத்தார் சந்நிதி உள்ளது...

பூதத்தார் ஸ்வாமியின்
அருகில் இருப்பது
மணி விழுங்கி மரம்...
நேர்ச்சைக்காக கட்டப்படும்
மணிகளை எல்லாம் சிலமாதங்களில்
அந்த மரமே உள்வாங்கிக்
கொள்கிறது...
.....

காணொளியில் 
குமரி மாவட்டத்தில்
பூதப்பாண்டி அருகே கடுக்கரை செல்லும்
வழியில் மலையடிவாரத்தில் உள்ள
ஸ்ரீ சங்கிலி பூதத்தார் தரிசனம்..

சங்கிலி பூதத்தார் ஸ்வாமியின்
வரலாறு சில மாற்றங்களுடன் சொல்லப்படுகின்றது...

ஆயினும்
நம்பி நிற்போர்க்கு
நல்லருள் புரிந்து
நல்வழி காட்டுகின்றார்...

இந்த காணொளிகளை
வலையேற்றியவர்கள்
சிங்கம்பட்டி ஜமீன் மறவர் கூட்டம்
அவர் தமக்கு
நெஞ்சார்ந்த நன்றி..


திருச்செந்தூர்
ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி
திருக்கோயிலின்
காவல் நாயகம் இவரே...

மேல கோபுரத்தின் வடக்குப் புறமாக
பிரம்மாண்ட சுதை வடிவில் 
வண்ணமயமாக விளங்குகின்றார்..

திருச்செந்தூர் கோயிலுக்குச்
செல்லும் போதெல்லாம்
சங்கிலி பூதத்தாரைக்
கைதொழாமல் திரும்புவதே இல்லை..
***

ஸ்ரீ சங்கிலி பூதத்தார் போற்றி.. போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

சனி, ஆகஸ்ட் 15, 2020

வந்தே மாதரம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று
நமது பாரதத் திருநாட்டின்
சுதந்திரத் திருநாள்


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே இதை
வந்தனை கூறி மனதில் இருத்தியென்
வாயுற வாழ்த்தேனோ இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..




பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே..
-: மகாகவி பாரதியார்:-

வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஃஃஃ

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

வெள்ளி மணி 5

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆடி மாதத்தின்
ஐந்தாவது வெள்ளிக்கிழமை

இன்றைய பதிவில்
ஸ்ரீ அபிராம பட்டர் அருளிச் செய்த
அபிராமி திருப்பதிகத்தின்
திருப்பாடல்..


சகல செல்வங்களும் தரும் இமய கிரிராஜ தனயை மாதேவி நின்னைச்
சத்யமாய் நித்யம் உள்ளத்தில் துதிக்கும்
உத்தமருக்கு இரங்கி மிகவும்

அகிலமதில் நோயின்மை கல்வி தன தானியம் அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள்
வெற்றி ஆகுநல் ஊழ் நுகர்ச்சி


தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வளிப்பாய் சுகிர்த குணசாலி பரிபாலி அநுகூலி திரிசூலி
மங்கள விசாலி

மகவு நான் நீதாய் அளிக்கொணாதோ
மகிமை திருக்கடவூரில் வாழ் வாமி
சுபநேமி புகழ் நாமி சிவசாமி மகிழ் வாமி
அபிராமி உமையே..



ஓம் காத்யாயனாய வித்மஹே 
கன்ய குமாரி தீமஹி
தந்நோ துர்கே ப்ரசோதயாத்:


அம்பிகே பரமேஸ்வரி..
நல்லருள் புரிக.. என் தாயே!..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

வியாழன், ஆகஸ்ட் 13, 2020

கோகுலம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
அழகான காணொளி ஒன்று...

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா
2017 ல் குருவாயூரில் நிகழ்ந்ததாகும்

இந்தக் காணொளி அப்போதே
என்னிடம் இருந்தது..
எப்படியோ தவறி விட்டது..

சென்ற வருடம் இதையே
எனது மைத்துனர் அனுப்பி
வைத்திருந்தார்..

இணைய வேகம் இல்லாததால்
பதிவேற்றம் செய்ய இயலவில்லை..

மீண்டும் இந்த வருடம்
கிடைத்துள்ளது..

இனிதே பதிவில்
இணைத்துள்ளேன்..

திகட்டாத கலை நிகழ்ச்சி..
பார்க்கும் போதெல்லாம்
கோகுலத்தில் இருப்பது
போன்ற உணர்வு.. 

தாங்களும்
பார்த்து மகிழுங்கள்...
ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

கிருஷ்ணா.. கிருஷ்ணா..


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஸ்ரீ கோகுலாஷ்டமி


ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மாநகருளானே..
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-


வஸுதேவ ஸுதம் தேவம் கம்ச சானூர மர்த்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

வெள்ளி, ஆகஸ்ட் 07, 2020

வெள்ளி மணி 4

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஆடி மாதத்தின்
நான்காவது வெள்ளிக்கிழமை..
***
இன்றைய பதிவில்
அபிராமி பட்டர் அருளிச் செய்த
திருப்பாடல்கள்
ஸ்ரீ வடபத்ரகாளி - தஞ்சை.. 

கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன்னிரு பாதாம் புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான்முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே..

ஸ்ரீ பகளாமுகி அம்மன் - தஞ்சை..

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் 
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர்  தெய்வம் வந்திப்பதே..

நாயகி நான்முகி நாரயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு 
வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரன் நமக்கே..
***
சிக்கல்
ஸ்ரீ பத்ர காளியம்மன்
திருநடனக் காட்சி


நலமெலாம் தருவாய்
தாயே பராசக்தி..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

புதன், ஆகஸ்ட் 05, 2020

ஸ்ரீ ராம் ஜெயராம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***


ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்




ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்



ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்

 

  



ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்



 


ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்






ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்










ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெயராம்..
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெயராம்..



  



ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்



ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்



ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்


இன்று
ஸ்ரீராம ஜன்ம பூமியில்
ஸ்ரீ ராமபிரானின் திருக்கோயிலுக்கு
அடிக்கல் நாட்டப்படுகின்றது..

சடங்குகளும் சம்பிரதாயங்களும்
நாம்  மேலேறுவதற்கான
ஏணிப்படிகள் மட்டுமே..

ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியின்
திருவடித் தாமரைகளை
நெஞ்சில் நிலை நாட்டுவதே
உய்வதற்கான வழியாகும்..
***
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஃஃஃ