நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
திருவேங்கடம்
தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன ... தனதான
கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்
வாங்கிய வேல்விழியும் ... இருள்கூருங்
கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்
மாந்தளிர் போல்வடிவும் ... மிகநாடிப்
பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு
தீங்குட னேயுழலும் ... உயிர்வாழ்வு
பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில்
வீழ்ந்தலை யாமலருள் ... புரிவாயே
பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும்
வேங்கையு மாய்மறமி ... னுடன்வாழ்வாய்
பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக
பாண்டிய னீறணிய ... மொழிவோனே
வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர்
வேங்கட மாமலையி ... லுறைவோனே
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்டவெ றாதுதவு ... பெருமாளே..
-: அருணகிரி நாதர் :-
நன்றி கௌமாரம்
முருகா முருகா
முருகா முருகா
***
