நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி
வெள்ளிக்கிழமை
![]() |
| திருமறைக்காட்டு மணாளன் |
திருமறைக்காட்டில்
திருநாவுக்கரசரால் திறப்பிக்கப்பட்ட
திருக்கோயிற் கதவங்கள் அடைத்துக் கொள்ளுமாறு
ஞானசம்பந்தப் பெருமான்
பாடியருளிய திருப்பதிகத்தின் முதல் பாடல்
சதுரம் மறைதான்
துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ்
மறைக்காட்டுறை மைந்தா
இதுநன்கு இறைவைத்
தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக்
கொள்ளுங் கருத்தாலே... 2/ 37/1
தேன் மலர்கள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்திருக்கும் திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்கும்படிக்கு வீற்றிருக்கும் பெருமானே!..
உனது திருக்கோயிலின் கதவுகள் முன்னிருந்தவாறே திருக்காப்பு கொள்ளும்படி வினவிய எனக்கு நல்ல வண்ணம் விடை அருள்வாயாக..
நன்றி
பன்னிரு திருமுறை
ஓம் நம சிவாய
***
