நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி 32
திங்கள் கிழமை
ஆடி அமாவாசையன்று
திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில்
அப்பர் தரிசனக் காட்சி திருவுலா
நடைபெற்றது..
நன்றி
சிவனடியார் திருக்கூட்டம்
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற்சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-
ஓம் சிவாய நம
***





