நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2026

கொடை விழா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 13
ஞாயிற்றுக்கிழமை
 

நிகழும் ஆவணி மாதத்தின் இரண்டாம்  செவ்வாய்  ( 25/ ஆகஸ்ட் ) அன்று - 
திருச்செந்தூரில் இருந்து நாற்பது கிமீ தொலைவில் அமைந்துள்ள உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில் எங்கள் குல தெய்வத்தின்  வருடாந்திரக் கொடை விழா நடைபெற உள்ளது...

இறையருள் துணை கொண்டு இன்று காலை நாங்கள் உவரிக்குச் செல்கின்றோம்...

இவ்வேளையில் பதிவுலகத்தில்  -
 அன்பின் ஜீவி அண்ணா, ஸ்ரீராம், நெல்லைத் தமிழன், கௌதம் ஜி, வெங்கட் நாகராஜ், சந்திரசேகர், ஏகாந்தன், வல்லியம்மா, கீதாக்கா, கீதாரங்கன், கோமதி அரசு. பானுமதி வெங்கடேஸ்வரன், கமலா ஹரிஹரன், மாதேவி -

ஆகிய அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்...

திருவிழா நேரம்... மின்சக்தி கொள்கலன் எதையும் உடன் எடுத்துச் செல்லவில்லை... 

ஒளிப்படங்கள் எடுப்பதற்கு  கைத்தலப்பேசி எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றதோ பார்ப்போம்...

நலம் வாழ்க
***