நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 15, 2026

திருப்புகழ்

   


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி முதல் நாள்
வெள்ளிக்கிழமை


திருப்புகழ்
பொது

தனத்தத் தானத் ... தனதான 


கருப்பற் றூறிப் ... பிறவாதே
கனக்கப் பாடுற் ... றுழலாதே
திருப்பொற் பாதத் ... தநுபூதி
சிறக்கப் பாலித் ... தருள்வாயே..

பரப்பற் றாருக் ... குரியோனே
பரத்தப் பாலுக் ... கணியோனே
திருக்கைச் சேவற் ... கொடியோனே
செகத்திற் சோதிப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

 நன்றி கௌமாரம்

மீண்டும் பிறக்க வேண்டும் என்ற ஆசையில் நான் மீண்டும் கருவில் ஊறி - பிறக்காமலும்

மிகவும் கஷ்டங்களை அடைந்து  அலைந்து திரியாமலும்

உன் அழகிய திருவடிகளாகிய முக்திப் பேற்றில்

நான் சிறக்கும்படி எனக்கு அருள்வாயாக..

ஆசைப் பெருக்கு
இல்லாதவர்களுக்கு உரிமையானவனே

 மேலானதாய் யாவற்றையும்
கடந்து நிற்கின்ற பொருளுக்கு அருகில் உள்ளவனே
 
திருக்கரத்தில் சேவற்கொடியை
ஏந்தியவனே

இவ்வுலகில் ஜோதி வடிவமாக
விளங்குகின்ற பெருமாளே..
**
நன்றி
முருகன் அடியார்கள்


முருகா முருகா
முருகா முருகா
***