நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி
வெள்ளிக்கிழமை
சுந்தரர் தேவாரம்
தலம்
திருக்கடவூர்
அன்றா லின்னிழற்கீழ்
அறம்நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர்
கொடுத்தாய்மறை யோனுக்குமான்
கன்றாருங் கரவா
கடவூர்த்திரு வீரட்டத்துள்
என் தாதை பெருமான்
எனக்கார்துணை நீயலதே.. 7/28/3
மான் கன்று விளையாடும் திருக்கரத்தினை உடையவனே , திருக்கடவூர்த் திருவீரட்டத்துள் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையாகிய பெருமானே , நீ - அன்று ஆல நிழலின் கீழ் இருந்து முனிவர் நால்வர்க்கு அருள் செய்து , காலனை வீழ்த்தி மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்தாய்.. இத்தன்மை உடைய உன்னையல்லாது வேறு துணை யார் எனக்கு ?...
நன்றி
பன்னிரு திருமுறை
ஓம் நம சிவாய
***
