நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 22, 2026

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 வியாழக்கிழமை

திருப்புகழ்
வள்ளிமலை


தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தானத் ... தனதான

அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
     மல்லல்பட ஆசைக் ... கடலீயும்

அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
     முள்ளவினை யாரத் ... தனமாரும்

இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
     வல்லெருமை மாயச் ... சமனாரும்

எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
     உய்யவொரு நீபொற் ... கழல்தாராய்...

தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
     சொல்லுமுப தேசக் ... குருநாதா

துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
     வெள்ளிவன மீதுற் ... றுறைவோனே

வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
     வல்லைவடி வேலைத் ... தொடுவோனே

வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
     வள்ளிமண வாளப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

 நன்றி
 
 காணொளியில்
அடியார்கள்
 பாடுவதைக் கேட்டு 
அதன் வழி
கௌமாரத்தில் இருந்து பெறப்பட்ட திருப்பாடல்... 

முருகா முருகா 
முருகா முருகா
***