நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
சனிக்கிழமை
தஞ்சையின் வெண்ணாற்றங்கரை திவ்ய தேசங்களில் ஒன்றாக -
மாமணிக் கோயில் எனத் திகழும் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயிலில் அக்ஷய திருதியை வைபவத்தை முன்னிட்டு கருடசேவை நிகழ்ந்தது..
மற்றும் அன்னப் படையல் பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றன..
இத்தலத்தில் ஶ்ரீ நீலமேகப் பெருமாள் கருட வாகனத்தில் ஆண்டாள் சமேதராக பக்தர்களுக்கு காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.
திரளான பக்தர்கள் பெருமாள் தரிசனம் செய்தார்கள்..
படங்களுக்கு நன்றி
ஓம் நமோ நாராயணாய
***

