நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
வைகாசி
வியாழக்கிழமை
நேற்று வெளியாகி இருக்க
வேண்டிய பதிவு..
தொடக்கக் கல்வி பயின்ற காலத்தில் பள்ளியில் நான் கண்ட - ஐயன் திருவள்ளுவரது திரு உருவத்தை இன்று மேம்படுத்தப்ட்ட சித்திரமாகப் பார்க்கின்றதில் மகிழ்ச்சி..
திருவள்ளுவரைப் பின்பற்றுவோர்க்கு
எல்லா நாளும் நல்ல நாட்களே...
அறம் பொருள் இன்பம் வீடு எனும்
ஹிந்து தர்மங்களை உள்ளடக்கிய
திருக்குறளையும்
திருவள்ளுவரையும் நாம் கொண்டாடி வருகின்றோம்..
திருமயிலை அறுபத்து மூவர் உற்சவமே சாட்சி..
திருப்புகழ் பாடல்களில் ஒன்றைக் கற்றிருந்தால் கூட முருகனருள் பெறலாம் என்பார் அருணகிரிநாதர்..
அவ்வண்ணம்
திருக்குறளுக்கும் பொருந்தும்...
வாழ்க வள்ளுவம்
***

