நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

மீனாட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீனாட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 08, 2025

திருக்கல்யாணம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 25
வியாழக்கிழமை

நேற்று 
தஞ்சையில்
திருத்தேரோட்டம்


முளைப்பாரிகள்












ராஜ வீதிகளின் கோயில்கள் அனைத்திலும் வாழை மரம் தோரணங்கள்...




நகரின் பல பகுதுகளிலும் அன்ன தானங்கள் நிகழ்ந்தன..

இதற்கு மேல் பெருங் கூட்டத்தினுள் உள்வாங்கிச் சென்று படம் எடுப்பதற்கு எனது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.. 

ஓம் சிவாய நம

இன்று
மதுரையம்பதியில்
ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணம்


சுரும்பு முரல் கடிமலர்ப்பூம் குழல் போற்றி உத்தரியத் தொடித் தோள் போற்றி
கரும் புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி
இரும்பு மனம் குழைத்தென்னை எடுத்தாண்ட அங்கயற் கண் எம்பிராட்டி
அரும்பும் இளநகை போற்றி ஆரண நூபுரம் சிலம்பும் அடிகள் போற்றி. 5 
- திருவிளையாடற் புராணம் -


வண்டுகள் ஒலிக்கின்ற, 
நறுமண மிகும் பூங்குழல் போற்றி.. 

மேலாடையும்
தோள் வளையங்களும் 
திகழ்கின்ற - திருத்தோள்கள் போற்றி..

வில் போல் கறுத்திருக்கும் புருவங்கள்  போற்றி..
 
ஞானசம்பந்தருக்கு பால் சுரந்த திருத்தனங்கள் போற்றி..

இரும்பு போலக் கிடந்த எனது மனதைக் குழைத்து 
அடியேன் பிறவிக் கடலுள் அழுந்தா வகைக்கு எடுத்தாண்ட
 எம்பிராட்டி
அங்கயற்கண்ணியின் இளநகை போற்றி..

வேதங்களாகிய சிலம்புகள் ஒலிக்கின்ற 
திருவடிகள் போற்றி.. போற்றி..
**
 நன்றி தமிழ் இணையம்


ஓம் மீனாக்ஷி சுந்தரேஸ்வராயை நம
**

புதன், மே 03, 2023

கல்யாணமாலை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 20
புதன்கிழமை


நிகழும் சுபஸ்ரீ சோபகிருது வருடத்தின் சித்திரைத் திருவிழா ஸ்ரீ மதுரை மீனாட்சி சுந்தரேசர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா சிறப்புடன் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது..

நேற்று
செவ்வாய்க்கிழமை மாநகர் மதுரையில் -
ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக் கல்யாண வைபவம்..
வெகு சிறப்பாக நிகழ்ந்தது..






திருமண வைபவப் படங்கள் நன்றி: திரு.ஸ்டாலின், மதுரை.


இந்நாளில் 
அன்னையின்
திருவடிகளுக்கு 
அடியேனின் அன்பு மாலை..

காப்பு


தனிமா மணியாய் மலரும்  பொருளே
ஒளிமா மணியாய் திகழும் அருளே
சிவமா மணியின் செல்வத் திருவே
தவமா மணியே கணபதி சரணம்..


மாணிக்கம்
வருவாய்  வருவாய் வாழ்வின் ஒளியாய் 
வருவாய் வருவாய் வளர்தமிழ் வடிவாய்
கடைக்கண் நோக்கில் காரிருள் தீர்ப்பாய் 
திருவடி தொழுதேன் தினமும் காப்பாய்.. 
பேணிக் கொண் டாடிடும் அடியார் தமக்கு 
காணிப் பொன்ன ளந்திடும் கருணா சாகரி 
மாணிக்க மூக்குத்தி மாநகர் மீனாள் 
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 1

வைரம்
உயிரா வணமாய் உன்புகழ் பாட 
பயிரார் வயல் தனில் பாயும் புனலே 
வயிரம் அணிந்திடும் வாழ்வே போற்றி 
வாழும் வகையில் தருவாய் போற்றி 
பயில்வார் தனையே பார்த் தருள்வாயே.. 
அருளும் அங்கயற் கண்ணி போற்றி 
பாண்டியன் மகளே பதமலர் போற்றி 
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 2

மரகதம்
மயில் வாகனனை மார்பினில் ஏந்தும் 
மங்கல கௌரி மலரடி போற்றி 
மதுரையின் அரசி மங்கலம் போற்றி 
மரகதப் பூங்கொடி பொன்னடி போற்றி 
போற்றும் அடியார் புத்தியில் மலரும்
ஆனந்த மலரே அருள்வாய் போற்றி 
பூத்திடும் சங்கத் தமிழே போற்றி 
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 3

கோமேதகம்
நா மேவிய நற்றமிழால் போற்றி 
தா மேவிய நல்லடியார் தலையில் 
பா மேவிய நல்லருளே எழுதும் 
கோ மேதகமே சரணம் சரணம்
தீ மேவிய தெள்ளமுதே சரணம் 
கா மேவிய நற்கனியே சரணம் 
பூ மேவிய பொன் மயிலே சரணம்
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 4

நீலம் 
பாலாம்பிகையே பர்வத வர்த்தனி 
நீலாம்பிகையே நின்னடி சரணம் 
நீள்விழி மலர்கள் நீலம் என்றே 
தாள்மலர் போற்றி தாயே சரணம்.. 
கனலாய் புனலாய் விளைவாய் சரணம் 
கதிராய் நிலவாய் கனிவாய் சரணம் 
வெயிலாய் புயலாய் புவியாய்த் திகழ்வாய் 
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 5

வைடூரியம் 
வானவர்க் கரணாய் வைடூரிய வாள் 
வளைக்கரம் ஏந்தி வரும்பகை  தீர்த்தாய் 
குஞ்சரம் குடையுடன் குலமகள் போற்றி 
கொடிமீன் படையுடன் கோமகள் போற்றி 
நாமகள் போற்றும் நங்காய் போற்றி 
நலந்தரு நாரணன் தங்காய் போற்றி 
வளந்தரு மதுரையில் என்தாய் போற்றி 
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 6

முத்து 
பித்தாய் நானிங்கு புகல்வதும் இனிதோ 
பேரருளே உன்னைப் புகழ்வதும் எளிதோ 
பித்தா னவனின் பெருந்திரு மேனியில் 
பிரியா தென்றும் படருங் கொடியே 
பொற்றா மரையில் பூத்திடும் நிலவே 
முத்தெனுந் தமிழாய் முன்வரும் அமுதே 
பூத்தேன் பொழியும் பொதிகையின் வாழ்வே 
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 7

பவளம் 
பவளம் நகையாய் நானிலம் காக்க 
நிகழும் பொழுதும் நிழலாய் காக்க 
சுழலும் உலகில் சூழ்வினை விலகத் 
திகழும் திருமலர்ப் பாதங்கள் போற்றி 
புகழும் மதுரையின் புனிதம் போற்றி 
புண்ணிய வைகைப் பொலிவே போற்றி 
பூத்திடும் மல்லிகை மாமலர் இதழாய் 
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 8 

புஷ்ப ராகம்
கதம்ப வனத்தில் களிப்புறு குயிலாய் 
கருதிடும் மனத்துள் மகிழ்ந்திடும் மயிலாய் 
வலக்கரம் ஏந்திடும் கிளியாய் எனையே 
வளர்த்தி டுவாயே எந்தன் அன்னையே 
பூமணி புஷ்ப ராகம் பொலிந்திடும் 
புகழ்மணி நூபுரத் திருவடி போற்றி 
தேசம் உடையாய் திருவடி சரணம் 
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 9

மணி மணியாக நவமணி மாலை 
மங்கல மார்பினில் மல்லிகை மாலை 
அணிதிகழ் மாலை ஆயிரம்  இலங்கும் 
அன்பினில் மீனாள் மனமெனத் துலங்கும் 
மணியுடை நூபுரம் மணித்தமிழ் பேசும் 
திருவடி யதனில் அருளொளி வீசும் 
சுந்தரன் பங்கில் சுந்தரி போற்றி.. 
கைதொழுதேன் கழல் அடியினை போற்றி.. 10
**
ஓம் சக்தி ஓம்
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், மே 01, 2023

மீனாக்ஷி கல்யாணம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 18
  திங்கட்கிழமை


நிகழும் சுபஸ்ரீ சோபகிருது வருடத்தின் சித்திரைத் திருவிழா  ஸ்ரீ மதுரை மீனாட்சி சுந்தரேசர் திருக்கோயிலில் சித்திரை 10
(ஏப்ரல் 23) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 
சித்திரை 25 (மே 8) 
வரை நடைபெற உள்ள நிலையில்
சித்திரை 17 (ஏப்ரல் 30)
மீனாட்சி பட்டாபிஷேகம்  
நிகழ்ந்தது..

இன்று
சித்திரை 18 (மே 01) 
மீனாட்சி அம்மன் திக் விஜயம் நிகழ்கின்றது.


நாளை 
செவ்வாய்க் கிழமை சித்திரை 19 (மே 02) 
ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக் கல்யாண வைபவம்..

சித்திரை 20 (மே 03)   திருத்தேரோட்டம்..

தொடர்ந்து 
சித்திரை 21 (மே 4) அன்று வைகை ஆற்றில் தவமிருக்கும்  மண்டூக மகரிஷிக்காக அழகர் மலையில் இருந்து, மதுரைக்குப் புறப்படும் கள்ளழகர் 
சித்திரை 21 (மே 04) அன்று இரவு மதுரை மூன்று மாவடியில் எதிர் சேவை கொண்டு,

சித்திரை 22 (மே 05)  
சித்ரா பெளர்ணமி நாளில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் 
அளிப்பதற்காக வைகையில் இறங்குகின்றார்..

சித்திரை 24 (மே 07) ல்
தசாவதாரம் மோகினித் திருக்கோலம், புஷ்ப பல்லக்கு  - என, சேவை சாதித்த பின்னர், சித்திரை 25 (மே 08) அன்று கள்ளழகர்  மலைக்குத் திரும்புகின்றார்..

இந்நாளில்
திருவிழாவின் காட்சிகள்..
Fb ல் வழங்கியவர்
திரு. ஸ்டாலின்..
அன்பின் நன்றி..















மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை 
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி 
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகன்நால் 
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120/1
-: திருஞானசம்பந்தர் :-
**
பதிவின் பகுதி 
இரண்டு

தஞ்சை பெரிய கோயில் 
திருவிழா காணொளி
நன்றி: நம்ம தஞ்சாவூர், 
SFA Studios












ஓம் நம சிவாய சிவாய நம
***