நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 31, 2017

மார்கழிக் கோலம் 16

தமிழமுதம்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு..(086)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 16




நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய 
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய் 
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் 
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ 
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்..

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ வரதராஜப்பெருமாள் - காஞ்சி
பொருளால் அமருலகம் புக்கியல் ஆகாது
அருளால் அறம்அருளும் அன்றே - அருளாலே
மாமறையோர்க்கு ஈந்த மணிவண்ணன் பாதமே
நீமறவேல் நெஞ்சே நினை..(2222)
-: பூதத்தாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணை



சிவ தரிசனம்

திருத்தலம்
திருஆரூர்


இறைவன்
ஸ்ரீ வன்மீகநாதர், ஸ்ரீ தியாகராஜர் 
  
அம்பிகை
ஸ்ரீ அல்லியங்கோதை, ஸ்ரீ கமலாம்பிகை


தல விருட்சம் - பாதிரி
தீர்த்தம் - கமலாலயம்


சுயம்புவாக எழுந்த புற்றுதான்
சிவலிங்கமாகத் திகழ்கின்றது..

பூமியின் அம்சமாகத் திகழும் திருத்தலம்...
ஆழித்தேர் பெருஞ்சிறப்புக்குரியது..

நீதி நெறிமுறையை நிலைநாட்டிய
மனுநீதிச் சோழன் ஆட்சி செய்த திருவூர்...


ஸ்ரீ சுந்தரரும் பரவை நாச்சியாரும்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பரவை நாச்சியாருடன்
வாழ்ந்திருந்த திருநகர்..
*

திருப்பதிகத்
திருப்பாடல்கள்.. 


வல்லியந் தோலுடையான் வளர்திங்கள் கண்ணியினான் வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன் தலையின் நறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை ஆகத் தமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே..(1/105)
-: திருஞானசம்பந்தர் :-

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிக்கை ஏந்தியோர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர் கோயிலாக் கொண்ட நாளே..(6/34)
-: திருநாவுக்கரசர் :-

பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் 
போகமும் திருவும் புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப் பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்துஅணி
ஆரூரனை மறக்கலு மாமே..(7/59)
-: சுந்தரர் :-

***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 15 -16


ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்... 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

சனி, டிசம்பர் 30, 2017

மார்கழிக் கோலம் 15

தமிழமுதம்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்..(084)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 15




எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ 
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன்வாய் அறிதும் 
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை 
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க 
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்... 
*
தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
குணசீலம்
தாழ்ந்து வரங்கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் - தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக் கீழ்க்கொண்ட அவன்..(2204)
-: பூதத்தாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணை


சிவதரிசனம்

திருத்தலம்
ஸ்ரீவாஞ்சியம்


இறைவன் - ஸ்ரீ வாஞ்சிநாதர்  
அம்பிகை - ஸ்ரீ மங்கலநாயகி 

தல விருட்சம் - சந்தனம்
தீர்த்தம் - குப்தகங்கை

யம பயம் நீங்கும் திருத்தலம்..


ஹரி பரந்தாமன் 
தன்னுடன் ஊடல் கொண்டு பிரிந்த 
திருமகளை ஆற்றுப்படுத்தி
  மீண்டும் அவளது திருக்கரம் பற்றிய திருத்தலம்..


இயமன் தனது மனக்கவலை நீங்கப்பெற்று
அம்மையப்பனைத் தனது தோள்களில் சுமந்த
திருத்தலம்..

நன்னிலத்துக்கு அருகில் உள்ள தலம்..
திருஆரூரில் இருந்து நகரப் பேருந்துகள் 
இயக்கப்படுகின்றன..
*

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு.

திருமூலத்தானம் - ஸ்ரீவாஞ்சியம்
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்ற சடை யிற்பொலி வித்தபு ராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை ஆளுடை யானிடமாக உகந்ததே..(2/7)
*

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 13 -14


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்..

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்... 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

வெள்ளி, டிசம்பர் 29, 2017

மார்கழிக் கோலம் 14

தமிழமுதம்

இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு..(081) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 14

ஸ்ரீ அமிர்த நாராயணப்பெருமாள் - திருக்கடவூர்

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் 
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர் 
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் 
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் 
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்...
*  
தித்திக்கும் திருப்பாசுரம்

இன்று
வைகுந்த ஏகாதசி



பச்சைமாமலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே..(0873)


கங்கையிற் புனித மாய காவிரி நடுவுப் பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள்மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழை யேனே..(894)


ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின்பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மாநக ருளானே..(900)


மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திரு அரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே..(901) 


கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்
ஒண்டிற லோன் மார்வத்து உகிர்வைத்தது - உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்
வான்கடந்தான் செய்த வழக்கு..(2199)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
***
நல்லதோர் வீணை


சிவ தரிசனம்

திருத்தலம்
திருவீழிமிழலை


இறைவன் - ஸ்ரீ வீழிநாதர்  
அம்பிகை - ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை

தல விருட்சம் - வீழிச் செடி
தீர்த்தம் - விஷ்ணு தீர்த்தம்


சலந்தரனை வீழ்த்திய சக்ராயுதத்தினை வேண்டி 
ஸ்ரீ ஹரிபரந்தாமன் சிவ வழிபாடு நிகழ்த்திய
திருத்தலம்..

நித்தமும் ஆயிரம் தாமரை கொண்டு துதிக்க
ஒருநாள் மலர் ஒன்று குறைந்த வேளையில்
தனது கண்ணையே ஈசனுக்கு
அர்ப்பணித்தனன் ஸ்ரீஹரி..

அதுகண்டு நெகிழ்ந்த ஈசன் சக்ராயுதத்தை
ஸ்ரீ ஹரிபரந்தாமனுக்கு வழங்கியதாக ஐதீகம்..


அம்பிகையின் திருமணத்தலங்களுள்
இத்தலமும் ஒன்று..



அப்பர் ஸ்வாமிகளுக்கும் ஞானசம்பந்தப் பெருமானுக்கும்
படிக்காசு வழங்கப்பட்ட திருத்தலம்..

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் 
பூந்தோட்டம் எனும் ஊரை அடுத்து உள்ளது - திருவீழிமிழலை..
*

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

இத்திருப்பாடலில் 
தலவரலாறு அருளப்பெற்றுள்ளது

நீற்றினை நிறையப்பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாளொன்று குறையக் கண்நிறைய விட்ட
ஆற்றலுக்கு ஆழிநல்கி அவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே..(4/64)
*

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 11 - 12


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்..

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

வியாழன், டிசம்பர் 28, 2017

மார்கழிக் கோலம் 13

தமிழமுதம்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல..(037) 
***

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 13


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் 
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் 
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் 
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்நாளால் 
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்..
*

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ சௌரிராஜன் - திருக்கண்ணபுரம்
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்..(2182)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

நல்லதோர் வீணை


சிவ தரிசனம்

திருத்தலம்
திருமயிலாடுதுறை


இறைவன் - ஸ்ரீ மயூரநாதர்
அம்பிகை - ஸ்ரீ அபயாம்பிகை

தல விருட்சம் - மா, வன்னி
தீர்த்தம் - காவிரி

ஸ்ரீ அபயாம்பிகை
அம்பிகை மயிலாக உருமாறி
ஐயனைப் பூஜித்த திருத்தலம்..

மயூர தாண்டவம் நிகழ்த்தப் பெற்ற
திருத்தலம்..
*
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


நிலைமை சொல்லு நெஞ்சே தவமென் செய்தாய்
கலைகள் ஆயவல்லான் கயிலாய நன்
மலையன் மாமயிலாடு துறையன் நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே..(5/39) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 09 - 10


முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலோர் எம்பாவாய்...

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்
கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவரைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***