நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 26, 2017

மார்கழிக் கோலம் 11

தமிழமுதம்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு..(072)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 11



கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து 
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே 
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் 
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ 
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்!..  
*
தித்திக்கும் திருப்பாசுரம்

காஞ்சி ஸ்ரீ வரதராஜப்பெருமாள்
நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும் நின்புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு..(2169)
-: பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

நல்லதோர் வீணை



சிவதரிசனம்

திருத்தலம்
திருக்கருகாவூர்


இறைவன்
அருள்திரு முல்லைவனநாதர்
ஸ்ரீ மாதவி வனேஸ்வரர்  


அம்பிகை
அருள்தரு கரு காத்த நாயகி
ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகை

தல விருட்சம் - முல்லை 
தீர்த்தம் - க்ஷீர தீர்த்தம்

ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகை
அம்பிகையின் பேரருளைக் 
கண்முன்னே காணலாம்..

உள்ளங்கை நெல்லிக்கனி என, 
உண்மையை உணரலாம்..

தஞ்சை பாபநாசத்திற்கு அருகில் உள்ள தலம்
தஞ்சையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும்
பேருந்து வசதிகள் உள்ளன..
*

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
மூவாத மேனிமுக் கண்ணி னானாம்
சீலனாஞ் சேர்ந்தார் இடர்கள் தீர்க்குஞ்
செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
மாலனாம் மங்கையோர் பங்க னாகும்
மன்றாடியாம் வானோர் தங்கட் கெல்லாம்
காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூர் எந்தை தானே..(6/15) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 05 - 06


மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்...

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்..  

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் சகோ! காலையிலேயே வாசித்துவிட்டேன்...கணினி ஆனால் தளம் கருத்து போடும் போது அழுத்திய போது கணினி சோர்ந்துவிட்டதால் கருத்து போட முடியாமல் போனது...

    மூலனாம் மூர்த்தியையும், காஞ்சிவரதராஜரையும் தரிசனம் கண்டோம்.

    விட்ட மார்கழிக் கோலத்தையும் காண்கிறோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. திருக்கருகாவூர் பெருமானை தரிசித்ததுண்டு. இங்கே உங்கள் தளம் மூலம் மீண்டும் தரிசனம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. திருப்பாவை, திருவெம்பாவை கண்டோம், படித்தோம். பல முறை திருக்கருகாவூர் சென்றுள்ளோம். இன்று உங்கள் பதிவின் மூலமாக மறுபடியும் சென்றோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஜி
    இன்றைய தரிசனம் கண்டேன் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா!

    அற்புதத் திருக்காட்சிகளும் திருப்பதிகங்களும்
    மிகச் சிறப்பு ஐயா!

    மனம் நிறைந்த தரிசம்!

    ஐயா!..
    நேற்று நான் தேடிய ஒன்று இங்கு இன்று பதிவாகி அற்புதக் காட்சியாகப்
    பிரசன்னமாகியிருப்பது கண்டு பிரமித்துப் போனேன் ஐயா!
    நான் தேடியது எப்படி இன்று உங்கள் பதிவில் இடம்பெற்றது?...

    எனது தேடல் அந்த இறையருளுக்கு எட்டியதும்,
    அதனை உடனேயே உங்கள் சிந்தையில் சேர்த்து இன்று இங்கு எனக்குத்
    தந்திருப்பதையும் எண்ணி வியந்து நிற்கின்றேன்!..
    உங்கள் மூலம் எனக்குச் செய்தி தந்துள்ளான் பரமன்!..

    இப்படித் தினமும் தரும் உங்கள் அரிய பதிவுகளைப் பார்க்காது
    தவறவிட்டிருப்பேனாகில் கிடைக்கவேண்டிய நல்ல பேற்றினையும் தவறவிட்டிருப்பேன்.

    இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி.....
    திரைப்பாடல் நினைவிற்கு வருகிறது ஐயா!

    என் உளமார்ந்த நன்றிகளுடன் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      எல்லாம் எனையாளும் ஈசன் செயல்!..
      புகழ் அனைத்தும் அவன் ஒருவனுக்கே!..

      தங்கள் வருகைக்கும் மேலதிகத் தகவல்களுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திருக்கருகாவூர் சென்றிருக்கிறோம் என் சின்ன பேரனை தங்கத் தொட்டிலில் கோவிலில் சுற்றியது நினைவில்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..