நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 24, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி
இரண்டாம் வெள்ளி


இன்று
திருஞானசம்பந்தர்
அருளிச்செய்த திருக்கடைக்காப்பு

தலம் 
திருக்கோலக்கா

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சும் கீள்
உடையுங் கொண்ட உருவம் என்கொலோ.. 1/23/1

மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாய்வதும்
பெண்கள் தம் கரங்களால் குடைந்து நீராடுவதும் ஆன பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் -  

சடைமுடியும்,  பிறையும், திருமேனி முழுதும் திருநீறும் இடையில்  கீள் எனப்படும்  உடையும் கொண்டு விளங்கும் இறைவனின் திருக்கோலம் தான்  என்னவோ?..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

புதன், ஜூலை 22, 2026

சுவாதி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆடி சுவாதி
 ஸ்ரீ சுந்தரர் குருபூஜை

சுந்தரர் அயிராவணம் எனும் யானையின் மீது ஆரோகணித்து 
சேரமான் பெருமாள் நாயனாருடன்
திருக்கயிலை சென்றடைந்த நாள்

திரு ஆரூரில் பரவை நாச்சியாரும்
திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரும்
சிவகதி எய்தினர்..


பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
    போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்
    பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா
    எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்து அணி
    ஆரூரானை மறக்கலுமாமே.. 7/59/1

சுந்தரர் திருவடிகள் போற்றி
பரவையார் திருவடிகள் போற்றி
சங்கிலியார் திருவடிகள் போற்றி
சேரமான் திருவடிகள் போற்றி

சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஜூலை 17, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி
 முதல் வெள்ளி


இன்று
திருநாவுக்கரசர் அருளிச்செய்த
நம சிவாய திருப்பதிகம்

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 11

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நம சிவாயவே.. 4/11

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நம சிவாயவே..2

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்று மில்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நம சி வாயவே..3

இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளி நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நம சிவாயவே..4

வெந்தநீ றருங்கலம்
  விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம்
  அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம்
  திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம்
  நம சிவாயவே.  5

சலமிலன் சங்கரன்
  சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும்
  நல்குவான் நலன்
குலமில ராகிலுங்
  குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
  நம சிவாயவே.  6

வீடினார் உலகினில்
  விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி
  கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்று
  உருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று
  நம சிவாயவே.  7

இல்லக விளக்கது
  இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
  சோதி உள்ளது
பல்லக விளக்கது
  பலருங் காண்பது
நல்லக விளக்கது
  நம சிவாயவே.  8

முன்னெறி யாகிய
  முதல்வன் முக்கணன்
தன்னெறியே சர
  ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்
  கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது
  நம சிவாயவே.  9


மாப்பிணை தழுவிய
  மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி
  பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய
  நம சிவாயப்பத்து
ஏத்தவல்லார் தமக்கு
  இடுக்க ணில்லையே.  10
திருச்சிற்றம்பலம்

இந்தப் பதிவுக்கு உந்திய
அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி

ஓம் சிவாய நம
***

புதன், ஜூலை 15, 2026

தவம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆனி
புதன்கிழமை



இன்று

வாராது வந்த மாமணியின் பிறந்த நாள்..

மீண்டும் பெருந்தலைவர் கிடைப்பாரோ?..

தவம் இருப்போம்..

நலம் வாழ்க
***

செவ்வாய், ஜூலை 14, 2026

அப்பன் நீ

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 செவ்வாய்க்கிழமை


அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
    அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
    ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
    துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
    இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
***

வெள்ளி, ஜூலை 10, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 வெள்ளிக்கிழமை
ஏகாதசியும் கிருத்திகையும்


இன்று
திருநாவுக்கரசர் தேவாரம்

வேத நாயகன்
  வேதியர் நாயகன் 
மாதின் நாயகன்
  மாதவர் நாயகன் 
ஆதி நாயகன்
  ஆதிரை நாயகன் 
பூத நாயகன்
  புண்ணிய மூர்த்தியே. . 5/100/1

வேதங்களுக்கும் வேதியர்க்கும் நாயகன்.

 உமாதேவியின் நாயகன்.

 பெருந்தவம் உடைய முனிவர்களுக்கும் நாயகன்..

ஆதி நாயகன் என்றாகி, ஆதிரை என்ற விண்மீனுக்கும்  - பஞ்ச பூதங்களுக்கும் நாயகன் ஆகிய புண்ணியமூர்த்தியே சிவபெருமான்.. 
 
நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

வியாழன், ஜூலை 09, 2026

பிரார்த்தனை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 வியாழக்கிழமை


எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்!..

முருகா முருகா
***

திங்கள், ஜூலை 06, 2026

சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 திங்கட்கிழமை



ஸ்ரீ வேங்கடேசாய மங்களம்

ஹரி ஓம்
***

வெள்ளி, ஜூலை 03, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 வெள்ளிக்கிழமை


இன்று
திருநாவுக்கரசர் தேவாரம்

தீர்த்தனைச் சிவனைச் சிவ லோகனை
மூர்த்தியை முத
  லாய ஒருவனைப்
பார்த்த னுக்கு அருள்
  செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடி
  யேன் மறந்து உய்வனோ.. 5/2/2

பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயவனை  சிவபெருமானை சிவலோகனை ஞான உருவினனை  உலகத் தோற்றத்திற்கு முன்
மூலமாய் நின்றவனை  பார்த்தனுக்கு வேடனாய்த் தோன்றி பாசுபதம் ஈந்து அருள் செய்த சிற்றம்பலக் கூத்தனைக் கொடியேனாகிய நான் மறந்து உய்வடைவேனோ ? ..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

வெள்ளி, ஜூன் 26, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆனி
 வெள்ளிக்கிழமை

இன்று
ஞானசம்பந்தர் தேவாரம்


தலம்
திரு அண்ணாமலை

எனைத்தோர் ஊழி அடியார் ஏத்த 
  இமையோர் பெருமானார்
நினைத்துத் தொழுவார் பாவந்தீர்க்கும் 
  நிமலர் உறை கோயில்
கனைத்த மேதி காணாது ஆயன் 
  கைமேல் குழல்ஊத
அனைத்தும் சென்று 
  திரளும் சாரல் அண்ணாமலையாரே.. 1/69/6


ஊழிகள் தோறும் அடியார்களால் வணங்கப் பெற்ற தேவ தேவன் ... 

நினைப்பவர் தம் பாவங்களைக் களைகின்ற  சிவபெருமான்.. 

தான் உறைகின்ற திருக்கோயில்

கனைத்துக் குரல் எழுப்பியபடி மேய்ந்து கொண்டிருந்த எருமையைக் காணாத ஆயன் தன் கையிலிருக்கும் குழலை ஊதியதும் எருமைகள் அனைத்தும்
ஓடி வந்து சேர்கின்ற அண்ணாமலைச் சாரலே...

ஓம் நம சிவாய
***

செவ்வாய், ஜூன் 23, 2026

போற்றி... போற்றி..

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி ஹஸ்தம்
செவ்வாய்க்கிழமை
 

கைத்தலபேசியின்  திறன் குறைவினால்
மாணிக்கவாசகர் குருபூஜையாகிய ஆனி மகத்தன்று 
பதிவு வெளியிட முடியவில்லை..

ஆனி ஹஸ்தமாகிய இன்று பணிந்து கொள்கின்றேன்..


இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரசே போற்றி அமுதே போற்றி
விரை சேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110

கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றம் முரண் உறு நரகிடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி 120 
மாணிக்கவாசகர்

ஓம் நம சிவாய
***

வெள்ளி, ஜூன் 19, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 வெள்ளிக்கிழமை


சுந்தரர் தேவாரம்

தலம்
திருக்கடவூர்

அன்றா லின்னிழற்கீழ்
  அறம்நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர்
  கொடுத்தாய்மறை யோனுக்குமான்
கன்றாருங் கரவா
  கடவூர்த்திரு வீரட்டத்துள்
என் தாதை பெருமான்
  எனக்கார் துணை நீயலதே.. 7/28/3

மான் கன்று விளையாடும் திருக்கரத்தினை உடையவனே , திருக்கடவூர்த் திருவீரட்டத்துள் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையாகிய பெருமானே , நீ  - அன்று ஆல நிழலின் கீழ் இருந்து முனிவர் நால்வர்க்கு அருள் செய்து , காலனை வீழ்த்தி  மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்தாய்.. இத்தன்மை உடைய உன்னையல்லாது வேறு துணை யார் எனக்கு ?...

நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

திங்கள், ஜூன் 15, 2026

சமையல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை


தினை கூட்டாஞ்சோறு

தேவையானவை

தினை அரிசி - 300 கி

பெரிய வெங்காயம், 
கேரட், குடமிளகாய் - ஒவ்வொன்றும் 
நடுத்தரமாக ஒன்று, 

பச்சைப் பட்டாணி - 100 கிராம்

கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ், 
மஞ்சள் தூள் சிறிது, கறிவேப்பிலை, 
கொத்தமல்லி தழை சிறிதளவு, 

நல்ல நெய், 
கல் உப்பு - தேவையான அளவு...

செய்முறை: 
பச்சைப் பட்டாணி புதிதாக உரித்தெடுக்கப்பட்டதாக இருத்தல் நலம்..

வெங்காயம், கேரட், குடமிளகாய் இவற்றை சுத்தம் செய்து மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்
.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, 
காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து - வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கப்பட்ட கேரட், குடமிளகாயை சேர்க்கவும்.

அடுத்து - 
சரிக்கு சரியாக தண்ணீர் விட்டு
தினை அரிசியை 
 சற்று நேரம் வைக்கவும்..

இதனை வடித்து விட்டு - 
ஒரு பங்கு தினைக்கு இரு பங்கு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.. 10 நிமிடங்கள் கழித்து தினை அரிசி வெந்ததும் வதக்கியவற்றைச் சேர்த்துக் கிளறி,
மல்லித் தழை கிள்ளிப் போட்டு இறக்கி பரிமாறவும்...

கூட்டாஞ்சோறு ஆக்குவதில் வீட்டுக்கு வீடு வேறுபாடு இருக்கக் கூடும்..

வாழ்க நலம்
***

வெள்ளி, ஜூன் 12, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 வெள்ளிக்கிழமை


திருநாவுக்கரசர்
தேவாரம்

தலம்
திருப்பேரெயில்

முன்னை யார்மயில்
  ஊர்தி முருகவேள்
தன்னை யாரெனில்
  தானோர் தலைமகன்
என்னை யாளும்
  இறையவன் எம்பிரான்
பின்னை யாரவர்
  பேரெயி லாளரே..  5/16/7
**
ஏ மனமே...
பேரெயில் தலத்துள் திகழ்கின்ற பெருமான்
முன்னே முதற் பொருளாகத் தோன்றியதோடு - மயிலை வாகனமாகக் கொண்ட முருகப் பெருமானின் தந்தையாகிய தனிப்பெரும் தலைமகன்..

 என்னையாளுகின்ற இறைவனும் எம்பிரானும் அவரே. முன்னைக்குப் பின் தோன்றிய புதியவரும் அவரே ..

 நன்றி
பன்னிரு திருமுறை
தஞ்சையம்பதி

ஓம் நம சிவாய
***

புதன், ஜூன் 10, 2026

வெண்ணெய்த் தாழி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை


கடந்த சனிக்கிழமை
தஞ்சை மாமணிக் கோயில் திவ்யதேசத்தை முதற்கொண்டு
 மாநகரின் ராஜ வீதிகளில் 27 கருட சேவை நடைபெற்றது.. 

மறுநாள் பதினேழு வெண்ணெய்த் தாழி வைபவமும் நடைபெற்றது..


திங்களன்று பதிவில் சொல்லியிருந்தேன்.

வயிற்றுக் கோளாறு காரணமாக எனக்கு நேரில் தரிசிக்கின்ற வாய்ப்பு வாய்க்கவில்லை..

ஊடகங்கள் வழியாகத் தான் நான் தரிசனம் செய்து கொண்டேன்...

அன்பின்  நெல்லை அவர்களது கருத்து - 

எல்லா பெருமாளும் சிறிய காணொளில வரலை. ஆனாலும் நல்ல காணொளி...  - என்று..

உண்மை தான்.. நேரில் சென்றிருந்தால் அதிக பட்சம் காட்சிப் பதிவுகளாவது கிடைத்திருக்கும்... 

எல்லாம் அவன் செயல்...
ஆயுள் ஆரோக்கியத்துடன்
 அடுத்த வருடம் பார்க்கலாம்..

முக்கியமான இடத்தில் நின்று கொண்டால், எல்லா கருடவாகனங்களும் நம்மைக் கடந்து செல்லுமோ?.. ஒவ்வொன்றையும் தரிசிக்க (அதாவது சடாரி வாங்கிக் கொள்ள) நேரம் கிடைக்குமா?..

என்பதுவும் நெல்லை அவர்களது கேள்வி...

முக்கியமான இடத்தில் நின்று கொண்டால், எல்லா கருட வாகனங்களும் நம்மைக் கடந்து செல்லும் . தரிசிக்கலாம்..

ஒவ்வொன்றையும் தரிசித்து  சடாரி வாங்கிக் கொள்ளலாம் நேரம் கிடைக்கும்.. சற்றே நெரிசல் இருக்கும்...

சாலையில் போக்குவரத்து ஒழுங்கு தான் பிரச்னை..

எல்லாம் வல்ல  கருட வாகனன் நல்வழி காட்டுவான்..

ஓம் ஹரி ஓம்
***

திங்கள், ஜூன் 08, 2026

கருடசேவை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை


கடந்த சனிக்கிழமை
தஞ்சை மாமணிக் கோயில் திவ்யதேசத்தை முதற்கொண்டு
 மாநகரின் ராஜ வீதிகளில் 
நடைபெற்ற 27 கருட சேவையின் காணொளித் துணுக்கு..

உடல் நலன் காரணமாக எனக்கு வாய்க்கவில்லை..

 காணொளிக்கு நன்றி
கோரக்க சித்தர் வழிபாட்டுக்குழு


ஓம் நமோ நாராயணாய
***

வெள்ளி, ஜூன் 05, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

வைகாசி
 வெள்ளிக்கிழமை

உறவினர் இல்லத்தில் அசாதாரணமான சூழ்நிலை.. 
ஒரு வாரத்திற்கு மேல் தங்கும்படியாகி விட்டது...

இனி இயன்ற வரை பதிவுகள்..

நலம் விசாரித்த் அனைவருக்கும்
 நன்றி...
**
இனிய எளிய தேவரப் பாடல்களை
அவ்வப்போது சிந்திப்போம்..


ஞான சம்பந்தர்
தேவாரம்

தலம் 
திருஆலவாய்
(மதுரை)

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
  வரிவளைக் கைமட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
  பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்
  வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
  ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120/1

 சோழ மன்னனின் புதல்வியாகிய மங்கையர்க்கரசி
 வரிகளையுடைய வளையல்களை அணிந்தவர். பெண்மைக்குரிய   பண்புகள் நிறைந்த பெருமையுடையவர்.  
தாமரையில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பானவர். பாண்டியனின் பட்டத்தரசி. 
நாள்தோறும்
திருத்தொண்டு செய்து  சிவபெருமானை வழிபடும் தன்மையுடையவர்.  

ஓங்கி எரியும் தணலைப் போன்று சிவந்த வண்ணமுடைய சிவபெருமான் உயிர்கட்கெல்லாம் தலைவர். நான்கு வேதங்களையும், அவற்றின் பொருள்களையும் அருளிச் செய்தவர். 

அத்தகைய பெருமான்  தேவி அங்கயற் கண்ணி உடன் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே...

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

வியாழன், ஜூன் 04, 2026

வாழ்க...


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
வைகாசி
 வியாழக்கிழமை

நேற்று வெளியாகி இருக்க
வேண்டிய பதிவு..

தொடக்கக் கல்வி பயின்ற காலத்தில் பள்ளியில் நான் கண்ட - ஐயன் திருவள்ளுவரது திரு உருவத்தை இன்று மேம்படுத்தப்ட்ட சித்திரமாகப் பார்க்கின்றதில் மகிழ்ச்சி..


திருவள்ளுவரைப் பின்பற்றுவோர்க்கு
எல்லா நாளும் நல்ல நாட்களே...


அறம் பொருள் இன்பம் வீடு எனும்
ஹிந்து தர்மங்களை உள்ளடக்கிய 
திருக்குறளையும்
திருவள்ளுவரையும் நாம் கொண்டாடி வருகின்றோம்..

திருமயிலை அறுபத்து மூவர் உற்சவமே சாட்சி..

திருப்புகழ் பாடல்களில் ஒன்றைக் கற்றிருந்தால் கூட முருகனருள் பெறலாம் என்பார் அருணகிரிநாதர்..

அவ்வண்ணம்
திருக்குறளுக்கும் பொருந்தும்...

வாழ்க வள்ளுவம்
***

செவ்வாய், ஜூன் 02, 2026

சிவமயம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
வைகாசி 
செவ்வாய்க்கிழமை

இன்று
ஞானசம்பந்தர் குருபூஜை


தலம் - திருவலிவலம்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே. 1/123/5


ஞானசம்பந்தர்
பூர்ணாம்பிகை
 திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய
***

வியாழன், மே 28, 2026

சப்தஸ்தானம்

 

நாடும் வீடும்
நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
வியாழக்கிழமை


தஞ்சாவூர் சப்தஸ்தான பெருவிழா 

தஞ்சாவூர் கரந்தை கருணாசுவாமி எனப்படும் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா மற்றும் சப்தஸ்தான திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.. 


ஜூன் 1 அன்று காலையில்
வெட்டி வேர் பல்லக்கில்
ஸ்ரீ வசிஷ்டர் அருந்ததி தேவியும்

விசித்திர  கண்ணாடிப் பல்லக்கில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரருடன் பாலாம்பிகையும் எழுந்தருள ஜூன் 1 ஜூன் 2  ஆகிய நாட்களில்  தஞ்சை வெண்ணாற்றங்கரை, திட்டை, கூடலூர், கடகடப்பை, புன்னை நல்லூர், தஞ்சை கீழவாசல் மற்றும்
ராஜ வீதிகள் என
ஏழூர் வீதி வலம்  நடைபெறும்... 

அனைவரும் வருக

ஓம் நம சிவாய
***