நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 19, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 வெள்ளிக்கிழமை


சுந்தரர் தேவாரம்

தலம்
திருக்கடவூர்

அன்றா லின்னிழற்கீழ்
  அறம்நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர்
  கொடுத்தாய்மறை யோனுக்குமான்
கன்றாருங் கரவா
  கடவூர்த்திரு வீரட்டத்துள்
என் தாதை பெருமான்
  எனக்கார் துணை நீயலதே.. 7/28/3

மான் கன்று விளையாடும் திருக்கரத்தினை உடையவனே , திருக்கடவூர்த் திருவீரட்டத்துள் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையாகிய பெருமானே , நீ  - அன்று ஆல நிழலின் கீழ் இருந்து முனிவர் நால்வர்க்கு அருள் செய்து , காலனை வீழ்த்தி  மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்தாய்.. இத்தன்மை உடைய உன்னையல்லாது வேறு துணை யார் எனக்கு ?...

நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

திங்கள், ஜூன் 15, 2026

சமையல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை


தினை கூட்டாஞ்சோறு

தேவையானவை

தினை அரிசி - 300 கி

பெரிய வெங்காயம், 
கேரட், குடமிளகாய் - ஒவ்வொன்றும் 
நடுத்தரமாக ஒன்று, 

பச்சைப் பட்டாணி - 100 கிராம்

கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ், 
மஞ்சள் தூள் சிறிது, கறிவேப்பிலை, 
கொத்தமல்லி தழை சிறிதளவு, 

நல்ல நெய், 
கல் உப்பு - தேவையான அளவு...

செய்முறை: 
பச்சைப் பட்டாணி புதிதாக உரித்தெடுக்கப்பட்டதாக இருத்தல் நலம்..

வெங்காயம், கேரட், குடமிளகாய் இவற்றை சுத்தம் செய்து மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்
.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, 
காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து - வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கப்பட்ட கேரட், குடமிளகாயை சேர்க்கவும்.

அடுத்து - 
சரிக்கு சரியாக தண்ணீர் விட்டு
தினை அரிசியை 
 சற்று நேரம் வைக்கவும்..

இதனை வடித்து விட்டு - 
ஒரு பங்கு தினைக்கு இரு பங்கு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.. 10 நிமிடங்கள் கழித்து தினை அரிசி வெந்ததும் வதக்கியவற்றைச் சேர்த்துக் கிளறி,
மல்லித் தழை கிள்ளிப் போட்டு இறக்கி பரிமாறவும்...

கூட்டாஞ்சோறு ஆக்குவதில் வீட்டுக்கு வீடு வேறுபாடு இருக்கக் கூடும்..

வாழ்க நலம்
***

வெள்ளி, ஜூன் 12, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 வெள்ளிக்கிழமை


திருநாவுக்கரசர்
தேவாரம்

தலம்
திருப்பேரெயில்

முன்னை யார்மயில்
  ஊர்தி முருகவேள்
தன்னை யாரெனில்
  தானோர் தலைமகன்
என்னை யாளும்
  இறையவன் எம்பிரான்
பின்னை யாரவர்
  பேரெயி லாளரே..  5/16/7
**
ஏ மனமே...
பேரெயில் தலத்துள் திகழ்கின்ற பெருமான்
முன்னே முதற் பொருளாகத் தோன்றியதோடு - மயிலை வாகனமாகக் கொண்ட முருகப் பெருமானின் தந்தையாகிய தனிப்பெரும் தலைமகன்..

 என்னையாளுகின்ற இறைவனும் எம்பிரானும் அவரே. முன்னைக்குப் பின் தோன்றிய புதியவரும் அவரே ..

 நன்றி
பன்னிரு திருமுறை
தஞ்சையம்பதி

ஓம் நம சிவாய
***

புதன், ஜூன் 10, 2026

வெண்ணெய்த் தாழி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை


கடந்த சனிக்கிழமை
தஞ்சை மாமணிக் கோயில் திவ்யதேசத்தை முதற்கொண்டு
 மாநகரின் ராஜ வீதிகளில் 27 கருட சேவை நடைபெற்றது.. 

மறுநாள் பதினேழு வெண்ணெய்த் தாழி வைபவமும் நடைபெற்றது..


திங்களன்று பதிவில் சொல்லியிருந்தேன்.

வயிற்றுக் கோளாறு காரணமாக எனக்கு நேரில் தரிசிக்கின்ற வாய்ப்பு வாய்க்கவில்லை..

ஊடகங்கள் வழியாகத் தான் நான் தரிசனம் செய்து கொண்டேன்...

அன்பின்  நெல்லை அவர்களது கருத்து - 

எல்லா பெருமாளும் சிறிய காணொளில வரலை. ஆனாலும் நல்ல காணொளி...  - என்று..

உண்மை தான்.. நேரில் சென்றிருந்தால் அதிக பட்சம் காட்சிப் பதிவுகளாவது கிடைத்திருக்கும்... 

எல்லாம் அவன் செயல்...
ஆயுள் ஆரோக்கியத்துடன்
 அடுத்த வருடம் பார்க்கலாம்..

முக்கியமான இடத்தில் நின்று கொண்டால், எல்லா கருடவாகனங்களும் நம்மைக் கடந்து செல்லுமோ?.. ஒவ்வொன்றையும் தரிசிக்க (அதாவது சடாரி வாங்கிக் கொள்ள) நேரம் கிடைக்குமா?..

என்பதுவும் நெல்லை அவர்களது கேள்வி...

முக்கியமான இடத்தில் நின்று கொண்டால், எல்லா கருட வாகனங்களும் நம்மைக் கடந்து செல்லும் . தரிசிக்கலாம்..

ஒவ்வொன்றையும் தரிசித்து  சடாரி வாங்கிக் கொள்ளலாம் நேரம் கிடைக்கும்.. சற்றே நெரிசல் இருக்கும்...

சாலையில் போக்குவரத்து ஒழுங்கு தான் பிரச்னை..

எல்லாம் வல்ல  கருட வாகனன் நல்வழி காட்டுவான்..

ஓம் ஹரி ஓம்
***

திங்கள், ஜூன் 08, 2026

கருடசேவை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை


கடந்த சனிக்கிழமை
தஞ்சை மாமணிக் கோயில் திவ்யதேசத்தை முதற்கொண்டு
 மாநகரின் ராஜ வீதிகளில் 
நடைபெற்ற 27 கருட சேவையின் காணொளித் துணுக்கு..

உடல் நலன் காரணமாக எனக்கு வாய்க்கவில்லை..

 காணொளிக்கு நன்றி
கோரக்க சித்தர் வழிபாட்டுக்குழு


ஓம் நமோ நாராயணாய
***

வெள்ளி, ஜூன் 05, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

வைகாசி
 வெள்ளிக்கிழமை

உறவினர் இல்லத்தில் அசாதாரணமான சூழ்நிலை.. 
ஒரு வாரத்திற்கு மேல் தங்கும்படியாகி விட்டது...

இனி இயன்ற வரை பதிவுகள்..

நலம் விசாரித்த் அனைவருக்கும்
 நன்றி...
**
இனிய எளிய தேவரப் பாடல்களை
அவ்வப்போது சிந்திப்போம்..


ஞான சம்பந்தர்
தேவாரம்

தலம் 
திருஆலவாய்
(மதுரை)

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
  வரிவளைக் கைமட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
  பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்
  வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
  ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120/1

 சோழ மன்னனின் புதல்வியாகிய மங்கையர்க்கரசி
 வரிகளையுடைய வளையல்களை அணிந்தவர். பெண்மைக்குரிய   பண்புகள் நிறைந்த பெருமையுடையவர்.  
தாமரையில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பானவர். பாண்டியனின் பட்டத்தரசி. 
நாள்தோறும்
திருத்தொண்டு செய்து  சிவபெருமானை வழிபடும் தன்மையுடையவர்.  

ஓங்கி எரியும் தணலைப் போன்று சிவந்த வண்ணமுடைய சிவபெருமான் உயிர்கட்கெல்லாம் தலைவர். நான்கு வேதங்களையும், அவற்றின் பொருள்களையும் அருளிச் செய்தவர். 

அத்தகைய பெருமான்  தேவி அங்கயற் கண்ணி உடன் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே...

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

வியாழன், ஜூன் 04, 2026

வாழ்க...


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
வைகாசி
 வியாழக்கிழமை

நேற்று வெளியாகி இருக்க
வேண்டிய பதிவு..

தொடக்கக் கல்வி பயின்ற காலத்தில் பள்ளியில் நான் கண்ட - ஐயன் திருவள்ளுவரது திரு உருவத்தை இன்று மேம்படுத்தப்ட்ட சித்திரமாகப் பார்க்கின்றதில் மகிழ்ச்சி..


திருவள்ளுவரைப் பின்பற்றுவோர்க்கு
எல்லா நாளும் நல்ல நாட்களே...


அறம் பொருள் இன்பம் வீடு எனும்
ஹிந்து தர்மங்களை உள்ளடக்கிய 
திருக்குறளையும்
திருவள்ளுவரையும் நாம் கொண்டாடி வருகின்றோம்..

திருமயிலை அறுபத்து மூவர் உற்சவமே சாட்சி..

திருப்புகழ் பாடல்களில் ஒன்றைக் கற்றிருந்தால் கூட முருகனருள் பெறலாம் என்பார் அருணகிரிநாதர்..

அவ்வண்ணம்
திருக்குறளுக்கும் பொருந்தும்...

வாழ்க வள்ளுவம்
***

செவ்வாய், ஜூன் 02, 2026

சிவமயம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
வைகாசி 
செவ்வாய்க்கிழமை

இன்று
ஞானசம்பந்தர் குருபூஜை


தலம் - திருவலிவலம்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே. 1/123/5


ஞானசம்பந்தர்
பூர்ணாம்பிகை
 திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய
***