நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

தேவன் தந்த வீணை


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..

ஆறுதலும் தேறுதலும்
தெய்வமே தந்திடுக..
பிணியானவை தீர்த்து
பெருமானே காத்திடுக..
***


 என்ன சொல்வது..
எப்படிச் சொல்வது?..

அன்பின் பாலு அமரர் ஆனார்..

நம் மனதை நாம் தான்
தேற்றிக் கொள்ள வேண்டும்..

அவரது குரல் வழி
எத்தனை எத்தனயோ
பாடல்கள்..

அத்தனையிலும்
அல்லல் பட்ட மனதின் ரணங்களுக்கு
மருந்தாய் இருந்தவை பற்பல..

அவை ஒருபுறம் இருக்க
திரு அண்ணாமலையை
முன் வைத்து அவர் பாடிய பாடல்களும்
லிங்காஷ்டகம், வில்வாஷ்டகம்,
சிவாஷ்டகம்,
காசி விஸ்வநாதாஷ்டகம்
முதலான பாமாலைகளும்
கேட்கும் பொழுதெல்லாம்
துன்பம் தீர்ப்பவை..

இந்த மண்ணை விட்டு
மறைந்திருக்கிறார்..
நம் மனதை விட்டு அல்ல..

என்றும் என்றென்றும்
காற்றொடு காற்றாய்
நம்முடன் கலந்திருப்பார்...
***
இன்றைய பதிவில்
கவியரசரின் தெய்வீக வரிகள்
பாலுவின் இனிய குரலில்..

வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே..
வண்ணங்கள் நான்
எண்ணும் எண்ணங்கள்..
எங்கிருந்தேன் இங்கு வந்தேன்
இசையினிலே எனை மறந்தேன்..
இறைவன் சபையில்
கலைஞன் நான்!..



சென்று வருக பாலு..
சென்று வருக..
மீண்டும் இங்கே பிறந்து
இசையை மழையாய் பொழிக..
***

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

சனி, செப்டம்பர் 26, 2020

நரசிங்கா.. நாராயணா..


நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி இரண்டாம்
சனிக்கிழமை..

புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
புண்ணியனின் பூம்பாதங்களைப்
போற்றுவோம்..
***

தஞ்சை மகர்நோன்புச்சாவடி
ஸ்ரீ ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள்
திவ்ய தரிசனம்..
***
தூணாயதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணாஅவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மாமலைமேய
கோணாகணையாய் குறிக்கொள் எனைநீயே.. (1042)
-: திருமங்கையாழ்வார் :-


வரங்கருதித் தன்னை வணங்காத வண்மை
உரங்கருதி மூர்க்கத் தவனை நரங் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே
அங்கண்மா ஞாலத்து அமுது.. (2265)
-: பூதத்தாழ்வார் :-
***

புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து அரியாய்
இகழ்ந்த இரணியன தாகம் சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து..(2376)
-: பேயாழ்வார் :-
***

சென்று வருக பாலு..
சென்று வருக..
மீண்டும் இங்கே பிறந்து
இசையை மழையாய் பொழிக..
***

கோவிந்தோ.. கோவிந்த..
கோவிந்தோ.. கோவிந்த..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

வெள்ளி, செப்டம்பர் 25, 2020

வருவாய் தாயே..

 



நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வராஹி அம்மன் தரிசனம்..

புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
வராஹி அம்மனின் திருவடிகளைப்
போற்றுவோம்..
***

கீழுள்ள காணொளியை
Fb ல் வழங்கியவர்
நண்பர் திரு தஞ்சை ஞானசேகரன்..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..


வருவாய் தாயே வரம் தருவாயே
வல்வினை கொடுமைகள் நீக்கிடுவாயே
அருள்வாய் தாயே அடைக்கலம் நீயே
அன்புடன் எங்களைக் காத்திடுவாயே..

உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணும் போதும் இயங்கும் போதும்
உன்பெயர் ஒன்றே இதயத்து ஒலியாய்
பன்னலம் சேர்க்கும் பரிவுடன் காக்கும்..

நலம் மிகக் கொடுப்பவள் வாராஹி
நானிலம் காப்பவள் வாராஹி
வளம் மிகக் கொடுப்பவள் வாராஹி
வழித்துணை ஆனவள் வாராஹி..

தாய் நீ வந்திடத் தடைகளும் இல்லை
தயவுடன் நோக்கிட நோய்களும் இல்லை
தாய் உன்னருளால் நலமே சூழ்க
தஞ்சையின் வராஹி மலரடி வாழ்க!..
***

ஓம்
சக்தி ஓம் சக்தி ஓம்
சக்தி ஓம்
ஃஃஃ

வியாழன், செப்டம்பர் 24, 2020

குருவாய் வருவாய்


நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
அழகான காணொளி ஒன்று..

மயிலாடும் இடம்
முருகன் கோயில்
நடுப்பட்டி கிராமம்..
தருமபுரி மாவட்டம்..


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..
-: அருணகிரிநாதர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

சனி, செப்டம்பர் 19, 2020

திருவேங்கடவா..



நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி முதல் சனிக்கிழமை..

புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
புண்ணியனின் பூம்பாதங்களைப்
போற்றுவோம்..
***


மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1033)
-: திருமங்கையாழ்வார் :-

நோற்றேன் பல்பிறவி நுன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப்பிறப்பே இடருற்றனன் எம்பெருமான்
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1035)
-: திருமங்கையாழ்வார் :-


உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப்பொழுதும்
வரஇமேல் மரகதமே போல - திரைமேல்
கிடந்தானைக் கீண்டானை கேழலாய்ப் பூமி
இடந்தானை ஏத்தி எழும்.. (2106)
-: பொய்கையாழ்வார் :-
***

கோவிந்தோ.. கோவிந்த..
கோவிந்தோ.. கோவிந்த..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

வியாழன், செப்டம்பர் 17, 2020

ஆரா அமுதே..



நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி முதல் நாள்..

புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
புண்ணியனின் பூம்பாதங்களைப்
போற்றுவோம்..
***

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர் பூம்பொழில்சூழ் கனமா மலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1034)

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏராலம் இளந்தளிர்மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மாமலை மேய
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே.. (1040)
-: திருமங்கையாழ்வார் :-
***

கோவிந்தோ.. கோவிந்த..
கோவிந்தோ.. கோவிந்த..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

செவ்வாய், செப்டம்பர் 15, 2020

ஷண்முக தரிசனம்

 


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
மூன்று காணொளிகள்..

முதலிரண்டும்
திருச்செந்தூரில் நிகழும்
ஆவணிப் பெருவிழாவின்
வைபவங்கள்.




கீழுள்ள
காணொளியிலேயே
விவரங்கள் இருக்கின்றன..


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

அம்மன் தரிசனம் 4


நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி கடை ஞாயிறு..
மகாகவியின் வழியில்
அம்மன் தரிசனம்..
***

தேடியுனைச் சரணடைந்தேன் தேச முத்துமாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்..


பாடியுனைச் சரணடைந்தேன் பாசம் எல்லாங் களைவாய்..
கோடி நலம் செய்வாய் குறைகள்
எல்லாம் தீர்ப்பாய்...


ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம்..


துன்பமே இயற்கை என்னும் சொல்லை
மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்..


நம்பினார் கெடுவதில்லை நான்கு
மறை தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்..
-: மகாகவி பாரதியார்:-

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

வெள்ளி, செப்டம்பர் 11, 2020

நல்லதோர் வீணை

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மகாகவியின்
நினைவு நாள்..
***

நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ!..


சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகும்
அறிவுடன் படைத்து விட்டாய்..
வல்லமை தாராயோ இந்த மாநிலம்
பயனுற வாழ்வதற்கே..
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென
வாழ்ந்திடப் புரிகுவையோ!..


விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்..


தசையினைத் தீச்சுடினும் சிவ
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்..
அசைவறு மதிகேட்டேன் இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ..
***

மகாகவியின் 
புகழ் வாழ்க

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

செவ்வாய், செப்டம்பர் 08, 2020

அம்மன் தரிசனம் 3


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
சென்ற ஞாயிறன்று
ஆவணி மாத தொடர் பதிவினை
வெளியிட இயலவில்லை..

இன்றைய தினம்
தென்காசிக்கு அருகிலுள்ள
அச்சங்குட்டம் எனும் ஊரிலுள்ள
ஸ்ரீ முத்தாரம்மன் தரிசனம்..

திருக்கோயில் நிர்வாகத்தினர்
FB  வழியாக
அம்மனின் திருக்கோலங்களை
வழங்கியிருந்தனர்...

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

இரவு ஒன்பதரை மணியளவில்
வார்த்தைகளை வழங்கினாள்
அம்பிகை..

அன்னை அவளது அருள்
அனைவரையும் வாழ வைப்பதாக!..



முத்து முத்து சொல்லெடுத்து
முத்தழகைப் பாட வந்தேன்...
முன்வினையைத் தீர்க்க என்று
நின்னடியைத் தேடி வந்தேன்...

நித்தம் எங்கள் வாசலுக்கு
பெத்தவளே நீ காப்பு..
உற்றவளாய் நீ இருக்க
மற்ற துணை வேறெதற்கு..


பித்தங் கொண்ட நெஞ்ச கந்தான்
தத்துங் கிளி ஆகிடுமா...
வித்தகி உன் சந்நிதியில்
முத்து மொழி பேசிடுமா..

என்னென்னவோ தீவினைகள்
எங்களையும் வாட்டுதம்மா..
எந்த பிழை ஆனாலும்
வந்து நீயும் ஓட்டுமம்மா...

முத்தெடுக்கும் வித்தகியாய்
முத்தார மாரியம்மா
முன் நடக்கும் நாயகியாய்
முத்தழகு தேவியம்மா..

குற்றாலச் சாரலிலே
குளிர் காற்றும் பாடுதம்மா..
வற்றாத அருள் சுரந்து
தமிழ்க் குடியை வாழ்த்துமம்மா..

தங்க நிற சூரியனாய்
தாய் முகமும் பளபளக்கும்
மஞ்சள் நிற மல்லிகையாய்
மாரி முத்து சிலுசிலுக்கும்..

தேடிவந்த கண்களுக்குள்
நிம்மதியும் ஊற்றெடுக்கும்
தேவி உந்தன் அருளாலே
தீபங்களில் வழி கிடைக்கும்...

சொல்லெடுத்துச் சொல்லு என்று
சொக்கத் தங்கம் சொல்லுரைத்தாய்
என்ன சொல்லி நான் உரைக்க
என்னை நீயும் வாழ வைக்க!...
***

முத்தாரம்மன் திருவடிகள்
போற்றி.. போற்றி..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

வெள்ளி, செப்டம்பர் 04, 2020

வலம்புரி வாழ்க..

 

வலம்புரி நாயகனோ
நலம் தருகின்ற தூயவனோ
மடி தரும் தாயவனோ
அடியவர் நடுவினில் சேயவனோ!..

ஐங்கரத்தால் எம்மை
அணைத்திடல் வேண்டும்..
அருள் மழையால்  மண்ணை
நனைத்திடல் வேண்டும்...

கஜமுக நாயகன்
நலம் தருக..
படைமுகம் வென்றிட
துணை வருக..

வருவினை நோய்தனை
 தீர்த்திட வேண்டும்..
திருவருள் கணபதி
காத்திட வேண்டும்..


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
அழகான  இரண்டு காணொளிகள்..

இன்னும் சிறிது நேரம்
எடுத்திருக்கக் கூடாதா!..
என்றிருக்கின்றது..

கண்டு மகிழ்க..


தண்ணியக் கண்டா போதும்
கணேசனுக்கு சந்தோஷம் தான்!..

சத்தமாச் சொல்லாதே செல்லம்!..
தடையாணையோட யாரும்
வந்திடப் போறாங்க!..


எங்களுக்கும் தடையாணை
பிடியாணை..ன்னு பிரச்னை
ஏதும் வந்திடுமோ?...
***

நலம் வாழ்க!..
ஃஃஃ