நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 30, 2023

பிச்சைமுத்து

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 17
ஞாயிற்றுக்கிழமை

நான் கவிஞனாம்!.. அன்பின் ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்கள் தமது பதிவில் சொல்லியிருக்கின்றார்.. இதற்குமேல் சும்மா இருந்து விட்டால் எப்படி,?..

அதைப் படித்ததும்
கவிதை ஒன்று பிறந்தது..

இன்றைக்காக இங்கிருந்த பதிவை 
மாற்றி விட்டு இதோ அந்தக் கவிதை!..


சாலைகள் விரிவடைந்தன
 விரிவடைந்த அதனால்
அவனுக்கும் இவனுக்கும்
கோடிகள் கிடைத்தன
வறட்சி நீங்கியதாக
நெஞ்சுக்குள் மகிழ்ச்சி


அடிதடி தொடங்கி
தடியடி வரைக்கும்
தரை எல்லாம் தங்கம்
பெட்ரோல் தொடங்கி
 பெருங்கார் வரைக்கும்
பேழையெலாம் வைரம்


நிழலாய் இருந்த அடர் மரங்கள்
அழிந்தன அதனை யார் அறிந்தார்?..

கூடுகள் கலைந்தன
குருவிகள் ஒழிந்தன..
கூடவே - மரங்களில்
மஞ்சள் வண்ணம்
 எழுதிய பெயிண்டர் பிச்சைமுத்துவும்..

அன்ன முத்துக்கு 
வழியின்றி அவனும்
அவன் குடும்பமும்..
அதோ பிச்சைமுத்து!..
*

வாழ்க வையகம்
வாழ்க வையகம்
***

சனி, ஏப்ரல் 29, 2023

கோதையின் இல்லம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 16
 சனிக்கிழமை


காணொளி பார்க்கும் போதே 
மேனி சிலிர்க்கும்..

நன்றி
விஷ்ணு நிவாஸம்


ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகள் போற்றி..
ஸ்ரீ ஆண்டாள்
திருவடிகள் போற்றி..

ஓம் ஹரி ஓம்
***

வெள்ளி, ஏப்ரல் 28, 2023

சோலைக் கரும்பு 3

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 15
 வெள்ளிக்கிழமை

திருப்பதிகப் பாடல்கள்

தேவார, திருவாசகங்களைக் கரைத்துக் குடித்திருக்கீங்க என்பது புரிகிறது..
- ஸ்ரீமதி கீதாசாம்பசிவம்

தெய்வீகமான தேவார திருவாசகத்தை நன்கு படித்தறிந்து மனனமாக உருவேற்றியுள்ளீர்கள். அந்த பக்திக்கு முன் நானெல்லாம் வெகு சாதாரணம்..
_ ஸ்ரீமதி கமலாஹரிஹரன்

மேற்கண்ட கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு
இந்த மாதிரி என்னை நான் நினைத்துக் கொண்டால் பெரிய தவறு செய்தவனாகி விடுவேன்...

இணையத்தில் பன்னிரு திருமுறைகள் வந்த பிறகு அவற்றைப் படிக்கும் தோறும் நினைவில் குறித்துக் கொள்வேன்.. 

சான்றோர்களால் தொகுக்கப்பட்டவை அவை.. 

இப்போது  எளிதாகத் தேடி எடுக்கும்படி அவை இணையத்தில் வைக்கப்பட்டுள்ளன..
அவற்றில் இருந்தே தற்போது குறிப்புகளைத் தேடி எடுத்துத் தொகுத்தே 
பதிவுகளில் தந்து கொண்டு  இருக்கின்றேன்..

இது குறித்து விவரமான பதிவு ஒன்று விரைவில் வெளிவரும்..
***
இன்றைய பதிவில் 
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தனது திருப்பாடல்களில் கரும்பினைப் பற்றிப் பேசுகின்ற அழகினைக் காண்போம்..

கழை கொள் கரும்பும் கதலிக் கனியும் கமுகின் காயும்.. - என்றும்

அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனி.. - என்றும்

கரும்பு உயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கி விளை கழனி.. - என்றும்

இயற்கை வளத்தையும் நல்லழகையும் நம் கண் முன்னே நிறுத்துகின்றார் -
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்..

அருள் நிறைந்த
திருப்பாடல்கள் சிலவற்றை இந்தப் பதிவில் சிந்திப்போம்..

இத்திருப்பாடல்கள் தருமபுர ஆதீனத்தின் பன்னிரு திருமுறைத் தொகுப்பில் இருந்து பெறப்பட்டவை..

சான்றோர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்..

அழகாபுத்தூர்

திரு அரிசிற்கரைபுத்தூர்
(அழகாபுத்தூர்)

மழைக்கண்மட வாளை யொர் பாகம்வைத்தீர்
வளர்புன்சடைக் கங்கையை வைத்து கந்தீர்
முழைக்கொள்ளர வோடு என்பு அணிகலனா
முழுநீறுமெய் பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங்
கமுகின் பழுக்காயுங் கவர்ந்து கொண்டிட்
டழைக்கும்புனல் சேர் அரிசில் தென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.. 7/9/9

திருத்துறையூர்

திருத்துறையூர்

அரும்பார்ந்தன மல்லிகை
சண்பகஞ் சாடிச்
சுரும்பாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கரும்பார்மொழிக் கன்னியர்
ஆடுந் துறையூர்
விரும்பாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே... 7/13/4

திரு கலயநல்லூர்

திரு கலயநல்லூர்
(சாக்கோட்டை)

குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு குறிப்பினொடுஞ் சென்று அவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்பும்வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த விண்ணவர் கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக் கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே
.. 7/16/1

திரு கலயநல்லூர்

பெற்றிமைஒன் றறியாத தக்கனது வேள்விப்
பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கள்பீ டழியச்
செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலால் தேய்வித்
தருள்பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில்
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும்
திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்தென் கரைமேல்
கற்றினம்நல் கரும்பின் முளை கறிகற்கக் கறவை கமழ் கழுநீர் கவர் கழனிக் கலயநல்லூர் காணே.. 7/16/6

திரு கழிப்பாலை

திரு கழிப்பாலை

சுரும்பார் விண்ட மலர் அவை தூவித் தூங்கு கண்ணீர்
அரும்பா நிற்கு மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்
விரும்பேன் உன்னையல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால்
கரும்பாருங் கழனிக் கழிப்பாலை மேயானே..7/23/4

திரு கற்குடி

திருகற்குடி
(உய்யக்கொண்டான், திருச்சி.)
வருங்கா லன்னுயிரை மடியத் திரு மெல்விரலால்
பெரும்பாலன் தனக் காய்ப் பிரி
வித்த பெருந்தகையே
கரும்பாரும் வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடி
யேனையும் வேண்டுதியே..7/27/9

திரு கானாட்டு முள்ளூர்

திருக்கானாட்டு முள்ளூர்
(கானாட்டம்புலியூர்)

இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
அன்னங்கள் விளையாடும் அகன்துறையின் அருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 7/40/3

திரு கச்சூர் ஆலக்கோயில்

திரு கச்சூர் ஆலக்கோயில்

மேலை விதியே விதியின் பயனே
விரவார் புரமூன்று எரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக்கோயில் அம்மானே..
7/41/5


திருஆரூர்

ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித் திட்ட
உச்சிப் போதனை நச்சர வார்த்த
பட்டி யைப்பக லைஇருள் தன்னைப்
பாவிப் பார்மனத் தூறும்அத் தேனைக்
கட்டியைக் கரும் பின்தெளி தன்னைக்
காதலாற் கடற்சூர் தடிந்திட்ட
செட்டி அப்பனைப் பட்டனைச் செல்வ ஆரூரானை மறக்கலு மாமே.. 7/59/10


சுந்தரர் திருவடிகள் போற்றி.. போற்றி

பதிவின் பகுதி 
இரண்டு

தஞ்சை பெரிய கோயில் 
திருவிழா காணொளி
நன்றி: SFA Studios 


ஓம நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், ஏப்ரல் 27, 2023

என்ன செய்வது?..

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 14
 வியாழக்கிழமை

இணையத்தில் இருந்து தொகுப்பு
நன்றி : விக்கி

இன்றைய சூழ்நிலையில் 
இது ஒரு பொதுவான
தகவல் தொகுப்பு மட்டுமே!..


GLYCEMIC  INDEX 

சர்க்கரை உயர்த்தல் குறியீடு என்பது ஓர் உணவுப் பொருளானது, இரத்த குளுக்கோஸ் அளவை, உடனடியாக எந்த அளவிற்கு உயர்த்துகிறது என்பதைக் குறிக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் குறைவான சர்க்கரை உயர்த்தல் குறியீடு உள்ள உணவையே உட்கொள்ள வேண்டும்..
நன்றி: விக்கி



Foods high in GI to avoid

White and whole wheat bread.
White rice.
Breakfast cereals and cereal bars.
Cakes, cookies, and sweet treats.
Potatoes and fries.
Chips and rice crackers.
Fruits such as watermelon and pineapple.
Sweetened dairy products such as fruit yogurts.


The glycemic index is a number from 0 to 100 assigned to a food, with pure glucose arbitrarily given the value of 100, which represents the relative rise in the blood glucose level two hours after consuming that food..
Thanks: Wikipedia

Low glycemic index foods


Vegetables: Peppers, broccoli, tomatoes, lettuce and eggplants.

Fruits: Strawberries, apples, lemons, limes and pears.

Legumes: Chickpeas, beans (dried or boiled) and legumes.

Dairy: Whole/full-fat milk and plain yogurt.

Sweets: Dark chocolate with more than 70% cocoa.
Nuts: Cashews and peanuts

Foods’re slowly digested and absorbed, causing a slower and smaller rise in blood sugar levels.

The three GI ratings are:
Low: 55 or fewer
Medium: 56 - 69
High: 70 or more

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!
***

புதன், ஏப்ரல் 26, 2023

ஒரு நிலை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 13
புதன் கிழமை

 தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழரின் சிலை 1972 ஏப்ரல் (தமிழ்ப் புத்தாண்டு) நாளில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் வெகு சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது..



அப்போதிருந்து மன்னரின் சிலை 
தகரக் குடையின் 
கீழாகத் தான் இருக்கின்றது..

வெண் கொற்றக் குடையின் கீழிருந்து 
மும்முடி கொண்ட மன்னனுக்கு
தகரக் குடை தான் தமிழனின் பரிசு..


திறப்பு விழா கல்வெட்டும் பீடத்தில் உள்ளது.. என்ன காரணமோ தமிழ் ஆண்டின் பெயர் குறிப்பிடப்படவில்லை..


கீழுள்ள கல்வெட்டின் வாசகங்களைப் படித்துப் 
புரிந்து கொள்ளவும்..
 

இன்றுவரை பற்பல மாற்றங்கள் தமிழ்நாட்டிலும் தஞ்சையிலும் நடந்திருக்கின்றன.. 

ஆனால் இச்சிலையின் நிலையில் மட்டும் இன்றுவரை மாற்றம் ஏற்படவே இல்லை..

பூங்கா அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் 
காற்றோடு போயிற்று..


ஒரு புல்லும் முளைக்காமல் வறணடு கிடக்கும் காட்சி








நீரூற்றுக்காக அமைக்கப்பட்ட தொட்டி



பெரும் பொருட்செலவில் நம்மTHANJAVUR  என்றிருப்பதைக் காணும் போது
இங்கே தமிழுக்குப் பல்கலைக்கழகம் இருப்பதும் நினைவுக்கு வந்தது..
 




புதிதாக வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும் 
பழைய பேருந்து நிலையத்திற்குள் 
தாறுமாறான ஒரு காட்சி..

பதிவின் பகுதி 
இரண்டு

தஞ்சை பெரிய கோயில் 
திருவிழாவின் காட்சிகள்
நன்றி : 
நம்ம தஞ்சாவூரு நண்பர்கள், 
SFA Studios 





ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஏப்ரல் 25, 2023

தரிசனம் 5

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 12
செவ்வாய்க்கிழமை

பெரிய கோயிலில் எடுக்கப்பட்ட படங்கள் இப்போதைக்கு இந்தப் பதிவுடன் நிறைவு பெறுகின்றன..


அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில் - 
கால சம்ஹார மூர்த்தி, அம்பிகையின் சிவ பூஜை, ஆரத் தழுவிய அம்பிகை, புலிக்கு அஞ்சிய வேடன் - எனும் புராணங்கள் நான்கு சுதை சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன..

காலக் கொடுமையால் இந்த சிற்பங்கள்  மெல்ல மெல்ல 
சிதைந்து கொண்டிருக்கின்றன..

இவற்றை மீண்டும் 
பொலிவுடன் சீரமைப்பதற்கு எந்த மாதிரியான சட்டங்கள் தடையாக இருக்கின்றனவோ தெரியவில்லை..



கடுமையான வெயில்.. மண்டபத்தின் நிழலுக்குள் புழுக்கம்.. நெற்றியின் வியர்வைத் துளிகள் கண்களில் வழிகின்றன..
கைத் தொலைபேசியின் மூன்றாவது கண் தாறுமாறாகி விட்டது.. 

இந்நிலையில் -
சுதை சிற்பங்களை இன்னும் அழகாக எடுத்திருக்கலாம் - என்ற எண்ணம் மனதில் எழுகின்றது..



ஸ்ரீ விநாயகர்

ஸ்ரீ வில்லேந்திய வேலன்

ஸ்ரீ வீரபத்ரர்

ஸ்ரீ வயிரவர்


முருகன் சந்நிதியின் சிற்பங்களையும் வேறு சில கோணங்களையும் மறுபடி படம் பிடிக்க வேண்டும்..

மீண்டும் ஒரு நல்ல பொழுதைத் தந்தருள எம்பெருமானிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்..


ராஜ கோபுரத்தைக் கடந்த  நிலையில் காலணிகள் காப்பகம்.. 

அங்கே ஒரு பையை எடுத்து அதற்குள் செருப்பைப் போட்டு அங்கிருக்கும் நூற்றுக் கணக்கான கொக்கிகளில் ஏதாவதொன்றில் மாட்டி விட்டு அதற்கான எண்ணைச் சொன்னால் சிறு தாள் ஒன்றில் எழுதிக் கொடுக்கின்றார் ஒருவர்.. அதற்கு மூன்று ரூபாய்.. சுய சேவை மாதிரி இருக்கின்றது..  

செருப்பு வைத்த பை மாறிப் போய் விட்டால் அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று தெரிய வில்லை.. 

பக்கத்திலேயே சிற்றுண்டிகள்.. ஐஸ்கிரீம்கள்.. 
குளிர் பானங்கள்.. கலைப் பொருட்கள் விற்கும் கடைகள்.. குறுகலான நடைபாதையில் எதற்கும் கவலைப் படாதவர்களாக பெண்கள்.. 










பதிவின் பகுதி இரண்டு

தஞ்சை பெரிய கோயில் திருவிழா
நன்றி : நம்ம தஞ்சாவூரு நண்பர்கள்








ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***