நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 19, 2023

தரிசனம் 1

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 6
புதன் கிழமை

பதிவின் 
முதல் பகுதி

பதினைந்து மாதங்களுக்குப் பிறகு காலை 10:30 மணியளவில் பெரிய கோயில் தரிசனம்.. 

பங்குனி 27 (10/4) திங்கட்கிழமை.. அன்றைக்குப் பஞ்சமி.. ஸ்ரீ வராஹி அம்மனை தரிசனம் செய்து நேர்ச்சை ஒன்றினை நிறைவேற்றினோம்..

திருக்கோயில் வளாகத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்த நடை விரிப்புகள் வெயிலின் தாக்கத்தால் அப்போதே உலர்ந்து கொண்டிருந்தன..
சில நுணுக்கங்களை படம் எடுக்க முயன்றேன்.. இயலவில்லை..

இயன்ற அளவில் நான் எடுத்த படங்கள் அடுத்த சில பதிவுகளில் தொடர்ந்து வர இருக்கின்றன..

மராட்டியர் தோரண வாயில்


கேரளாதகன் திருவாசல்

ராஜராஜன் திருவாசல்

தத்துவம்

ஆனை கொண்ட அரவு கயிலாயச் சாரலில் கிடப்பதாக ஞானசம்பந்தர் திருவாக்கு.. அதுவே இங்கு பெருஞ்சிற்பம்..






கதை காட்டும் கற்பலகைகள்..

திருக்கோயில் எழுப்பிய பணியில் தலைமைப் பெருஞ்சிற்பி
வீரசோழ குஞ்சர மல்லன் என்பவருக்கு ராஜராஜ பெருந்தச்சன் என்ற பட்டமும், அவருடைய உதவியாளர்களான மதுராந்தகனுக்கு நித்த விநோத பெருந்தச்சன் என்ற பட்டமும், இலத்தி சடையனுக்கு கண்டராதித்தப் பெருந்தச்சன் என்ற பட்டமும் வழங்கப்பட்டு  அந்த விவரம் கல்லிலும் வடித்து வைக்கப்பட்டது.. 









ஸ்ரீ நாகராஜன்


ஸ்ரீ ராஜராஜேஸ்வரம்
இது ராஜராஜ சோழர் சூட்டிய பெயர்..









பதிவின் பகுதி 2
படங்களும் காணொளியும்
நன்றி
Swami fine arts studios
தஞ்சை

நிகழும் ஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை நான்காம் நாள் (17/4) திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது..










எதிர்வரும்
சித்திரை 18 திங்களன்று (மே 1) 
அதிகாலையில் யதாஸ்தானத்தில் இருந்து
ஸ்ரீ அல்லியங்கோதை அம்பிகையுடன்  தஞ்சை விடங்கராகிய
ஸ்ரீ தியாகேசப் பெருமான் 
திருத்தேருக்கு எழுந்தருள்கின்றார்.. 

காலைப் பொழுதில் ராஜவீதிகளில் 
திருத்தேரோட்டம்..

கீழுள்ள காணொளி
முதல்நாள் (திங்கள்) புறப்பாடு..


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

  1. படங்களை பெரிதாக்கி ரசித்தேன். ரொம்ப நாள் ஆச்சு, பெரிய கோவில் பார்த்து..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்கும் போது வாருங்களேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. இப்போது கோபுரம் உச்சிக்கு ஏற அனுமதிக்கிறார்களா?  அனுமதித்த காலத்திலேயே சென்று பார்க்கவில்லை நான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருப்பணி காலத்தில் தான் அது முடியும்..

      எனக்கு அப்படியான வாய்ப்பு கிடைத்தது இல்லை..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஸ்ரீ வாராகி அம்மன் கோவில் படங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. அங்குள்ள சிற்பங்களின் படங்களையும், விபரங்களையும் தெரிந்து கொண்டேன்.

    தஞ்சை பெரிய கோவில் தரிசனமும் பெற்று கொண்டேன். அமாவாசை அன்று சிவபெருமான் தரிசனமும் கண் குளிர கிடைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அமாவாசை அன்று சிவபெருமான் தரிசனமும் கண் குளிர கிடைத்தது.. //

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. பெரியகோவில் தரிசனங்கள் பெற்றுக் கொண்டோம். படங்கள் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. படங்கள் எல்லாம் மிக அழகு. ரசித்துப் பார்த்தேன். கோயிலுக்கு இரு முறை சென்றிருக்கிறேன். பல வருடங்கள் ஆகிவிட்டன

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. தஞ்சை பெரிய கோவிலை நீங்கள் எடுத்த படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.

    சித்திரை திருவிழா படங்கள், காணொளி எல்லாம் நன்றாக இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறன.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. தஞ்சைக்கோயில் பார்த்தே சில வருடங்கள் ஆகின்றன. இப்போதெல்லாம் வர முடியுமா என்பதே சந்தேகம். படங்களும் விவரணைகளும் நன்றாக உள்ளன. நான் ஆரம்பத்திலிருந்து படிக்காமல் பின்னாலிருந்து படித்து வருவதால் கொஞ்சம் குழப்பம். :) இப்போச் சரியாகி விட்டது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..