நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 08, 2023

புனிதவதியார்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 25
 சனிக்கிழமை

பங்குனிச் சுவாதி

(பெரிய புராணத் திருப்பாடல்களுடன் பதிவு)


ஈசன் எம்பெருமானுக்கு
தயிர் அன்னத்துடன் மாங்கனியும் பரிமாறி - 
காரைக்கால் அம்மையார் எனப் புகழப் பெற்ற புனிதவதியார் - ஈசன் எம்பெருமானின் திருவடிக் கீழ் இருக்கப் பெற்ற நாள்..

தாங்கிய வனப்பின் நின்ற தசைப் பொதி கழித்து உன்பால் ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய் வடிவு  அடியேனுக்குப் பாங்குற வேண்டும் என்று பரமனின் தாள் - பரவி நின்ற வண்ணமே,

ஊன் உடைய வனப்பை எல்லாம் உதறி விட்டு எலும்பு உடம்பேயாகி வானமும் மண்ணும் எல்லாம் 
வணங்குகின்ற பேய் வடிவம் ஆகினார் அம்மையார்..


அந்நிலையில் - திருக்கயிலாய
மாமலைக்கு சென்று  அங்கு கால் வைப்பதற்கு அஞ்சியவராக தலையால் நடந்து சென்று அம்மையப்பனைத் தரிசிக்கின்றார்..

அங்கே ஈசன் அருளியபடி,

துத்தம் கைக்கிளை விளரி தாரம் உழை இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி கொக்கரை தக்கை யோடு தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்து அத்தனை விரவினோடு ஆடும் எங்கள் அப்பன் இடம்திரு ஆலங்காடே..
(காரைக்கால் அம்மையார்)


இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போது உன்
அடியின்கீழ் இருக்க என்றார்..
( பெரிய புராணம்)

காரைக்கால் அம்மையார் 
திருவடிகள் போற்றி.. போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. போற்றி பாடுவோம் எம்பெருமானை. பற்றிக் கிடப்போம் அவர்தம் திருவடிகளை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. உண்மை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  2. புனிதவதியார் கதை மிகச் சுருக்கமாக இருக்கிறது. நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  3. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை காரைக்கால் அம்மையாரின் கதை பகிர்வுக்கு நன்றி.

    /பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் /

    அருமையான வரிகள். சிவன் அடியார்களின் எண்ணங்கள்தான் நமக்கு உறுதுணை. அவர்களை நாளும் தொழுவதில் ஈசனே மகிழ்ந்து நமக்கருள் புரிவார் .
    ஓம் நமசிவாய.. 🙏.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ///அடியார்களின் எண்ணங்கள்தான் நமக்கு உறுதுணை. அவர்களை நாளும் தொழுவதில் ஈசனே மகிழ்ந்து நமக்கருள் புரிவார் .///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  5. பதிவு அருமை.
    காரைக்காலம்மையார் பாடலை பாடி இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      ஓம் நம சிவாய..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..