நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை
இன்று
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த
நம சிவாயத் திருப்பதிகம்
மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண் 22
துஞ்சலும் துஞ்சல்
இலாத போழ்தினும்
நெஞ்சக நைந்து
நினைமின் நாடொறும்
வஞ்சகம் அற்று அடி
வாழ்த்த வந்தகூற்று
அஞ்ச உதைத்தன
அஞ்செ ழுத்துமே. 1
மந்திர நான்மறை
யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர்
தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய
செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம்
அஞ்செ ழுத்துமே. 2
ஊனிலு யிர்ப்பை
ஒடுக்கி ஒண்சுடர்
ஞானவி ளக்கினை
யேற்றி நன்புலத்
தேனைவ ழிதிறந்
தேத்து வார்க்கிடர்
ஆனகெ டுப்பன
அஞ்செ ழுத்துமே. 3
நல்லவர் தீயர்
எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ
முத்தி காட்டுவ
கொல்லந மன்தமர்
கொண்டு போமிடத்
தல்லல்கெ டுப்பன
அஞ்செ ழுத்துமே. 4
கொங்கலர் வன்மதன்
வாளி ஐந்தகத்
தங்குள பூதமும்
அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம்
அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல்
அஞ்செ ழுத்துமே. 5
தும்மல் இருமல்
தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம்
விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த்து
எய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை
அஞ்செ ழுத்துமே. 6
வீடு பிறப்பை
அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன
பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன
மன்னு மாநடம்
ஆடி யுகப்பன
அஞ்செ ழுத்துமே. 7
வண்டம ரோதி
மடந்தை பேணின
பண்டை இராவணன்
பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு
துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன
அஞ்செ ழுத்துமே. 8
கார்வணன் நான்முகன்
காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி
செவ்வி நாடொறும்
பேர்வணம் பேசிப்
பிதற்றும் பித்தர்கட்
கார்வண மாவன
அஞ்செ ழுத்துமே. 9
புத்தர் சமண்கழுக்
கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள்
தெளிந்து தேறின
வித்தக நீறணி
வார்வி னைப்பகைக்கு
அத்திர மாவன
அஞ்செ ழுத்துமே. 10
நற்றமிழ் ஞானசம்
பந்தன் நான்மறை
கற்றவன் காழியர்
மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ
ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர்
உம்ப ராவரே.. 3/22/11
திரு ஓண நல்வாழ்த்துகள்
ஓம் ஹரி ஓம்
ஓம் சிவாய நம
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..