நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 26, 2025

முசியாமல் இட்டு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை


படிக்கின்றிலை பழநித்திரு நாமம் படிப்பவர் தாள்
   முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமல் இட்டு
      மிடிக்கின்றிலை பர மாநந்த மேற்கொள விம்மி விம்மி
         நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கினியே... 75
கந்தரலங்காரம்
 நன்றி கௌமாரம்


ஏ.. நெஞ்சே, பழநியம்பதியின் அருமை பெருமைகளைப் படித்து உணர்ந்தாயில்லை. பழநி முருகனின் திருப்பெயர்களை ஓதுகின்ற அடியார்களது திருவடிகளைப்
பணிகின்றாயில்லை.  
முருகா சரணம்' என்று துதிக்கின்றாயில்லை.  யாசித்து வருவோர்க்கு  முகம் கோணாமல் உணவு வழங்கி -

அதனால், நீ வறுமை அடைந்தாயில்லை. பேரின்பம் மிகுதியாகி முருகனை நினைத்து விம்மி விம்மி அழுகின்றாயில்லை... 

அன்பினால் முருகன் பேர் பாடி ஆடுகின்றாயில்லை..
இப்படியிருக்க நமக்கு ஏது அடைக்கலம் ?..
-: தஞ்சையம்பதி :-

முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை...

இந்த வரிகளினூடாக நாயன்மார்கள் பலர் நினைவுக்கு வருகின்றனர்..
-::-
    
முருகா சரணம்
சிவாய நம
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..