நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
திரு அருணை
(அண்ணாமலை)
அகத்துறையில்
அமையப்பெற்றது
தனனத் தனதானன தனனத் தனதானன
தனனத் தனதானன ... தனதான
இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரும்
இறுதிச் சிறுகால்வரு ... மதனாலே
இயலைத் தருகானக முயலைத் தருமேனியில்
எரியைத் தருமாமதி ... நிலவாலே
தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
தொலையத் தனிவீசிய ... கடலாலே
துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
துவளத் தகுமோதுயர் ... தொலையாதோ..
வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
மடியச் சுடஏவிய ... வடிவேலா
மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
மகிழப் புனமேவிய ... மயில்வீரா
அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வயல்
அருணைத் திருவீதியி ... லுறைவோனே
அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
அமரர்க் கரசாகிய ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
முருகா முருகா
**


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..