நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி முதல் நாள்
சனிக்கிழமை
மாசி மக திருவிழாவின் போது கும்பகோணத்தில் தீர்த்தவாரி தரிசனம்..
முற்பகல் பத்து மணியளவில் பிடித்த மழை பத்தரை மணிக்கு ஓய்ந்தது..
மகாமகக் குளத்திற்கு வட கரையிலும் வடபுறச் சாலையிலும் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் குளத்தின் மேல் கரையில் இரு சக்கர வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன..
காவல் துறையினரின் பணி குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது..
கடும் மழையிலும் அவர்களது பணி தொடர்ந்தது நெஞ்சை நெகிழ்த்தியது..
பதினொன்றரை மணியளவில் பூஜைகள் தொடங்கி உச்சிப் பொழுதில் தீர்த்தவாரி நடைபெற்றது..
அன்பர்கள் சிவ கோஷங்களுடன் நீராடி மகிழ்ந்தனர்...
சற்றே தணிந்திருந்த மழை மீண்டும் பிடித்துக் கொண்டது..
காசி விஸ்வநாதர் கோயிலில் அடைக்கலம் ஆகி - ஒரு மணி நேரம் கழித்து - சந்நிதியை வலம் வந்து வணங்கிய பின் பேருந்து நிலையத்திற்குச் சென்று நல்லபடியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்..
தலைப் பாகையோடு போயிற்று என்ற கதையாக - கூட்ட நெரிசலில், தோள் பையில் இருந்த எழுநூறு ரூபாய் களவாடப் பட்டிருந்தது..
குடந்தைக் கீழ்க் கோட்டம்
ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோயில்
இறைவன் ஸ்ரீ நாகேஸ்வரன்
அம்பிகை ஸ்ரீ பிரஹந்நாயகி
ஏவியிடர்க் கடலிடைப்பட்டு இளைக்கின் றேனை
இப்பிறவி யறுத்து ஏற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்தும் உருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே.. 6/75/10
-: திருநாவுக்கரசர் :-
**
குடந்தை
ஸ்ரீ சார்ங்கபாணி தெப்பம்
காணொளி வழங்கியவர்
துரை மனோகரன்
கும்பகோணம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..