நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 30, 2025

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 16
ஞாயிற்றுக்கிழமை

திருவையாறு பூலோக கயிலாயம்  ஸ்ரீ அறம் வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகப் பெருவிழா  கடந்த திங்களன்று வெகு சிறப்பாக   நடைபெற்றது..

அதனை முன்னிட்டு மாலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்..

ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி, ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தனித்தனி விமானத்திலும் 

ஸ்ரீ ஸ்வாமி, ஸ்ரீ அம்பிகை  புஷ்ப பல்லக்கிலும் ஆக - மங்கல வாத்தியங்கள், சிவகண வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன்  மிக பிரமாண்டமாக நான்கு இராஜ வீதிகளிலும் வீதியுலா நடைபெற்றது.. 

நன்றி
தருமபுர ஆதீனத்தார்



















கந்தமர வுந்துபுகை
  யுந்தலில் விளக்கேர்
இந்திர னுணர்ந்துபணி
  யெந்தையிட மெங்கும்
சந்தமலி யுந்தரு
  மிடைந்தபொழில் சார
வந்தவளி நந்தணவு
  வண்திருவை யாறே.  2/32/2
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

6 கருத்துகள்:

  1. சிறப்பான படங்கள். படங்கள் மூலம் நல்ல தரிசனம் கிட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. ஐயாரப்பர் மண்டலாபிஷேக பெருவிழா தரிசித்தோம். அவனருளை வேண்டி நிற்கிறோம்.

    வீதி உலாக்கள், வாண வேடிக்கைகள் நன்றாக உள்ளன.

    ஓம் நமசிவாய.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு
  3. சம்பந்தர் தேவாரம் பாடி தரிசனம் செய்து கொண்டேன் இறைவனை.
    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..