நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 12, 2021

மார்கழி முத்துக்கள் 28

தமிழமுதம்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து..(398) 
***
அருளமுதம்

இன்று
சொல்லின் செல்வன்
ஸ்ரீ ஆஞ்சநேய ஜெயந்தி


ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 28


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் 
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் 
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே 
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்..
*
தித்திக்கும் திருப்பாசுரம்


இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்..(2320)
-: பேயாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம் 

திருத்தலம்
உவரி


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றூணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையவது நம சிவாயவே..(4/11)
-: ஸ்ரீ திருநாவுக்கரசர் :- 

இறைவன்
ஸ்ரீ ஸ்வயம்புலிங்க ஸ்வாமி 
அம்பிகை
ஸ்ரீ மனோன்மணி அம்பிகை

தல விருட்சம் -  கடம்பங்கொடி
தீர்த்தம் -  அக்னி தீர்த்தம், நாழிக் கிணறு

திருக்கோயிலின் நுழைவு வாயில்
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே..

-: ஸ்ரீ திருநாவுக்கரசர் :- 

உவரி - கடற்கரையின் 
அருகாக விளங்கும் திருக்கோயில்..

ஏக நாயகனாக எம்பெருமான்
மூலஸ்தானம் மட்டுமே..

அம்பிகை சூட்சும ரூபமாக
கருவறையில் உறைவதாக ஐதீகம்..

எனவே
திருக்கோயிலில்
அம்பிகை சந்நிதி கிடையாது..


தவிரவும்
விநாயகர் முருகன் 
தனிச் சந்நிதிகளும் இல்லை...

ஆயினும், 
உற்சவத் திருமேனிகள் உள்ளன..

மூலஸ்தான வாசலுக்கு அருகில்
விநாயகப் பிரதிஷ்டை மட்டுமே..


ஸ்ரீ பத்ரகாளி - 
பிரம்ம சக்தி எனும் திருப்பெயருடன்
தனிக்கோயிலில் உறைகின்றாள்..

பரிவார மூர்த்திகளாக 
ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ மாடசாமி மற்றும்
ஸ்ரீ இசக்கியம்மன் ஆகியோர் 
தனி மண்டபத்தில் விளங்குகின்றனர்..

ஸ்ரீ முன்னோடியார் ஸ்வாமி
பரிவாரங்களுடன் திகழ்கின்றார்..

ஸ்ரீ வன்னியடி சாஸ்தா திருக்கோயில்
திருக்கோயிலின்
தென்புறம் பனஞ்சோலைக்குள்
கன்னிமூலை கணபதியும்
ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத
ஸ்ரீ வன்னியடி சாஸ்தாவும்
தனிக்கோயில் கொண்டுள்ளனர்..



தைப்பூசத் தேரோட்டம்
வைகாசி விசாகம், ஆவணிக் கொடை,
கந்த சஷ்டி, தைப் பூசம், சிவராத்திரி
முதலானவை சிறப்பான 
உற்சவ நாட்கள்..

உவரி - எங்களது 
குலதெய்வத் திருக்கோயிலாகும் 
*
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம் 

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்

பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே..5/100
*

முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் 
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தெண்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்க்கட் கின்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய்...
-: மாணிக்கவாசகர் :-
*
ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 

*** 

4 கருத்துகள்:

  1. "தஞ்சையம்பதியில் மார்கழி முத்துகள் கொட்டிக் கிடப்பதென்ன...!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..
      எல்லாம் நல்ல உள்ளங்களது உற்சாகமும் இறைவனின் நல்லருளும் தான்!..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. உவரி என்றதும் கோமதி அரசு நினைவில் வருகிறார். உவரி வேலு என்பவர் எழுதின புத்தகமும் நினைவில் வருகிறது. கோயில் பற்றி எல்லாம் இப்போதே அறிந்து கொண்டேன். நன்றி தகவல்களுக்கு. அருமையான தரிசனங்களுடன் கூடிய பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் தனபாலன்..
    மகிழ்ச்சி.. நன்றி..

    ஓம் சிவாய நம..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..