நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 06, 2021

மார்கழி முத்துக்கள் 22

 தமிழமுதம்


எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து..(125) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 22



அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான 
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் 
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ 
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் 
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்..
  *
தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ ஆமருவியப்பன் - தேரழுந்தூர்
அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்
அமுதன்று கொண்டுகந்தான் என்றும் - அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தியே நவின்று..(2266)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திருஅண்ணாமலை


இறைவன்
ஸ்ரீ அண்ணாமலையார்  
அம்பிகை
ஸ்ரீ உண்ணாமுலையாள்


தல விருட்சம் - மகிழ மரம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்

பஞ்ச பூதங்களுள் 
அக்னிக்குரிய திருத்தலம்..


அண்ணாமலையை
மனதார நினைத்தாலே முக்தி
என்று ஆன்றோர் வகுத்துள்ளனர்..


வழி மாறிச் சென்ற அருணகிரி 
முருகப் பெருமானின் கருணையினால்
மீண்டெழுந்த தலம் இதுவே..

கார்த்திகை மகாதீபம்
மாணிக்கவாசகப் பெருமான்
அண்ணாமலை தரிசனத்தின் போது தான் 
திருவெம்பாவையை அருளினார்..
*
ஸ்ரீ காலபைரவர் - அண்ணாமலை
ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும் விரிசாரல்
ஆலிம்மணி தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே..(1/120)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

உருவமும் உயிரும் ஆகிஓதிய உலகுக்கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றஎம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய் அண்டர்கோவே
மருவிநின் பாதம் அல்லால் மற்றொரு மாடிலேனே..(4/63)
***
ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்- அண்ணாமலை
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்..
-: மாணிக்கவாசகர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

5 கருத்துகள்:

  1. தேரழுந்தூர் வழியாவே போவோம். கோயில் போனதில்லை. அண்ணாமலையாரையும் ஒரே முறை தான் தரிசனம் செய்தோம். மீண்டும் போக வாய்க்கவில்லை. நல்ல தரிசனங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    அழகான படங்களுடன் நல்லதோர் பதிவு.
    பாடல்கள் அருமை. தேனிலே தோய்த்த பலாச்சுளைகளாய் இனிக்கின்றன. தேரழந்தூர் ஸ்ரீஆமருவியப்பனை தரிசித்து கொண்டேன். இங்கெல்லாம் செல்லாவிடினும் தங்கள் பதிவின் மூலம் அருமையான தரிசனங்கள் கிடைக்கின்றன.

    திருவண்ணாமலை ஒரு தடவை சென்றுள்ளேன். இங்கேயும் அண்ணாமலையாரையும், உண்ணாமுலையாள் அம்பிகையையும் பக்தியுடன் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது வருவதற்குத்தான் தாமதமாகிறது. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..