நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 09, 2021

மார்கழி முத்துக்கள் 25

 தமிழமுதம்

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே 
நாவினால் சுட்ட வடு.. (129) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 25


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த 

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை 
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி 
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்... 

தித்திக்கும் திருப்பாசுரம் 


கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்து
உண்டது உலகேழும் உள்ளொடுங்க - கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவிஎன் நெஞ்சம்
இடமாகக் கொண்ட இறை..(2279)
-: பூதத்தாழ்வார் :-

சிவ தரிசனம் 

திருத்தலம்
திருக்காளத்தி


இறைவன்
ஸ்ரீ காளத்தி நாதர்


அம்பிகை
ஸ்ரீ ஞானப்பூங்கோதையாள் 

தல விருட்சம் - மகிழம்
தீர்த்தம் - ஸ்வர்ணமுகி ஆறு

பஞ்ச பூதத் தலங்களுள்
வாயுவின் பகுப்பு..


யானையும் நாகமும் சிலந்தியும்
வழிபாடு செய்த திருத்தலம்


இங்குதான்
வேடுவராகிய திண்ணப்பர்
நாளாறில் கண்ணிடந்து அப்பி
கண்ணப்ப நாயனாராகினார்..
*
ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி என்மனத்து உள்ளவே..(3/36)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


நாரணன் காண் நான்முகன்காண் நால்வேதன் காண்
ஞானப் பெருங் கடற்கோர் நாவாயன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்
புரிசடை மேற்புனலேற்ற புனிதன் தான்காண்
சாரணன் காண்சந்திரன்காண் கதிரோன் தான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க்கெல்லாங்
காரணன்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காணவன் என்கண்ணு ளானே..(6/8)

ஸ்ரீ சுந்தரர் அருளிய 
திருப்பாட்டு

இமையோர் நாயகனே இறைவாஎன் இடர்த்துணையே
கமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள்
அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே..(7/26)  
*

  
கையார் வளைசிலம்பக் காதர் குழையாட
மையார் குழல்புரளத் தேன்பாய் வண்டொலிப்பச்
செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை
ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்...
-: மாணிக்கவாசகர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

  1. பதிவை ரசித்தேன்.  அமுதம் ருசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அருமையான கண்ணன் படங்கள். காளத்தி நாதன் தரிசனமும் கிடைத்தது. 4,5 முறை போயிருக்கோம். கோதை நாச்சியார் சொல்லி இருப்பதைப் போல் அனைவரின் வருத்தமும் நீங்கி மகிழ்ச்சி பெருகவும் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      திருக்காளத்திக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன்..
      அனைவரது வாழ்விலும் நலம் பெருகிட வேண்டிக் கொள்வோம்..

      மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய தமிழமுதம் நன்றாக உள்ளது. மார்கழி பாடல்கள், தேவாரம் அனைத்தும் அருமை. கண்ணனின் தரிசனங்கள் மனதை மகிழ்விக்கின்றன. காளத்தியப்பரின் தரிசனமும், அம்பிகை ஸ்ரீ ஞானப் பூங்கோதையாள் தரிசனமும் கண்டு கொண்டேன். தெய்வீக படங்கள் அத்தனையும் சிறப்பாக உள்ளது.

    இந்த முத்துக்களை தினமும் கண்டு சந்தோஷம் அடையும் போது சில நாட்களில் மார்கழி முடிந்து விடுமே என்ற சிறு கவலையும் வருகிறது. நல்ல பதிவுகளை தந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      மார்கழி நிறைவடைந்தாலும் திருப்பாசுரங்களும் தேவாரத் திருமுறைகளும் என்றும் தென்றலாய் நம் நெஞ்சிலே தங்கியிருக்கும்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. காளத்தி நாதனின் தரிசனம் கிடைத்தது. நன்றி.

    மார்கழி சிறப்புப் பதிவுகள் ஒவ்வொன்றும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..