நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 07, 2021

மார்கழி முத்துக்கள் 23

 தமிழமுதம்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து..(126) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 23

நீ மட்டுமே வேண்டும் கிருஷ்ணா!..

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் 
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி 
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன் 
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த 
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்...
   *
தித்திக்கும் திருப்பாசுரம்


மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே - நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கைதொழுத பின்..(2271)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திரு ஏகம்பம் - காஞ்சிபுரம்


இறைவன்
ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்,  திரு ஏகம்பநாதன்  


அம்பிகை
ஸ்ரீ காமாக்ஷி, ஏலவார்குழலி 

தல விருட்சம் - மா
தீர்த்தம் - கம்பை


கம்பையாற்றங்கரையில்
அன்னை பராசக்தி
ஸ்ரீ காமாட்சியாய் எழுந்தருளி 
மணலால் லிங்கம் இயற்றி
சிவ வழிபாடு நிகழ்த்திய திருத்தலம்..


அம்பிகையின் திருமணத் திருத்தலம்..

பஞ்ச பூதத் தலங்களுள்
மண்ணின் பகுப்பு..
*

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை
இறையானை ஏர்கொள் கச்சித் திருஏகம்பத்
துறைவானை அல்லது உள்காதென துள்ளமே..(2/12) 

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை
பெண்ணோடு ஆணென்று பேசற்கு அரியவன்
வண்ணம் இல்லி வடிவு வேறாயவன்
கண்ணில் உண்மணி கச்சி ஏகம்பனே..(5/47)

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருப்பாட்டு

குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந் தொழிலானை
வண்டலம்பு மலர்க் கொன்றையி னானை
வாளரா மதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே..(7/61)
***


விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்... 
-: மாணிக்கவாசகர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

7 கருத்துகள்:

  1. நீ மட்டுமே வேண்டும் கண்ணா...  எங்களையும் காத்தருள்வாய் கண்ணா...

    பதிலளிநீக்கு
  2. காலையில் தரிசனம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    "நீ மட்டுமே வேண்டும் கண்ணா" என்று கேட்டபடிக்கு கண்ணன் பாண்டவர்களும் இருந்தான். நமக்கும் அவன் துணைதான் எப்போதும் வேண்டுமென பிரார்த்தித்தபடி இருக்கிறோம். நிச்சயமாக அது ஒன்றே போதும் நமக்கு.

    விஸ்வரூப தரிசனம் கண்டு கொண்டேன். கஞ்சி ஏகாம்பரேஸ்வரர், அன்னை ஸ்ரீ காமாட்சி தரிசனம் மனதிற்கு மகிழ்வை தந்தது. படங்கள், பாடல்கள் அனைத்தும் எப்போதும் போல் கண்களுக்கும் மனதிற்கும் ம(வி)ருந்து. இன்றைய பதிவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான தரிசனம். எல்லாம் வல்ல எம்பெருமானின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திட எனது ப்ரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு பகிர்வு. பாசுரங்கள், பதிகங்கள் ஆகியவற்றிற்கும் நல்ல தரிசனத்துக்கும் நன்றி. ஏகாம்பரேஸ்வரரைப் பல முறை பார்த்திருக்கேன். சென்னையில் இருந்தவரை நினைச்சால் காஞ்சிபுரம் போயிருக்கோம்.

    பதிலளிநீக்கு
  6. கடந்த ஆண்டுகூட குடும்பத்துடன் காஞ்சீபுரம் சென்று பெரும்பாலான அனைத்துக் கோயில்களையும் பார்த்தோம். வாழ்வில் ஒரு முறையேனும் சென்று, பார்த்து, லயிக்க வேண்டிய இடம் காஞ்சீபுரம். அப் பேறு எனக்கு மூன்று முறை கிடைத்ததற்கு இறையருளே காரணம் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..