நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 08, 2021

மார்கழி முத்துக்கள் 24

 தமிழமுதம்

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு..(127) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 24


அன்று இவ்வுலகம் அளந்தாய்
அடி போற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்
புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய்
குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்
கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே
ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம்
இரங்கேலோர் எம்பாவாய்..
*
தித்திக்கும் திருப்பாசுரம்


உற்று வணங்கித் தொழுமின் உலகேழும்
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம் - பற்றி
பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்
இருந்தானை ஏத்துமென் நெஞ்சு..(2275)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திருஆலங்காடு


இறைவன்
ஸ்ரீ வட ஆரண்யேஸ்வரர்  

அம்பிகை
ஸ்ரீ வண்டார்குழலி

தல விருட்சம் - ஆல்
தீர்த்தம் - முக்தி தீர்த்தம்


இத்தலத்தில்
 ஸ்ரீ காளிகாம்பிகையுடன் ஈசன்
ஊர்த்துவ தாண்டவம் நிகழ்த்தினன்.. 

ரத்ன சபை என்று
புகழப்படுகின்றது..


காரைக்கால் அம்மையார்
முக்தி நலம் எய்திய திருத்தலம்..

ஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதமும் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே..(1/45)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


கூடினார் உமைதன்னோடே குறிப்புடை வேடங்கொண்டு
சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாமவேதம் பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே..(4/68)

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருப்பாட்டு

வண்டார்குழலி உமைநங்கை பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும் பரமா பழைய னூர்மேய
அண்டா ஆலங்காடா உன்னடியார்க்கு அடியன் ஆவேனே..(7/52) 
***


செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான்
அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும்
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்...
-: மாணிக்கவாசகர் :-


ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

6 கருத்துகள்:

  1. இனிக்கும் பாசுரங்கள்...   

    பதிலளிநீக்கு
  2. திருவாலங்காடு தவிர பிற இடங்களுக்குச் சென்றுள்ளேன். இறையருள் துணை நிற்க அங்கு சென்று எம்பெருமானைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இது எந்தத் திருவாலங்காடு? மாயவரத்துக்கிட்டே இருப்பதெனில் நாங்க போகலை. அரக்கோணம் அருகே இருப்பதற்குப் போயிருக்கோம். நரசிம்ம தரிசனம் அருமை. கண்ணனின் திரிவிக்ரம அவதாரமும் அழகு. இவை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய தமிழமுதம் அருமை. உலகளந்த பெருமாள் திவ்ய தரிசனம் பெற்று மகிழ்ந்தேன்.

    காரைக்கால் அம்மையார்
    முக்தி நலம் எய்திய திருத்தலமாகிய திருவாலங்காடு ஈசனையும் பக்தியுடன் பணிந்து கொண்டேன். பாடல்களும் எப்போதும் போல் இனிக்கின்றன. இரு மூர்த்திகளையும் ஒரே நிலையில் இன்று கண்டுவக்க செய்தமைக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா.

    நலமே விளையட்டும். சிறப்பான பதிவு. தொடரட்டும் பாசுர அமுதம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..