நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 14, 2025

தரிசனம் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
 மாசி 30
வெள்ளிக்கிழமை

குடமூக்கு எனவும் குடந்தை எனவும்
வழங்கப்பட்ட கும்பகோணத்திற்கு
மாசி மக நாளில்
சென்றோம்..

குடந்தை நகருக்குள் நுழைந்ததுமே கடும் மழை..

முதல் நாள் பெய்த மழை நீர் தேங்கிக் கிடக்க - அதனுடன் அப்போதைய மழை நீரும் சேர்ந்து கொண்டது..

சாலையோர வடிகால்கள் அடைக்கப்பட்டு விட்டதால்  நீர் அழுக்காகி ஆங்காஙகே தேங்கி நின்றது சிறப்பு..

மழையோடு மழையாக எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..

எதிரே
ஸ்ரீ சார்ங்கபாணி ஆலய கோபுரம்


ஸ்ரீ சோமேஸ்வரர் கோயிலில்



















அடுத்த பதிவிலும்
படங்கள் தொடர்கின்றன..

குடந்தைக் காரோணம்
சோமேஸ்வரர் கோயில்

இறைவன் ஸ்ரீ சோமேஸ்வரர்
அம்பிகை ஸ்ரீ சோமசுந்தரி

வாரார் கொங்கை மாதோர் 
  பாக மாக வார்சடை
நீரார் கங்கை திங்கள் 
  சூடி நெற்றி யொற்றைக்கண்
கூரார் மழுவொன் றேந்தி 
  அந்தண் குழகன் குடமூக்கில்
காரார் கண்டத் தெண் தோள் 
  எந்தை காரோ ணத்தாரே.. 1/72/1
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. சிறப்பு.

    மழை உங்களை வரவேற்றிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. படங்களை ரசித்தேன். கும்பகோணம் எங்கள் சம்பந்தி ஊர்!

    பதிலளிநீக்கு
  3. படங்களின் வழியாக தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  4. மாசிமகமும் கும்பகோண தரிசனங்களும் சிறப்பு.
    கண்டு வணங்கினோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..