நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 03, 2025

திருக்குடமுழுக்கு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 21
 திங்கட்கிழமை


இன்று
திரு ஐயாற்றில்
திருக்குடமுழுக்கு

திருநாவுக்கரசர்
அருளிச்செய்த திருப்பதிகம்

நான்காம் திருமுறை
முப்பத்தெட்டாவது திருப்பதிகம்


கங்கையைச் சடையுள் வைத்தார் 
  கதிர்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் 
  திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் 
  மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே..  1  

பொடிதனைப் பூச வைத்தார் 
  பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார் 
  காலனைக் கால வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை 
  மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 2  

உடைதரு கீளும் வைத்தார் 
  உலகங்க ளனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார் 
  பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார் 
  வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 3  

தொண்டர்கள் தொழவும் வைத்தார் 
  தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார் 
  எமக்கென்று மின்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை 
  மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்கள் ஏத்தும் 
  ஐயன் ஐயாறனாரே.. 4  

வானவர் வணங்க வைத்தார் 
  வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் 
  காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார் 
  ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 5
  

சங்கணி குழையும் வைத்தார் 
  சாம்பல்மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார் 
  விரிபொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் 
  கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 6  

பத்தர்கட் கருளும் வைத்தார் 
  பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார் 
  சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் 
  முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 7  

ஏறுகந் தேற வைத்தார் 
  இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார் 
  நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார் 
  கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 8  

பூதங்கள் பலவும் வைத்தார் 
  பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் 
  கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் 
  பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 9
 
இரப்பவர்க் கீய வைத்தார் 
  ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங் 
  கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப் 
  படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.. 10
திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..