நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 02, 2025

யாகசாலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 20 
ஞாயிற்றுக்கிழமை

திரு ஐயாறு 
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரம்  
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய 
ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவினை முன்னிட்டு நாளும்
யாகசாலை பூஜைகள், பூர்ணாஹுதி, மகா தீபாராதனை , ஷோடச உபச்சாரம் , வேத திருமுறை பாராயணம் இவற்றுடன் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காட்சிகள்..

பதிவில் நான்காம் கால பூஜை தரிசனம்



















நெஞ்சார்ந்த நன்றி
சிவனடியார் திருக்கூட்டம் 
**

நோக்கரிய திருமேனி  உடையாய் நீயே
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாகம் ஆர்த்தாய் நீயே
அடியான் என் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ.  6/38/2 
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

6 கருத்துகள்:

  1. அருமை.  திரு ஐயாறப்பர் அருள்வேண்டி பணிகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்துப் படங்களும் அருமை.  அந்த அக்னியில் தெரிவது அக்னியின்மேல் ஆஞ்சநேயர் நின்று, நிமிர்ந்து சங்கு ஊதுவது போல எனக்கு தோற்றம் கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. நல்ல அட்வான்ஸாகவே அங்கு சென்று இடம்பிடித்து விட்டீர்கள் போல.  தனியாகவா, துணைவியாருடனா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்கோயிலுக்கு இரண்டாம் வெள்ளியன்று சென்றதோடு சரி..

      யாகசாலையைத் தரிசிக்கும் பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை.. படங்கள் ஆதீனச் செய்தியாளர்களால் இணையச் செய்தியில் வெளியிடப்பட்டவை..

      தங்கள் அன்பினுக்கு நன்றி.

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..