நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 11
ஞாயிற்றுக்கிழமை
இன்று பாதாம் பால்
கறந்த பாலாக இருப்பின் நல்லது..
தேவையானவை :
பசும்பால் 750 ml
பாதாம் பருப்பு 150 gr
முந்திரிப் பருப்பு 50 gr
வறுக்கப்பட்ட நிலக்கடலை 50 gr
பனங்கற்கண்டு 150 gr
குங்குமப்பூ ஒரு சிட்டிகை
சுத்தமான மஞ்சள் தூள் சிறிது
ஏலக்காய் 3
செய்முறை :
வறுபட்ட நிலக்கடலையின் தோலை நீக்கி விடவும்..
பாதாம் பருப்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து தோலுரித்து பாதாம் பருப்பு நிலக்கடலை
இரண்டையும் மிக்ஸியில் இட்டு பால் சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும். ஏலக்காயை இடித்து . முந்திரியை நெய்யில் வறுத்து நொறுக்கிக் கொள்ளவும்.
அரைத்த பாதாம் பாலை - பாத்திரம் ஒன்றில் ஊற்றி அதனுடன் ஏலக்காய் தூள் பனங்கற்கண்டு, குங்குமப்பூ, மஞ்சள் தூள் மீதியுள்ள பால் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து சற்றே கொதிக்க விட்டு சுண்டக் காய்ச்சி - நொறுக்கிய முந்திரியை அதில் தூவி - அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
நன்றாக ஆறியதும்
இதனை சில்லரில் சற்று நேரம் வைத்து
குளிரூட்டிய பின் பரிமாறவும். .
இரசாயன வண்ணமாகிய கேசரி பவுடர் வேண்டாம்..
நான்கு பேருக்கானது..
மிக மிக ஆரோக்கியமான பாதாம் பால்..
வேண்டுமெனில் பாலின் அளவை சற்று அதிகரித்துக் கொள்ளலாம்..
இது மிகவும் திடமானது..
வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அருந்துவது நல்லது..
நமது நலம்
நமது கையில்..
ஓம்
சிவாய நம ஓம்
**
சத்துள்ள பால். மிகவும் எளிதான, எளிமையான செய்முறை.
பதிலளிநீக்குதங்கள்
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
பனம் கற்கண்டு பாதாம் பால் சுவையாக இருக்கிறது.
பதிலளிநீக்குதங்கள்
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி..