நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 09, 2023

மலர் 25

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 25
   திங்கட்கிழமை.

தமிழமுதம்
ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை 
மாற்றுவா ராற்றலிற் பின்.. 225
*
திவ்யதேச தரிசனம்
திரு கச்சி
அத்திகிரி


ஸ்ரீ அத்தி வரதர்
ஸ்ரீ வரதராஜப்
 பெருமாள்
ஸ்ரீ பெருந்தேவி தாயார்

அனந்த சரஸ் நீருக்குள்
ஸ்ரீ அத்திவரதர்

வேகவதி நதி அனந்தசரஸ்

நின்ற திருக்கோலம்
மேற்கே திருமுக மண்டலம்.
புண்யகோடி விமானம்.

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
பூதத்தாழ்வார் பேயாழ்வார்
ஏழு பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 25


 ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.. 498
*
திவ்யதேசத் திருப்பாசுரம்

ஸ்ரீ வரதராஜப்பெருமாள்

என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன்  முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகேத்தும்
ஆழியான் அத்தியூரான்.. 1426
-: பூதத்தாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திருவாஞ்சியம்
காசிக்கு நிகரான தலம்


ஸ்ரீ வாஞ்சிநாத ஸ்வாமி
ஸ்ரீ மங்களநாயகி

சந்தனமரம்
குப்த கங்கை
யம தீர்த்தம்

யமதர்ம ராஜன் வழிபட்ட தலம்

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
**
தேவாரம்


மைகொள் கண்டர்எண் தோளர்
மலைமக ளுடனுறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை
குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலங் கழனி
கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்
பைதல் வெண்பிறை யோடு
பாம்புடன் வைப்பது பரிசே.. 7/76/5
-: சுந்தரர் :-
*
திருவாசகம்
திருஅம்மானை
 

இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவன்அவனி வந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச்
சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான்
பந்தம் பறியப் பரிமேற்கொண் டான்தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.. 8/8/3
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. அத்தி வரதர் அருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.  உடல்நிலை முற்றிலு சரியானதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுமையாகக் குணமடைய மூன்று மாதங்கள் ஆகுமாம்..

      அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..
      நலம் வாழ்க..

      நீக்கு
  2. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சிவாய நம..
      வாழ்க வளமுடன்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    மார்கழி பதிவு அருமை. இறையின் மேல் பாடல்கள் அனைத்தையும் படித்து மகிழ்ந்தேன். அத்திவரதரின் அழகு முகமும், அன்னையின் கனிவும், அன்பின் சிவனாரின் அருள் பார்வையும் கண்களையும் மனதையும் நிறைத்தது. மனமுருக தரிசித்து கொண்டேன். இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. இன்றைய மலர் அழகு....

    அண்ணா உங்களின் கால் வீக்கம் இப்ப பரவாயில்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீக்கம் குறைவதும் கூடுவதுமாக இருக்கின்றது.. முழுமையாகக் குணமடைய மூன்று மாதங்கள் ஆகுமாம்..

      அன்பின் வருகையும் நலம் விசாரிப்பும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. அகத்தி வரதர்,திருவாஞ்சியம் தலங்கள் இறைவணக்கம் செலுத்தினோம்.
    படங்களும் கண்குளிர கிடைத்தது.

    நீங்கள் நலமடைய வைத்தீஸ்வரனை வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் நலம் விசாரிப்பு வேண்டுதலும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. அத்திவரதர், திருவாஞ்சியம் இறைவனையும் தரிசனம் செய்து கொண்டேன். பாடல்கள் பகிர்வு அருமை. படித்து காலை பொழுதில் வணங்கி கொண்டேன்.
    கால் வீக்கம் குறைந்து வருவது மகிழ்ச்சி. இறைவன் அருளால் நல்லபடியாக முற்றிலும் குணமாகிவிடும். தைரியமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இறைவன் அருளால் நல்லபடியாக முற்றிலும் குணமாகிவிடும். தைரியமாக இருங்கள்.//

      அன்பின் வருகையும் ஆறுதல் மொழிகளும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..