நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 30, 2023

தை கிருத்திகை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 16 
 திங்கட்கிழமை
கார்த்திகை நன்னாள்..

தட்சிணாயண புண்ணிய காலத்தில் 
ஆடிக் கிருத்திகையும் 
உத்தராயண புண்ணிய காலத்தில் 
தை கிருத்திகையும் 
மிகச் சிறப்பானவை..

அந்த அளவில் இன்று 
தை கிருத்திகையை முன்னிட்டு 
இன்றைய பதிவில் 
ஸ்ரீ அருணகிரி நாதர் அருளிச் செய்த 
கந்தர் அலங்காரத்தின் 
சில பாடல்கள்..


தாவடி ஓட்டு மயிலிலும் தேவர் தலையிலும் என் 
பாவடி ஏட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே.. 15

பால் என்பதுமொழி பஞ்சென்பது பதம் பாவையற் கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக் 
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே.. 30


நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடிவந்த
கோள் என் செயுங் கொடுங் கூற்று என் செயுங் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமுந்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.. 38

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட் டழிந்தது இங்கு என்தலை மேல் அயன் கையெழுத்தே..40


ஆலுக்கு அணிகலம் வெண்தலை மாலை அகிலம் உண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணந் துழாய் மயில் ஏறும் ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே.. 62


விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுருகா எனும் நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலும் செங் கோடன் மயூரமுமே.. 70
-: கந்தர் அலங்காரம் :-

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
வீரவேல் முருகனுக்கு அரோகரா..
***

16 கருத்துகள்:

  1. கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு
      நன்றி ஸ்ரீராம்..

      லவாழ்க நலம்..

      நீக்கு
  2. கார்த்திகை பதிவு அருமை.
    கந்தர் அலங்காரம் பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  3. பெயரில்லா30 ஜனவரி, 2023 08:20

    மாவலிபால் மூவடி கேட்டு பெரிதாய் வளர்ந்த திருமாலின் மருகன்

    முருகனை நினையா மனம் மைக்தி அடைவது எங்கணம்?

    அனைவருக்கும் தெரிந்த நாளென் செயும் பாடல்

    அவன் கால்பட்டு பிரமன் என் தலையில் எழுதிய எழுத்தும் அழிந்தது

    திருமாலுக்கு அணிகலன் துளசி. வேலுக்கு அணிகலன் சூரன் என்றோரெல்லாம்

    நல்ல பாடல்களைப் பகிர்ந்து காலையில் சிந்திக்க வைத்து, பக்தியை வளர்க்கிறீர்கள்.

    நெல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழ்வார்கள் அருளியதற்கு இணையாக
      நாரணனைப் புகழ்ந்து
      தேவாரத்திலும் திருப்புகழிலும்
      அருளுரைகள் காணக் கிடைக்கின்றன..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு
      நன்றி நெல்லை..

      வாழ்க நலம்..

      நீக்கு
  4. சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

    வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி

    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்

    சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.

    -- 73 --

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      திருப்பாடல் பதிவுக்கும்
      கருத்துரைக்கும் நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  5. பெயரில்லா30 ஜனவரி, 2023 11:40

    நாளென் செய்யும் கந்தரலங்காரப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மாபெரும் சக்தி உன்னை சரணடைந்தாலே போதுமே என்று தான் என் பிரார்த்தனை இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உன்னை சரணடைந்தாலே போதுமே என்று தான் என் பிரார்த்தனை..//

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு
      நன்றி சகோ..

      வாழ்க நலம்..

      நீக்கு
  6. கந்தர் அலங்காரம் பாடல்கள் பாடி தை கிருத்திகை நாளில் வாங்கினோம்.

    பல நாட்களின் பின் பாடல்கள்பாடும்போது நினைவில் வந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கந்தர் அலங்காரம் பாடல்கள் பாடி தை கிருத்திகை நாளில் வாங்கினோம்..//

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு
      நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..