நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 28, 2022

பஞ்சபுராணம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
கார்த்திகை 12
  திங்கட்கிழமை
இரண்டாவது சோமவாரம்


சிவாலயங்களில்  
இரண்டாம் வாரத்தின் 
சங்காபிஷேகம்..

பஞ்சபுராணம்


தேவாரம்
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே..5/19
-: திருநாவுக்கரசர் :-

திருவாசகம்
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
-: மாணிக்கவாசகர் :-

திரு இசைப்பா
துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
தொடர்ந்திரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
நடம்புரி பரமர்தங் கோயில்
அந்தியின் மறைநான் காரணம் பொதிந்த
அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 9/8
-: கருவூரார் :-

திருப்பல்லாண்டு
சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.. 9/29
-: சேந்தனார் :-

பெரியபுராணம்
பேறினி யிதன்மேல் உண்டோ 
பிரான்திருக் கண்ணில் வந்த
ஊறுகண் டஞ்சித் தங்கண்  
இடந்தப்ப உதவுங் கையை
ஏறுயர்த் தவர் தங் கையால்
பிடித்துக்கொண் டென்வ லத்தின்
மாறிலாய் நிற்க வென்று  
மன்னுபே ரருள்பு ரிந்தார்..12/10
(கண்ணப்ப நாயனார் புராணம்)
-: சேக்கிழார் :-

திருப்புகழ்
மதியால்வித் தகனாகி மனதாலுத் ... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் ... தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ... பொருளோனே
கதியேசொற் பரவேளே கருவூரிற் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


கந்தபுராணம்
பன்னிரு கரத்தாய் போற்றி
பசும்பொன் மாமயிலாய் போற்றி
முன்னிய கருணை ஆறு
முகப்பரம் பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்காக்
கருணை வாரிதியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணுள்
இருக்குமா மணியே போற்றி"
-: கச்சியப்ப சிவாசாரியார் :-

திருச்சிற்றம்பலம்
***

19 கருத்துகள்:

  1. பஞ்சபுராணமும் வாசித்துப் பார்த்துக்கொண்டேன். காலை வேளையில் இனிமையான தரிசனம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தெரியுமோ/தெரியாதோ/நான் அறியேன் பராபரமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா ..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. என் கடன் பணி செய்து கிடப்பதே... முழுப் பாசுரத்தையும் இப்போதான் படிக்கிறேன்.

    துந்துபி குழல்யாழ் பாடலில் திருடியர்... ஏதோ தவறு எனத் தோன்றுகிறது. இணையத்திலும் தெளிவான பதவுரை கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதம் பிரிக்கப்
      படாத பழந்தழிழ் பாடல்களைப் பார்க்கும் போதே பயங்கரமாக இருக்கும்..

      பதம் பிரித்து விட்டால் ஞானசம்பந்தர் பதிகங்கள் சிலவற்றைப் பாடுவது சிரமம்.. சந்தத்தில் தடுமாற்றமாகும்.. திருப்புகழும் அப்படியே..

      இங்கே -

      தொடர்ந்து இருடியர் கணம் என்பதே பாடம்..

      ஆதீனத்தின் பதிப்புகளில் இருக்கும் பதிகப் பாடல்களை இயன்றவரை பதம் பிரித்தே தருகின்றேன்..

      இந்தப் பாடலில் எப்படியோ விட்டு விட்டது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி தனபாலன்..

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஜி..

      நீக்கு
  6. சோமவாரத்தில் பஞ்சபுராணம் பாடி வணங்கி கொண்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலமுடன்..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான படங்களின் வாயிலாக. இறைவன் உமாமகேஸ்வரரையும், எம்பெருமான் முருகரையும் தரிசித்து கொண்டேன். இன்று கார்த்திகை சோமவாரத்தில் தாங்கள் பகிர்ந்த பாடல்களைப் பாடி சிவபெருமானை பணிந்து வணங்கி கொண்டேன். அனைவரையும் இறைவன் தன் நல்லருளால் காத்திட வேண்டி மனமாற பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அனைவரையும் இறைவன் தன் நல்லருளால் காத்திட வேண்டி மனமாற பிரார்த்தித்துக் கொண்டேன்.//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஞாயிறு மதியம் படுத்தவன் திங்கள் மாலை வரை எழுந்திருக்கவில்லை.  இன்று சற்று தேவலாம்!  எனவே இன்றுதான் இந்தப் பதிவுக்கு வந்து வணங்க முடிகிறது.  இது போன்ற பாடல்களை டைப் செய்வது சற்றே கடினம்.  அதுவும் மொபைலிலேயே இத்தனையையும் செய்வது நிரம்ப கடினம்.  பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஞாயிறு மதியம் படுத்தவன் திங்கள் மாலை வரை எழுந்திருக்கவில்லை. இன்று சற்று தேவலாம்!..//

      மிகவும் வருத்தமாக இருக்கின்றது.. உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள்..

      பதிவில் பாடல்களை ஒழுங்கு படுத்துவது மிகவும் சிரமமே..

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
    2. என்ன ஆச்சு ஸ்ரீராம்? கவலையா இருக்கே? உடம்பைக் கவனித்துக் கொள்ளவும்.

      நீக்கு
    3. //உடம்பைக் கவனித்துக் கொள்ளவும்..//

      நானும் அதையே முன் வைக்கின்றேன்..

      நீக்கு
  9. பாடல்கள் பாடி வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..