நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 28, 2024

தரிசனம் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
கிழமை

தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் இன்றைய தரிசனம்..

 நன்றி கூகிள்



இக்கோயில் தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனால் கட்டப்பட்டது. 

நேபாள மன்னரால் தஞ்சை மன்னருக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்ட சாளக் கிராமக் கல்லினால் ஆன கோதண்ட ராமர் சிலை கருவறையில்.. 
சௌந்தர்ய விமானம்...

கூடவே, சீதாதேவி, லட்சுமணர், சுக்ரீவரோடு நின்ற கோலத்தில் .. 











ஜெயவீர ஆஞ்சநேயர் திருச்சுற்றின் வடபுறத்தில் தெற்கு முகமாகத் தனிச் சந்நிதியில் விளங்குகின்றார்..

புன்னை  மரம் தலவிருட்சம்..





இணையத்தில் திருக்கோயிலுக்கு மன்னர் செய்தளித்த தேர் எங்கேயோ போய் விட்டது.. 

இப்போது தேர்நிலை மட்டுமே... 


தேர்நிலையைக் காப்பாற்றுவதற்காக அங்கே ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் பிரதிஷ்டை செய்ய ப்பட்டுள்ளார்..

அனைவரும் தரிசிக்க வேண்டிய கோயில் புன்னை நல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்..

இக்கோயில் புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குப் பின் புறம் 250 மீ., தொலைவில் அமைந்துள்ளது..

ஸ்ரீ ராம ராம 
ஜெய ராம ராம

ஓம் ஹரி ஓம் 
***

1 கருத்து:

  1. அருமையான கோவில் பகிர்வு. சட்டென கும்பகோணம் இராமர் கோவில் பிரகாரம் போல் தோன்றியது

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..