நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 06, 2024

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 21
வெள்ளிக்கிழமை

தலம் 
குன்றுதோறாடல்


தனனந் தனன தந்த .தனதான
தனனந் தனன தந்த .. தனதான

அதிருங் கழல்ப ணிந்து ... னடியேனுன்
 அபயம் புகுவ தென்று ... நிலைகாண

இதயந் தனிலி ருந்து ... க்ருபையாகி
 இடர்சங் கைகள்க லங்க ... அருள்வாயே

எதிரங் கொருவ ரின்றி ... நடமாடும்
 இறைவன் தனது பங்கி ... லுமைபாலா

பதியெங் கிலுமி ருந்து ... விளையாடிப்
 பலகுன் றிலும மர்ந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
( நன்றி கௌமாரம்)


வீரக்கழல்கள் ஒலிக்கின்ற உனது 
திருவடிகளை வணங்கும்  
அடிமையாகிய நான்

நீயே அபயம் என்ற மெய் நிலையைக்  
காணுமாறு எனது இதயத்தில்
வீற்றிருந்து கருணை புரிந்து

துன்பங்களும்
சஞ்சலங்களும் கலங்கி 
ஒழிவதற்கு அருள்வாயாக..

 தனக்கு நிகர் என்று எவருமில்லாமல் 
ஆனந்தத் தாண்டவம் புரிகின்ற
சிவபெருமானுடைய

 இடது பாகத்தில் விளங்குகின்ற 
உமா தேவியின் புத்திரனே,

திருத்தலங்கள் பலவற்றிலும் 
இருந்து விளையாடி 

குன்றுகள் பலவற்றிலும் எழுந்து 
அருள் புரிகின்ற பெருமாளே..

முருகா முருகா
முருகா முருகா..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. முருகனை நானும் வணங்கி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் படித்து முருகப் பெருமானை வணங்கி பிரார்த்தித்துக் கொண்டேன்.
    முருகா சரணம்.
    முத்துக் குமரா சரணம் 🙏.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    அனைவருடைய துன்பங்களும் சஞ்சலங்களும் ஒழிய எல்லாம் வல்லவ முருகப்பெருமான் அருள்புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் வல்லவ முருகப்பெருமான் அருள் புரியட்டும்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்லட்

      நீக்கு
  4. 'குன்றுதோறாடல் " முருகா அனைவர் நலனையும் காக்க வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி. மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..