நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 11, 2024

நெல்லை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 26
புதன்கிழமை


திருநெல்வேலி..

தமிழகத்தின் புராதனமான நகரங்களுள் ஒன்று..  

பாண்டியர்களின்  ஆட்சியில் சிறப்புற்றிருந்த இந்நகரத்திற்காக வந்தேறிகள் தம்முள் அடித்துக் கொண்ட வரலாறுகளும் உள்ளன.. பின்னாட்களில் நாட்டில் சுதந்திர வேள்வியில் பங்கெடுத்துக் கொண்ட சீர்மிகு நகரம் ..

ஆவணி இரண்டாவது வாரம் வியாழக் கிழமை (29/8) 
காலைப் பொழுது..

நெல்லை ஜங்ஷனின் வாசலில் உள்ள கொடிமாடசாமி கோயிலில் வணங்கி விட்டு மாநகரின் மகுடமாக விளங்குகின்ற ஸ்ரீ காந்திமதி உடனுறை நெல்லையப்பர் திருக்கோயில் தரிசனம்..


திருக்கோயிலில் நந்தி மண்டபத்தைக் கடந்து படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது..

ஈசன் எம்பெருமானது சபைகள் ஐந்தினுள் நெல்லையப்பர் திருக்கோயில் தாமிர சபையாகும்..

29/8 அன்று திருவாதிரை ஆனதால் தாமிர சபையில் 
ஆனந்த நடராஜருக்கு
சிறப்பு வழிபாடுகள்... 

நடராஜ தரிசனம் செய்த பின்
எங்களுக்கும் பிரசாதங்கள் கிடைத்தன..

இரண்டாவது திருச்சுற்றில் தான் ஏழிசைத் தூண்கள் உள்ளன..

மூலஸ்தானத்தை அடுத்த சந்நிதியில் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள்..

நெல்லையப்பரும் காந்திமதி அம்மனும் தனித்தனி கோயில்களில் விளங்குகின்றனர்.. 

இரண்டு கோயில்களையும் இணைக்கின்ற அற்புதமான அழகிய மண்டபத்தில் வழக்கம் போல வெளிச்சம் குறைவு...  

பார்வைக் குறைபாட்டினால் அங்குள்ள சிற்பங்களின் அழகினை அவதானிக்க முடியவில்லை.. 

இருந்தாலும்,
வயதாகிப் போன நேரத்தில் உனக்கு  அழகின் ரசிப்பு எல்லாம் தேவையா?..  என்று உங்களில்  யாராவது கேட்கலாம்..

பேசாமல் நகர்ந்து விடுவோம்!..

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிந்தராஜப் பெருமாள் - என,
மகிழ்வான தரிசனம்..  

நந்தி மண்டபத்திலும் கோசாலையின் அருகிலும் எடுக்கப்பட்ட ஒரு சில காட்சிகள் இன்றைய பதிவில்..








நாகலிங்க மொக்குகள்



வெளிப்பிரகார கணபதி சந்நிதியின் சிகரத்தில்..


அக்குலாம் அரையினர் திரையுலாம்
  முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய
  சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு
  வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலி 
உறை செல்வர்தாமே..  3/92/7 
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. ரசிப்பதற்கு வயதெதற்கு?  எந்த வயதிலும் ரசிக்கலாம்.  படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்தாலும்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. நெல்லை சென்றதில்லை.  காந்திமதி அம்மன் ஆலயம் பெரிய ஆலயம் என்று கேள்விப்பட்டது முதல் சென்று தரிசிக்க ஆவல்.  விரைவில் சென்று வரவேண்டும்.  நீங்கள் வருடாவருடம் வெற்றிகரமாக சென்று வந்து விடுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. இங்கு கோவிந்தராஜர் சயனத்தில் இருப்பதே 1950களுக்குப் பிறகே கண்டுபிடிக்கப்பட்டது, பரமாச்சார்யார் வழிகாட்டினார் எனப் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இச்செய்தி புதியது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி நெல்லை
      நன்றி

      நீக்கு
  4. ஒரு முறை நெல்லை சென்றதுண்டு. சிறப்பான தரிசனம் கிடைத்தது. இப்போது உங்கள் பதிவு வழி மீண்டும் ஒரு முறை தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  5. நெல்லையப்பர் தரிசனம் கிடைத்தது.
    அழகிய சிலைகளின் படங்கள் கண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி.

      நீக்கு
  6. திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தை பாடி நெல்லையப்பரையும், காந்திமதி அம்மனையும் வணங்கி கொண்டேன்.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..