நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
முதல் சனிக்கிழமை
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும்இணைத் தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திரு வேங்கடம் அடை நெஞ்சமே.. 1020
எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே.. 1023
பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகும் இடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோரும் மா முகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே.. 1024
-: திருமங்கையாழ்வார் ;-
காணொளிக்கு நன்றி
ஓம் ஹரி ஓம்
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..