நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 16, 2024

நீர் மோர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 2   
ஞாயிற்றுக்கிழமை

இணையத்தில்

சில தினங்களுக்கு முன்பு 
 Indian Council of Medical Research (ICMR) National Institute of Nutrition (NIN)  வழங்கியுள்ளதாக ஒரு செய்தி
(Revised Dietary Guidelines)..

However, what the country would be shocked to know that the ICMR has advised the country to avoid consuming sugarcane juice. Yes, sugarcane juice is a beverage that the country loves to consume, but it could be risky to consume..


கருப்பஞ்சாற்றில் ஒவ்வொரு 100 மிலியிலும் 13 முதல் 15 grams வரை சர்க்கரைச் சத்து இருப்பதால் - குறைத்துக் கொள்ளும்படி அறிவுரை வழங்கியுள்ளனர்..

கரும்புச் சாறு  அருந்துவதன் மூலம், இதயம் மற்றும் நுரையீரல்கள் பலம் அடைகின்றன. வயிற்று புண்களையும் இது சரி செய்கின்றது என்றாலும் இன்றைய சூழலில் மனிதருக்கு அச்சம் ஊட்டுவதாகி விட்டது..

ICMR has suggested that sugarcane juice comprises 13 to 15 grams of sugar in every 100 milliliters. The sugarcane juice contains high sugar levels. Therefore, the ICMR has suggested that the consumption of sugar should be minimized.

மேலும் - 
sugary soft drinks வகைகளையும் packaged fruit juices, energy drinks, and drinks containing alcohol - வகைகளையும் தவிர்க்கும்படி சொல்லப்பட்டுள்ளது..




குறைத்துக் கொள்ள வேண்டியவை ;
Coffee, Tea and other Caffeinated drinks.. 

பரிந்துரைக்கப்பட்டிருப்பவை :
இளநீர்,மோர், எலுமிச்சை சாறு ஆகியன.. எல்லாவற்றுக்கும் மேலாக சுத்தமான குடிநீர்..


இருக்கிற இருப்புக்கு (இருப்பு எனில் கையிருப்பு அல்ல)
இளநீர் எல்லாம் கட்டுப்படி ஆகாது.. 

குரும்பையாய் இருப்பது நாற்பது ரூபாய்.. கொஞ்சம் வழுக்கையாய் இருந்தால் ஐம்பது என்ற அளவில் போய்க் கொண்டிருக்கின்றது எளநி.. எளநீய்!..

என்னை மாதிரி ஆட்களுக்கு நன்னாரி அல்லது வெட்டி வேர் ஊறிய பானைத் தண்ணீர் தான் சிறந்தது.




வீட்டில் தயாரிக்கப்பட்ட மோருடன் சுத்தமான நீர் அருந்தி வெயிலின் தாக்கத்தை எதிர் கொள்வோம்..

இயற்கையே வளம்
இயற்கையே நலம்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

13 கருத்துகள்:

  1. ஒரு நேரத்தில் எனக்கு மிகவும் பிடித்த பணம் கரும்ம்புச்சாறு.  பணிக்கு சைக்கிளில் செல்லும்போது வழியில் சுமார் மூன்று இடங்களில் கரும்புச்சாறு குடித்து விடுவேன்.  திரும்பும்போதும் அங்ஙனமே!!  சுமார் 25 நிமிட சைக்கிள் பயணம்!  அப்புறம் அது குடித்தால் பைல்ஸ் பிய்த்துக்கொள்ள அதனால் நிறுத்தினேன்.  அப்புறம் ஐஸ் போட்ட பணமும் ஒத்துக் கொள்ளாமல் போனதால் நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன.

    பதிலளிநீக்கு
  2. // ஐஸ் போட்ட பணமும் //

    பணமும் அல்ல, பானமும்!

    பதிலளிநீக்கு

  3. தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட்டில் இருக்கும்போது மதியம் ஒரு பெரிய சொம்புடன் கரும்புச்சாறு கடைக்குப் பொய் வாங்கி வந்து வீட்டில் உள்ளவர் அருந்துவோம்.  "அண்ணே...  எலுமிச்சம்பழம்.." என்று நினைவூட்டுவேன்.  அவர் எப்படி இருந்தாலும் வைப்பார்.  நமக்கு அவசரம்.  அப்புறம் "அண்ணே இஞ்சி..."  அவர் சலிப்புடன் "நீ சொல்லலைன்னாலும் வைப்பேன்ப்பா...  வேண்டாம்னா மட்டும் சொல்லு... நிறுத்தறேன்" என்பார்!

    பதிலளிநீக்கு
  4. காஃபியை நிறுத்துவதா?  நோ வே!  நமக்கு பிடிச்சதை எல்லாம் கெடுதல் என்றால் எப்படி!

    பதிலளிநீக்கு
  5. இளநீர், மோர் சரி... எலுமிச்சை சாறும் சரி... சுத்தமான குடிநீருக்கு எங்கே போக? அந்நாளில் கிடைத்த நீரை பருகி வந்தோம். இப்போ சுத்தம் பார்க்க வேண்டி இருக்கு,

    பதிலளிநீக்கு
  6. நான் இப்பவும் வெந்நீர்தான் பருகுகிறேன்.  ஏப்ரல் 2020 ல் ஆரம்பித்த பழக்கம்!

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான தகவல்கள் ஜி நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் கூறியது போல தண்ணீரே சிறந்தது. இனிப்பு பானங்களை தவிர்ப்போம்.

    வெட்டிவேர் மோர் நன்னாரியுடன் துளசி,சீரகநீர் புதினா மல்லி நீரையும் கோடை வெப்பத்துக்கு ,அருந்துவோம்.

    பதிலளிநீக்கு
  9. பெங்களூரில் எங்கு பார்த்தாலும் கருப்பஞ்சாறு தரும் கடைகள் (தமிழகத்துடன் ஒப்பிடவேண்டாம். உணவுச் சுத்தம் கர்நாடகாவில் பல மடங்கு அதிகம். சாப்பிடுபவர்களே நேரடியாக கிச்சனைப் பார்க்கலாம். ஷுகர்கேன் ஜூஸ் கடைகளும் அப்படித்தான். தமிழகத்தைப்போல ஈ மொய்த்துக்கொண்டு சுகாதாரமற்று தயாரிக்கப்படுவதில்லை. கரும்பை வைக்க குளிர்பதனப் பெட்டி, கையில் க்ளௌஸ், அழகிய மெஷின் என்று மிகச் சுத்தம்).

    இங்க 20 ரூபாய்க்கு 200-250 மிலி கிடைக்கும். இளநீர், சீசனில் 30-35 ரூபாய்க்கு நல்லதாகக் கிடைக்கும்.

    இருந்தாலும் நீர் பெருக்கிய நீர்மோர் போல வராது

    பதிலளிநீக்கு
  10. Packaged drinks, Sugar drinks like Fanta, Miranda etc. உடலுக்கு மிக மிகத் தீமையானது. ஆனால் யார் இதையெல்லாம் கேட்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நீர் மோரின் நன்மை குறித்த பதிவு அருமை. வெளிநாட்டு, உள்நாட்டு என ஏகப்பட்ட குளிர் பானங்களை விட நீர் மோர் உடலுக்கு மிகவும் நல்லது. நீர் மோர் மட்டுமல்ல.. இரவு மீந்து போன சாதத்தில் விட்ட நீர் கூட குளிர்ச்சியை தரும். அதில் கூட சிறிது மோர் கலந்து சாப்பிடலாம். ஆனால், இதுவெல்லாம் பிடித்தவர்களுக்குத்தான் எதுவுமே பிடிக்கும். பிடிக்காதவர்களுக்கு நம் உபதேசமும் பிடிக்காது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு.
    கோடை காலம் இயற்கை தந்த கொடைகள், இளநீர், நுங்கு, எலுமிச்சை.வெள்ளரிக்காய், வெள்ளிரி பழம்.
    மகன் ஊரிலும் நீர் மோர் கிடைக்கிறது.
    கரும்பு சாறு சூடு அளவோடு குடிக்கலாம்.

    நம் உடம்புக்கு ஒத்து கொள்வதை கண்டு பிடித்து பருகலாம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..