கருப்பட்டி..
பனை வழங்குகின்ற கொடைகளுள் சிகரம்..
பனையில் இருந்து பெறப்படும் பொருட்கள் பனை உத்திரம்,
ஓலை, ஓலைக் கூடைகள், ஓலைப் பாய், மட்டைகள், நார்
- பிற வகைகள்
சிறுவயதில் பனை ஓலைக் காற்றாடி, நுங்கு வண்டி இவற்றுடன் விளையாடித் திரியாதோர் எவரும் உளரோ!.
பனை ஓலை விசிறிகளே அன்றைக்குப் பிரதானம்..
தென்னையைப் போல மக்களுக்குப் பற்பல நன்மைகளை பனையும் தருகின்றது..
மருத்துவ குணம் மிகுந்தது கருப்பட்டி..
குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பட்டி நல்ல மாற்று.. மேலும் கருப்பட்டி ரத்த சோகையைப் போக்குகின்றது...
ரத்தத்தை சுத்திகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உடலுக்கு சுறுசுறுப்பை வலிமையைத் தருகின்றது.
கருப்பட்டி சருமநலம் பேணுகின்றது.. சருமம் பளபளப்பு அதிகரிக்க கருப்பட்டி உதவுகிறது.
உணவில் கருப்பட்டியை அடிக்கடி பயன்படுத்தி வரும்போது எலும்புகளும், நரம்புகளும் உறுதியாகின்றன..
வைட்டமின் B மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி, தேக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..
சீரகத்தை வறுத்து கருப்பட்டி
சுக்குப் பொடி சேர்த்து இடித்து
சிறிதளவு வாயில் போட்டுக் கொள்ள நல்ல பசி எடுக்கும். கருப்பட்டியுடன் ஓமத்தை இடித்துத் தூளாக்கிப் பயன்படுத்தினால்
வாயுத் தொல்லை நீங்கும்..
பூப்படைந்த பெண்களுக்கு , உளுந்தங்களி செய்யும்போது கருப்பட்டியைச் சேர்த்து செய்து கொடுப்பது பண்டைய வழக்கம்.. இதனால் இடுப்பு எலும்பு வலிமையாகின்றது..
கர்ப்பப்பைக்கும் நலம் கிடைக்கின்றது...
கருப்பட்டியுடன் சுக்கு, மிளகு சேர்ந்து இடித்து தேனில் குழைத்துக் கொடுக்க மகப்பேறடைந்த பெண்களுக்கு பால் நன்றாக சுரக்கும்..
வெள்ளைச் சீனிக்குப் பதிலாக இதனை எப்போதும் உபயோகிக்கலாம்..
பேராசை பிடித்தவர்களும் கல் நெஞ்சம் கொண்ட கலப்படக் காரர்களும் தற்போது கருப்பட்டியிலும் கை வைத்துள்ளனர்...
கவனமாக இருந்து கொள்ள வேண்டியது அவசியம்...
நம்மை நாமே காத்துக் கொள்வது
நமது கடமையும் கூட!..
பொதுவாக தானம் கொடுப்பதற்கு பல
பொருட்களும் உகந்தவை..
 |
| நன்றி விக்கி |
அவற்றுள் ஒன்று பனை ஓலை விசிறி..
இங்கே கீழவாசல் பகுதியில் தெரு ஒன்றிற்குப் பெயர் விசிறிக்காரத் தெரு..
இந்த வருடம் குலதெய்வக் கோயிலாகிய உவரிக்குச் சென்ற போது வழியில் உடன்குடியில் கருப்பட்டி வாங்குவதற்கு இயலவில்லை...
நெல்லை சந்திப்பு -
கூட்டுறவு விற்பனை நிலையத்தில் கருப்பட்டியும் பனங்கிழங்கு மாவும் வாங்கி வந்தோம்..
நன்றாகத் தான் இருக்கின்றன..
பனையைச் சார்ந்த பல பொருட்கள் தற்சார்பு வாழ்க்கை வாழ விரும்புவோர்க்கு உகந்தவை...
இயற்கையை நாம் வாழ வைப்போம்..
இயற்கை நம்மை வாழ வைக்கும்..