நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
வியாழக்கிழமை
இன்று
சுவாமிமலை திருப்புகழ்
தான தனதன தான தனதன
தான தனதன ... தனதான
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய .. குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு ... மருகோனே
காலன் எனையணு காம லுனதிரு
காலில் வழிபட ... அருள்வாயே..
ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு .. சிறைமீளா
ஆடு மயிலினி லேறி அமரர்கள்
சூழ வரவரு ... மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவு
சுவாமி மலைதனி ... லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
முருகா முருகா
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..