நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 08, 2026

கோயிலிது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
ஞாயிற்றுக்கிழமை


இன்று மாசி 24 (8/3) ஞாயிறு

இன்று முதல் 
பங்குனி 21 (4/4) வரை
இருபத்தெட்டு நாட்கள்
சமயபுரம் அன்னை 
உலக நன்மைக்காக
பச்சைப் பட்டினி 
மேற்கொள்கின்றாள்..

இந்நாட்களில்
அன்னைக்கு இளநீர், பானகம், மோர், துள்ளு மாவு இப்படியானவை மட்டுமே தினசரி நிவேத்தியம்..

அன்னைக்குப் புகழ்மாலை

கோயிலிது கோயிலிது
குலம் காக்கும் கோயிலிது
வாசலிது வாசலிது
வளம் தரும் வாசலிது

ஊர் கொண்ட நாயகியின்
ஓங்காரக் கோயிலிது
சீரங்கப்பெருமாளும்
சீர் கொணரும் வாசலிது..

கார் கொண்ட முகிலாக
அருள் பொங்கும் கோயிலிது
பேர் கொண்ட நலமாக
பிணி தீர்க்கும் வாசலிது..

காவிரியின் தீரத்திலே
கண்மலரும் கோயிலிது
கைகூப்பும் பேருக்கெல்லாம்
கைகொடுக்கும் வாசலிது

அன்றரக்கர் தமை வென்ற
அன்னையவள் கோயிலிது
நின்று தொழுவோர் தமக்கு
நிறை யளக்கும் வாசலிது..

தூங்காமணி விளக்கு
சுடர் ஓங்கும் கோயிலிது
தாங்காத துயர் மாற்றும்
தங்கத் திரு வாசலிது..

மண்ணளந்த மாதேவி
மங்கலத்துக் கோயிலிது
பொன்னளந்த புண்ணியத்தின்
பொற்பாத வாசலிது

கண் விளங்க ஆயிரமாய்
கரை காட்டும் கோயிலிது
பண்ணளந்த பசுந்தமிழால்
விண்ணளந்த வாசலிது..
**

இன்றைய நவீன உலகிற்கு 
இவளே
அமைதியைத் தரவல்லவள்..

 ஓம் 
சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..