நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
திங்கட்கிழமை
பூசணிக்காய்
தரையில் பச்சைப் பசேல் என, படர்ந்து தழைக்கின்ற கொடி வகைத் தாவரம் இது..
மஞ்சள் மற்றும் வெள்ளை என - நாடு முழுதும் கிடைக்கின்றது..
எனினும், தமிழகத்தின் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தின் செல்வங்களுள் ஒன்று..
ஒரு பூசணிக்காய் பலரது இல்லங்களின் சமையல் பிரச்னைகளைத்
தீர்க்கின்றது..
அத்துடன் நோய்க் குறைகளையும் தீர்க்கின்றது...
வெண்பூசணி சமஸ்கிருதத்தில் கூஷ்மாண்டம் எனப்படுகின்றது...
வெண்பூசணி கண் திருஷ்டியைக் கவர்ந்து தீர்க்கின்றது என்பது சமய நம்பிக்கை..
பூசணிக்காய் சத்து மிகுந்த காயாகும்..
பூசணிக்காய் -
கண், தோல் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது,
இதிலுள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன ...
பூசணிக்காயில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியன இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்து கின்றன..
பூசணியின் விதைகள் மெக்னீசியம், துத்தநாகம் (Zinc) மற்றும் இரும்புச்சத்து
போன்ற தாதுக்களின் இருப்பிடமாகும..
இவற்றால் உடலின் ஆரோக்கியமும், தூக்கமும் மேம்படுகின்றன..
ஊட்டச்சத்து விவரங்களுக்கு
நன்றி இணையம்
நீர்ச்சத்து மிகுந்த
பூசணிக்காய் சிலவகை பாரம்பரிய மருந்து களுக்கு ஒத்து வராது...
முறையான சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது..
வெண்பூசணியின் சாறு உடல் வெப்பத்தைத் தணிக்கின்றது..
பூசணிக்காய் கூட்டு,
பூசணிக்காய்
சாம்பார், மோர்க் குழம்பு, பூசணிக்காய் இனிப்பு என்பன தனித்துவமானவை..
பூசணிப் பூக்கள் நமது கலாசாரத்தின் சின்னமாகும்...
இந்த வீட்டில் - கல்யாணத்திற்குத் தயாராக பெண் ஒருத்தி இருக்கின்றாள் என்பதை குறிப்பால் உணர்த்துவது பூசணிப் பூ...
மார்கழியின் சிறப்புகளில் பூசணிப் பூவும் ஒன்று..
பக்குவமான மஞ்சள் பூசணிக் காயைக் கொண்டு அதை மேலும் பக்குவப்படுத்தி அந்தக் காலத்தில் ஏக தந்தி வீணை எனும் இசைக் கருவியைச் செய்தனர்..
அதனை - துந்தனா என்றனர் பாமரர்...
பூசணிக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது...
நலம் நமது கையில்
வாழ்க நலம்
***






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..