நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
புதன்கிழமை
மக்கள் திரள் கலைந்திருந்தது.. ஆயினும் சீரான அழகுடன்
மகாமகக் குளக்கரை..
மாசி மகத்தன்று மதியப் போதில் தீர்த்தவாரி வைபவம் முடிந்திருக்க நான் பிற்பகல் 3:45 மணியளவில் மகாமகக்குளத்தில் இறங்கி தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டு பரவசம் அடைந்தேன்..
நூற்றுக்கணக்கான மக்கள் நீராடிக் கொண்டு இருக்க என்னைப் போலவும் பற்பலர்...
குளத்திலிருந்து கரையேறி மேற்கு நோக்கி விளங்குகின்ற ஸ்ரீ அமிர்தவல்லி உடனாகிய அபிமுகேஸ்வரர் கோயிலில் சிவதரிசனம்.
ஒரு ஓரத்தில் செருப்பை விட்டு விட்டு திருக்குளத்தை வலம் வரத் தொடங்கினேன்...
கூட்டமாக இருந்தாலும் நெரிசல் இல்லை..
திரு உலா முடிந்த நிலயில் விஸ்வநாதர் அபிமுகேசர் தேர்களும் சப்பரங்களும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தன..
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணத்திற்காக
மேற்குப் படித்துறையில் பெண்கள் கூடியிருந்தனர்..
வழியில் ஸ்ரீ விசாலாட்சி சமேத விஸ்வநாதப் பெருமான் தரிசனம்..
எவ்வித இடையூறும் இன்றி திருவலத்தினை நிறைவு செய்தேன்..
மாலை ஆறு மணிக்கு மேல் திருக்குளத்தில் தீர்த்த ஆரத்தி...
மக்கள் மீண்டும் திரண்டு கொண்டிருந்தனர்....
தீர்த்த ஆரத்தியைத் தரிசிக்க ஆசை..
இருந்தாலும்
தொடர்ந்த நடையினால்
களைப்பு மேலிட்டது..
பேருந்து நிலைய நெரிசலை நினைந்தபடி ஸ்டேஷனுக்குச் சென்று ரயில் மூலம் இரவு 8:00 மணியளவில்
தஞ்சைக்குத் திரும்பினேன்...
இயன்ற அளவில் தங்களுக்காக காட்சிப்படுத்தியுள்ளேன்...
காணொளி
வழங்கியோர்
சித்தர் வழிபாட்டுக்குழு
அவர் தமக்கு நன்றி
ஓம் நம சிவாய
***

























கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..