நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி
வெள்ளிக்கிழமை
இன்று
உலக சிட்டுக்குருவி தினம்
சிட்டுக்குருவிகளை
அனைத்துக் கவிஞர்களும்
பாடி வைத்துள்ளனர்...
விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்தச்
சிட்டுக் குருவியைப் போல...
- என்பது மகாகவியின் வாக்கு...
சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திடக் கண்டேனே..
செவ்வானம் கடலினிலே
கலந்திடக் கண்டேனே...
என்றார் கவியரசு...
சிட்டுக் குருவிகள் இன்று நம்மிடையே பரவலாக இல்லை... காரணிகள் பற்பல.. கால சூழ்நிலை இது...
சிட்டுக் குருவிகளை நினைவு கூர்வோம்..
***
இன்று எமது திருமண நாள்...
ஆயுள் ஆரோக்கிய
நலங்களுக்கு இறைவன்
துணை இருப்பானாக...
நலம் வாழ்க..
***



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..