நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 17, 2025

நெய் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 4  
வியாழக்கிழமை


நெய்யில்லா 
உண்டி பாழ் என்பது ஔவையார் கூற்று. 

சித்தர்கள் வாக்கும் இதுவே.. 

பாலை நன்றாக காய்ச்சி -  ஆறியதும் அதில் சிறிதளவு தயிரைக் கலந்து மூடிவைத்தால்  எட்டு மணி நேரத்தில் தயிராக உரு மாறியிருக்கும்.

இந்த தயிரை மத்தால் கடைந்தால் மோர் என்றாகி மோரின் மேல் வெண்ணெய் தனியாக மிதக்கும்..

இதனை சேகரித்து வெண்கலப் பாத்திரத்திலோ மண் சட்டியிலோ இட்டு காய்ச்சி வெண்ணெய் உருகி வருகின்ற போது அதில் முருங்கைக்  கீரை இரண்டு இணுக்குகளைப்  போட்டால் வெண்ணெய் நறுமணத்துடன் - 
 நெய்யாகி விடும்.. 

இதுதான் சுத்தமான நெய்..

இதனை வடிகட்டி வைத்துக் கொண்டால்  பல மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்... இத்தகைய நெய்யில் தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.

பன்னெடுங்காலமாகவே சித்த ஆயுர்வேத மருத்துவங்களில் நெய்யின் பயன்பாடு  இருந்து வருகின்றது..

இப்படியின்றி செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நெய் தான் இன்று நாம் காணக் கூடியவை...

நாட்டுப் பசுக்கள் இல்லாத நிலையில் ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு நெய்... ஹைய்யா... ஹைய்யா... நெய்!... - என்று ஆடிப் பாடிக் கொண்டு இருக்கின்றனர்..

குவைத்தில் நான் வேலை செய்த போது உணவு வகைகளின் பாதுகாப்பு தொடர்பாக வருடத்திற்கு இரு முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்... 

அங்கே சொல்லப்பட்ட உணவு  பாதுகாப்பு விஷயங்களுக்கும் இங்கே நடப்பவற்றிற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை...

இருப்பினும் - 
பாலில் உள்ள புறக் கொழுப்புகள் என்ற பகுதி மிகுந்த கவனத்தைக் கொடுத்தது..

அது அப்படியே இங்கு நடந்தது என்றால்?...

தேவஸ்தானத்திற்கு கொடுக்கப்பட்ட நெய் கவனத்துக்கு வருகின்றதா!...

தேவஸ்தான நெய் விஷயம் எப்போதும் நமது நினைவில் இருக்க வேண்டும்...

முன்பொரு காலத்தில் தமிழர்கள் தமிழ் பேசி மகிழ்ந்திருந்த நாட்களில் அவ்வப்போது அவர்களது உரையாடலில் பொன் மொழிகள் பல கலந்து வரும்..  அவற்றுள் ஒன்றுதான் அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை... 


அதாவது பாலொடு கிடைக்கின்ற ஐந்தில் இரண்டு பொருட்கள் அவற்றின் சீர் குறைவதில்லை என்பதாம்...

கறந்த பால் அப்படியே இருந்தால் சில மணி நேரத்தில் கெட்டு விடும்..  காய்ச்சப்பட்ட பாலும் மறு நாள் கெட்டு விடும்..  உறையூற்றி வைத்தால் தயிராகி இரண்டு நாட்களுக்கு இருக்கும்.. தயிரைக் கடைந்து வெண்ணெய் மோர் என்று பிரித்து விட்டால் வெண்ணெய் ஒரு வாரத்துக்கும் மோர் சில நாட்களுக்கும் தாங்கும்.. வெண்ணெயை உருக்கி நெய்யாக ஆக்கி விட்டால் ஒரு வருடத்துக்கு மேல் வரும்..

ஆக நாமே  தயிரைக் கடைந்து எடுக்கின்ற மோரும் வெண்ணெயை உருக்கி எடுக்கின்ற நெய்யுமே ஈடு இணையற்றவை.. சிறப்புடையவை என்பது தெளிவு..

நலம் தேவை எனில் சிறிது சிரமப்படலாம்...

உரித்த வாழைப்பழம் மட்டுமே வேண்டும் எனில் உபத்திரவம் தான்..

நமது நலம் 
நமது கையில்..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

12 கருத்துகள்:

  1. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லே வரிக்கு விளக்கம் ஜோர்.  கடைசி வரி நச்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. நாங்கள் வீட்டில் ஒரு நாளும் தயிர் கடைந்து வெண்ணெய் எடுத்ததில்லை.  சிறுவயதில் 'தயிரா?  அப்படீன்னா?' என்கிற நிலைமை.  எல்லோருக்கும் அடுக்கு நீரில் சிறிது மோர் விட்டு அதுதான் சாதத்துக்கு!  அதனால் பழகவில்லை. 

    பாட்டி வீட்டில் இருந்திருக்கும்.  அவர் நான்கைந்து மாடுகள் பெரும்பண்ணையூரில் வைத்திருந்தார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேல் விவரங்களும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. புதிதாக காய்ச்சிய ஓரிரண்டு நாட்கள் நெய்யின் மேல் விருப்பம் இருக்கும். பின்னர் அந்த ஆசை போய்விடும். போகப்போக கருப்பாக கசண்டு தெரியும் நெய் மீது 'சுத்தமாக' விருப்பம் இருக்காது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவென்று தெரியவில்லையே..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  4. நெய் எனத் தலைப்பிருக்கே... இது வித்தியாசமாக இருக்கும் என எட்டிப் பார்த்தேன் உண்மையில் நெய் பற்றி எழுதியிருக்கிறீங்கள்.

    இப்போ நாங்களும் நெய் வாங்குகிறோம், நம்ப முடியவில்லை பல பிராண்டுகளில் கிடைக்குது. நான் கிருஸ்ணா பிராண்ட் தான் வாங்குகிறேன், அதுதான் இங்கு கொஞ்சம் ரீசனபிள் பிறைசில கிடைக்குது.

    ஊரில் நாங்களும் பாலில்தான் நெய் எடுப்போம் வாங்கியதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேல் விவரங்களும்
      கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி அதிரா

      நீக்கு
  5. அம்மா அவர்களுடன் இருந்தகாலம் வீட்டில் பசு இருந்தது நாங்களே மார்க்கத்தை நெய்தயாரிப்போம்....இப்போது எங்கே? காலம் மாறியதில் வீட்டு நெய் ??????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை உண்மை...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைக்கு நெய் பற்றிய விளக்கமும் அருமை. நன்றாக சொல்லியுள்ளீர்கள். படித்து கொண்டேன். நெய் உணவில் தினமும் ஒரு வேளையாவது சேர்த்துக் கொண்டால் உடல் நலத்திற்கு நன்மையை தரும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினமும் ஒரு வேளையாவது உணவில் நெய் சேர்த்துக் கொள்வது நல்லது

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..