நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 11
வியாழக்கிழமை
பஞ்ச பூதத் திருத்தலங்களின்
திருப்பாடல்கள்
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச் செய்தவை
மண்
திருக்கச்சி ஏகம்பம்
பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி எங்கும்
பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான் காண்
தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த
மருந்தவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண்
மலர்தூவி நினைந்தெழுவார் உள்ளம் நீங்கா
திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே.. 6/64/2
நீர்
திரு ஆனைக்கா
முற்றாத வெண் திங்கட் கண்ணி யானை
முந்நீர்நஞ் சுண்டு இமையோர்க் கமுதம் நல்கும்
உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை
ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்
பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் தன்னைப்
பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடினேனே..6/63/3
அக்னி
திருஅண்ணாமலை
பண்தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே அணியணா மலை யுளானே
தொண்டனேன் உன்னை யல்லால் சொல்லுமா சொல்லி லேனே.. 4/63/2
வாயு
திருக்காளத்தி
நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண்
சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் தான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாம்
காரணன்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன்காண் அவன் என்கண்ணு ளானே.. 6/8/3
ஆகாயம்
தில்லைத் திருச்சிற்றம்பலம்
கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாருந் தன்னொப்பார் இல்லா தானை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 6/1/2
திருச்சிற்றம்பலம்
நன்றி
பன்னிரு திருமுறை
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
தினந்தோறும் மலர்தூவி நினைந்தெழா விடினும் என் உள்ளமும் நீங்காதிரு என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குநானும் இப்படித் தான்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
ஐம்பூத தலங்களை பாமாலை பாடி வணங்கினோம்.
பதிலளிநீக்குஓம் சிவாய நமக.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி மாதேவி