நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 6
சனிக்கிழமை
கோடிமா தவங்கள் செய்து
குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தால்
எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ
நன்னெறி யாகு மன்றே. 4/61/9
திருநாவுக்கரசர்
நெஞ்சே.. பற்பல ஆண்டுகள் பற்பல வகையில் கடுந்தவம் செய்தும் நல்லொழுக்கம் இல்லாமல் குன்றிய மனத்தினராகிய அரக்கர்கள் அனைவரையும் சக்கரம் போன்ற கணைகளால் அழித்து ஒழித்த பின் தக்கதொரு இடத்தில் திருமாலவன் ஆகிய ஸ்ரீ ராமன் அன்பு கொண்டு அமைத்த இராமேச்சுரத்தைக் கண்டு வணங்கி வாழ்த்தி வழிபட்டு வாழ்வாயாக..
இதுவே உனக்கு நன்னெறியாகும்..
ஸ்ரீ ராமன் எய்தவை கணைகள் தான்... ஆயினும் அவற்றை சக்கரமாகக் கண்டு பாடுகின்றார் அப்பர் பெருமான்..
அப்பர் ஸ்வாமிகள் பதிகப் பலன் உரைக்கின்ற திருப்பதிகங்கள் இரண்டனுள் இராமேச்சுரத் திருப்பதிகம் ஒன்று..
வரைகளொத்தே உயர்ந்த
மணிமுடி அரக்கர் கோனை
விரையமுற் றற ஒடுக்கி
மீண்டுமால் செய்த கோயில்
திரைகள் முத்தால் வணங்குந்
திருஇராமேச்சு ரத்தை
உரைகள்பத் தாலு ரைப்பார்
உள்குவார் அன்பி னாலே.. 4/61/11
திருநாவுக்கரசர்
நன்றி
பன்னிரு திருமுறை
மற்றது
நம சிவாயத் திருப்பதிகம்..
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நம சிவாய பத்து
ஏத்தவல் லார்தமக்கு இடுக்கண் இல்லையே.. 4/11/11
**
ஸ்ரீ ராம ராம
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
கொன்றை சூடிய பெருமானை கூத்தாண்டவனை, ராமேஸ்வரத்தில் ராமலிங்கமாய் ஆண்டருளும் அம்மையப்பனை துதிப்போம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகைக்கு மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
ஓம் இராமேஸ்வராய நமக.
பதிலளிநீக்குஇராம ராம ராம்.
தங்கள் அன்பின்
நீக்குவருகைக்கு மகிழ்ச்சி..
நன்றி