நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 8
திங்கட்கிழமை
இன்று தேநீர் பெரும்பாலான குடும்பங்களில் தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது..
தேநீர் அருந்துவதில் பல்வேறு கருத்து கள் இருப்பினும் விருந்தினர்க்காக
வீட்டில் தேநீர் தயாரிப்பதும் உபசரிப்பதும் அன்பின் வெளிப்பாடு என்று ஆகி விட்டது..
வீட்டில் தேநீர் அருந்துவதை விட வெளியில் அருந்துவதையே வாழ்க்கை யாகக் கொண்டவர் பலர்..
அது கிடக்கட்டும்..
போகின்ற வழியெல்லாம் டீக்கடைகள்.. நூறு நூறு கடைகளிலும் நூறு விதமான ருசி..
ஒரே நிறுவனத்தின் தேயிலைத் தூள் கூட கடைக்குக் கடை வேறு வேறு சுவையில் - இது தாண்டா தேநீர்!.. - என்று..
தேநீருக்குப் பெரிய வரலாறே இருக்கின்றது.. இருந்தாலும் - ரயில் நிலைய நடைமேடைகளில்
விற்கப்படுகின்ற தேநீரைப் பற்றி சொல்லியாக வேண்டும்..
தமிழகத்து ரயில்வே சந்திப்புகளில் உணவின் தரம் எப்படியோ தெரியாது..
ஆனால் - அங்கே
தற்காலத்தில்
நடைமேடைகளில்
விற்கப்படுகின்ற தேநீர் தனித்துவமானது.. அதைப்பற்றி உயர்த்திப் பேசுவதற்கு ஏதும் இல்லை என்பதே பெரும் சிறப்பு..
சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை ஜங்ஷன் நான்காவது நடைமேடையில் வைத்து வடையும் டீயும் வாங்கிச் சாப்பிட்ட பிறகு இனியொரு முறை
ரயில்வே ஜங்ஷனில்
இப்படியான தவறு செய்வதில்லை - என்ற மன உறுதியுடன் இருக்கின்றேன்..
சரி..
நமக்காக நல்ல தேநீர் அதுவும் நறுமணத் தேநீர் தயாரிப்பது எப்படி?..
எல்லாருக்கும் தெரியும் என்றாலும் நமக்குப் பொழுது போக வேண்டுமே.. அதற்காகத் தான் இந்தப் பதிவு..
இதோ நறுமணத் தேநீருக்கான பொடி செய்முறைக் குறிப்பு :
சுக்கு 100 g
ஏலக்காய் 50 g
மிளகு 25 g
சுருள் பட்டை 25 g (Cassia)
கிராம்பு 25 g
பெருஞ்சீரகம் 25 g
புதினா இலைகள் 10
(சிறிய இலைகள் எனில் 15)
புதினா இலைகள் வெயிலில் சருகாகக் காய்ந்தால் மட்டுமே நல்லது..
அப்படி சருகாகக் காய்வதற்கு சூழல் இல்லை எனில் புதினாவை விட்டு விடலாம்..
ஆக, இதர பொருட்களை
வெயிலில் நன்றாக உலர வைத்து (மழைக் காலம் எனில் இளஞ்சூட்டில் ஒரு நிமிடம் வறுத்துக் கொள்வது நல்லது) மிக்ஸியில் மிருதுவாக அரைத்து உலர்ந்த கலனில் சேகரித்துக் கொள்ளவும்..
ஒரு லிட்டர் பாலில் ஐந்து குவளை தேநீர் உத்தமம்..
ஆறு குவளை தேநீர் என்பது உயர்தரம்..
இது பாலுடன் நீரைக் கலக்காமல் தேநீர் தயாரிப்பதற்கான கணக்கீடு..
டீக்கடையின் கை வரிசைக்கெல்லாம் வேறு வேறு கணக்குகள்...
ஒரு கோப்பைத் தேநீர் என்பது சுமார் 150 /180 மிலி .
பாலில் முதல் கொதி வந்ததும் (கோப்பை ஒன்றிற்கு என்ற கணக்கில்)
தரமான டீத் தூள் 2 கிராமும் மசாலாத் தூள் 2 கிராமும் தேவையான அளவு சீனியும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு அதிலிருந்து நறுமணம் பரவியதும் வடிகட்டி எடுத்தால் ஆரோக்கியமான சுவையான நறுமணத் தேநீர் தயார்...
இனிப்புக்காக சீனியைத் தேடாமல் பாரம்பர்ய சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துவது சாலச் சிறந்தது..
இது தான் நமது கைப்பக்குவம்..
இதில் - வேறு சில மூலிகைகளை வேறு வேறு வேலைகளுக்காகச் சேர்க்கின்ற வழிமுறையும் இருக்கின்றது..
அது மனதிற்கும் உடம்பிற்கும் நல்லதல்ல!..
**
நல்ல தேநீர் என்றென்றும
கிடைக்க வேண்டும்
முருகா முருகா
முருகா முருகா
***
காலை 5 1/4 மணிக்கு சுவையான தேநீர் குடித்தேன்!
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
இது போல் ஒரு முறை தயார் செய்து பார்க்கிறேன்
பதிலளிநீக்குசெய்து பார்த்து சுவைத்து மகி,ழுங்கள்
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்..
நல்ல குறிப்புகள், துரை அண்ணா. நணுமணத்துக்கான பொடிக்கான மசாலாக்களைக் குறித்துக் கொண்டுள்ளேன்.
பதிலளிநீக்குநம் வீட்டில் தேநீர் எப்போதாவதுதான்.
கீதா
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி சகோ
மசாலாத் தேநீர் செய்முறை சுவையாக இருக்கிறது.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி மாதேவி..