நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
புதன் கிழமை
சஷ்டி முதல் நாள்
ஆடும் பரி வேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.. 1
உதியா மரியா உணரா மறவா
விதி மால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா பதிகாவல சூர பயங்கரனே.. 18
கந்தரனுபூதி
சந்ததம் பந்தத் ... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ... திரியாதே
கந்தனென் றென்றுற் ... றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ... றிடுவேனோ..
தந்தியின் கொம்பைப் ... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
நன்றி கௌமாரம்
ஓம் சிவ சுப்ரமண்யாய
**


முருகனைக் கும்பிட்டு முற்றிய வினைகள் யாவையும் நீக்கப் பிரார்த்திக்கிறேன். முருகா.. முருகா...
பதிலளிநீக்குசில காலமாய் இருக்கும் என்னுடைய முக்கியமான மூன்று பிரார்த்தனைகளை முருகன் கண்டு கொள்ளவே இல்லை!
எல்லாம் முருகன் செயல்...
நீக்குமுருகா சரணம்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அருமை. கந்த சஷ்டியின் முதல் நாளாகிய பதிவை, பாடல்களை பார்த்துப் பாடி மகிழ்ந்தேன். முருகன் அன்போடு நம் அனைவரையும் காக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் வருகையும் அன்பின் பிரார்த்தனையும்
நீக்குமகிழ்ச்சி
நன்றியம்மா
முருகா சரணம்
சஷ்டி ஆரம்ப நாளில் "செந்திலங் கண்டிக் ... கதிர்வேலா....' எமது நாட்டு கண்டிக் கதிர்வேலனையும் நினைத்துப் பாடிய திருப்புகழ் கண்டு மகிழ்ந்தோம்.
பதிலளிநீக்குஓம் முருகா சரணம்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி
நன்றியம்மா
முருகா சரணம்